Wednesday, May 13, 2009

திருடர்கள் ஜாக்கிரதை

"டிக்.. டிக்.."

"யாரது?"

"திருடன்"

"என்ன வேணும்?"

"நகை வேணும்"

"என்ன நகை?"

"கலர் நகை"

"என்ன கலர்?"

"ம்ம்ம்ம்… செவப்பு கலர்…"

ஏழாம் வகுப்பு ஆ பிரிவில், மற்ற அரை டிராயர்களெல்லாம் அந்த செவப்பு கலரைத்தேடி ஓடிக்கொண்டிருக்க, எனக்குள் மட்டும் சில வினோதமான கேள்விகள் எழுந்தன..

உண்மையிலேயே திருடன் இந்த குணசேகரன் மாதிரிதான் குள்ளமாக வட்டமுகத்துடன், இருப்பானா? இதே மாதிரிதான் ஒவ்வொரு வீடாகச்சென்று தன் வருகையை பராக் சொல்வதுதான் அவன் வேலையா? இல்லையென்றால் அவன் எப்படி இருப்பான்? எங்கள் வீட்டுக்கு மட்டும் அவன் வருவதே இல்லையே ஏன்?

மேலும் படிக்க...

Tuesday, May 12, 2009

கவிதைகள் மறுவாழ்வு மையம்


நீ அலட்சியமாய் தூக்கியெறிந்த
காகிதக் கோப்பையிலிருந்து
மனமுடைந்த கவிதைகள் சில
குதித்தோடிப் போயின
தற்கொலைக்கு..
நான்தான் சமாதானம் செய்து
அழைத்துவந்திருக்கிறேன்
நீ வருவாய் என..

கைவிடப்பட்ட கவிதைகள்
சங்கம் ஒன்று அமைக்குமுன்
வந்துவிடேன் சீக்கிரம்..!