Thursday, September 04, 2008

கடவுளுக்கான வாய்ப்பாடு

வாரிச் சுருட்டிக்கொண்டு
காலையில் ஒரு கச்சேரி,

காலைக் காப்பி முடிக்கையில்,
சாலமன் பாப்பையா,

அரக்க பரக்க
மதிய உணவை முடித்தால்,
நமீதா வகையறா பேட்டி,

வாயைப் பிளந்து பார்க்க,
இந்தியத் தொலைக்காட்சிகளில்
முதல்முறையாக... என

ஓரிசாவில் சண்டைபோட்டுக் கொண்டாலும்,
எல்லா கடவுளர்க்கும்
ஒரே வாய்ப்பாடுதான், இங்கு..

செய்தி:
சர்வ சமய சமத்தும்
இந்தியாவில் இல்லையாம்..!