tag:blogger.com,1999:blog-278656492024-03-19T10:20:17.274+05:30வழிப்போக்கன்அனுபவம் புதுமை...Bee'morganhttp://www.blogger.com/profile/17499868778064830704noreply@blogger.comBlogger66125tag:blogger.com,1999:blog-27865649.post-20334054594391215432012-04-27T10:41:00.001+05:302012-04-27T10:42:11.153+05:30பொறிஉங்கள் வீட்டில் எலி இருக்கிறதா? எங்கள் வீட்டில் இருக்கிறது. அப்படித்தான் நான் நம்பிக்கொண்டிருக்கிறேன்.<br />
<br />
அவ்வப்போது கிடைத்துவரும் சாட்சிகளின் படி, அப்படித்தான் நம்பவேண்டியிருக்கிறது. இதெல்லாம் என்று தொடங்கியது என்று கூட இப்போது சரியாக நினைவில் இல்லை. ஆனால், நான் வரிந்து கட்டிக்கொண்டு களத்தில் இறங்கியது சரியாக 9 நாட்களுக்குமுன், காந்தி ஜெயந்தியன்று. வெள்ளைக்குல்லாவும் ரகுபதி ராகவ பாடாவிட்டாலும் கூட, வருடத்துக்கு ஒரு நாள் விடுமுறை தரும் ஒரே காரணத்துக்காக நான் காந்தியின் கட்சிதான். நான் ஒன்றும் அப்படியெல்லாம் அவரசப்பட்டு வன்முறையில் இறங்கும் ஆளெல்லாம் கிடையாது.
<br />
<br />
வாரத்தின் நட்ட நடுவே புதன்கிழமையன்று வந்ததால் யார்தான் காந்தியை வாழ்த்த மாட்டார்கள். அதோடு கூட மனைவியும் ஊரில் இல்லையென்று வெளியில் செல்வது என்று முடிவு செய்து அலமாரியைத் திறந்தபோதுதான் நிகழ்ந்தது அது. ஒரு வினோதமான துர்நாற்றம் கடைசி அடுக்கிலிருந்து வந்தது. குனிந்து பார்த்ததில், அதிகம் உபயோகிக்காத சில துணிகள் முன்வரிசையிலும், அதைவிட அதிகம் உபயோகிக்கப்படாதவை அதன்பின்னும் முறையே அடுக்கப்பட்டிருக்கும். முதல் அடுக்கை கலைத்த போதுதான் தெரியவந்தது. பரிசுப்பொருள்களை பெட்டியில் வைத்து கட்டும் போது அவை அலுங்காமல் இருக்க வைக்கப்படும் கந்தல் கோலத்தில் காட்சியளித்தன சில துணிகள். அவசரமாய் நிமிர்ந்து மேல்அடுக்கை கலைத்த போது, அதன் பின்னும் ஒரு அதிர்ச்சி.
<br />
<br />
அதற்கு முன்னரே கூட, லேசாக சுரண்டப்பட்ட தேங்காய் மூடிகள் அது இதுவென அங்கங்கு சில தடயங்களைக் கண்டிருந்த போதும், அப்போதெல்லாம் பெரிதாகப்படவில்லை எனக்கு. ஆனால், அன்று என் புத்தம்புதிய பீட்டர் இங்கிலாண்ட் சட்டையில் பாக்கெட் இருந்த இடத்திலிருந்து கோடு கோடாக ஒரு ஓட்டையைக் கண்ட போதுதான் எனக்குள் ஒட்டிக்கொண்டிருந்த கொஞ்ச நஞ்ச காந்திய வாதி ஓடிப்போயிக்கவேண்டும்.
<br />
<br />
அன்றிலிந்து, அந்த எலியை ஓழித்துக்கட்டுவது என்று ஒரே குறிக்கோளுடன் இயங்கிக்கொண்டிருக்கிறேன்.
நேற்றுதான் கோபாலிடமிருந்து எலிப்பொறியொன்று வாங்கிவந்து வைத்திருக்கிறேன். இன்று வீட்டுக்குப் போனதும் பார்க்கவேண்டும்.<br />
<br />
எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. சுகவாசி என்று நண்பர்கள் பொறாமைப்படும் அளவுக்கு நானிருந்தேன். அம்சமாய் மனைவி, வசதியான மாமனார், சொந்தமமாய் வீடு, கை நிறைய சம்பளம் … இதை விட மனிதனுக்கு வேறென்ன வேண்டும். எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது.
<br />
<br />
பிரசவத்திற்காக மனைவி ஊருக்குப் போன போதுதான் எல்லாம் தொடங்கியது. ஒரே வாரத்தில் வாழ்க்கை போரடிக்க ஆரம்பித்ததுவிட்டது. சுகமான கனவில் லயித்திருக்கையில் அடித்தொண்டையில் அலறும் அலாரம் அடித்த மாதிரி ஆகிவிட்டது.
என்னதான் ”எம்பெண்டாட்டி ஊருக்குப் போயிட்டா”என்று ரெண்டு நாட்கள் குதித்துக்கொண்டிருந்தாலும், மூன்றாம் நாளே கையொடிந்த மாதிரி ஆகிவிட்டது. ஒரு நாளில் எத்தனை காரியங்களுக்கு நான் அவளை சார்ந்திருந்திருக்கிறேன்.. அப்பப்பா அதிலிருந்து மீண்டு என்னை நானே பராமரித்துக்கொள்ள அடுத்து மூன்று நாட்கானது. அதற்குள் நான் ஓரளவுக்கு சுதாரித்துக்கொண்டேன். தினமும் வீட்டுக்குவந்தததும் ஏதாவது படம் பார்க்கத் தொடங்கினேன். அதுவும் ஓரிரு நாளில் போரடித்துவிட்டது.
<br />
<br />
என் வாழ்க்கை மட்டும் ஏன்தான் இப்படி போரடிக்கிறதோ?. என்னடா வாழ்க்கையிது.. ஒரு புதையல் இல்லை, பூதம் இல்லை.. கையில் ஒரு மந்திரக்குச்சியிருந்தால் அவாடா கடாவ்ராவாவது சொல்லிப்பழகலாம்.. குறைந்த பட்சம் ஒரு அற்புத விளக்காவது இருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும் என்றெல்லாம் யோசிககத் தொடங்கிவிட்டேன்.
<br />
<br />
இப்போது அதற்கெல்லாம் நேரமே இல்லாமல் ஆகிவிட்டது. ஒவ்வொரு நாள் அலுவலகத்திருந்து திரும்பிவரும் போதும் பொறி என்னவாகியிருக்கும், என்ற நினைப்போ ஆக்கிரமித்துக்கொள்கிறது. ஒவ்வொரு நாளும் வந்து பெட்டியைப் பார்ப்பதும் அது இல்லை என்றதும் அடு்த்த நாள் பொறியில் என்ன வைப்பது பொறியை எங்கு வைப்பது என்று யோசிப்பதுலுமே ஓடிக்கொண்டிருந்தது.
வீட்டுக்கு வந்தவுடன் அவசரமாய் அடுக்களைக்கு ஓடிப்போய் பொறியைப் பார்த்தேன். இன்னும் காலியாகத்தான் இருந்தது.
எனக்கு இப்போது நிஜமாகவே சந்தேகம் வரத்தொடங்கிவிட்டது.<br />
<br />
உண்மையிலேயே எங்கள் வீட்டில் எலி இருக்கிறதா இல்லை என் மனப்பிராந்தியா. தனியாக வீட்டில் இருப்பதே போதும். இனிமேல் டான்னி டார்கோ மாதிரியான சைக்கோ படங்கள் பார்ப்பதை ஒழித்துவிட வேண்டும். அதில் கூட எலி வராதே. முயல்தானே வரும்.
<br />
<br />
”இந்தாங்க சார்.. நீங்களும் உங்கள் எலிப்பொறியும்.. நானும் ஒரு வாரமா ஏதேதோ வைச்சுப்பாத்துட்டேன். எதுக்குமே வரலை.. இதுக்கு மேலயும் இந்த பொறியை நான் வைக்கறதா இல்லை”<br />
<br />
”சார். நான் எங்க வீட்ல இதே பொறியை வைச்சு நாலு எலி புடிச்சேன் சார்” கோபாலின் கண்ணில் பெருமிதம் மின்னியது.<br />
<br />
”இந்த பொறியை வைச்சு… . அதுவும் நாலு எலி.. எப்போ?”<br />
<br />
”போன வருசம்..”<br />
<br />
”அதான பாத்தேன்.. அது போன வருசம்.. இந்த வருசம் எலியெல்லாம் நல்ல வெவரமாயிடுச்சு போல..” அவரை குறைசொல்லியிருந்தால் கூட அவரின் தன்மான உணர்ச்சி இவ்வளவு சோதிக்கப்பட்டிருக்குமா என்று தெரியவில்லை.<br />
<br />
”நீங்க என்ன வைச்சிங்க?”<br />
<br />
”என்ன வைக்கலன்னு கேளுங்க சார்.. எங்க வீட்டு கிச்சன்ல இருக்கற ஐட்டத்துல அத்தனையிலயும் ஒரு சாம்பிள் இந்த பெட்டிக்குள்ள போயிருக்கு..”<br />
<br />
”இவ்ளோ வைச்சிங்களே.. ஒரு மசால் வடை வைச்சிங்களா? அது அதுக்குன்னு ஒரு நீக்கு போக்கு இருக்குல்லியா.. மணக்க மணக்க ஒரு மசால்வடை வாங்கி அதுல மட்டும் வைச்சுப் பாருங்க.. அது விஸ்வமித்திர எலியா இருந்தாகூட மசால்வடைகிட்ட தாக்குபுடிக்க முடியாது.”<br />
<br />
இவர் பேசுவதென்னமோ நன்றாகத்தான் இருக்கிறது.. ஆனால், நடக்குமா..?
<br />
நான் யோசித்துக்கொண்டிருக்கும் போதே, அவரே கடைக்குச் சென்று ஒரு வடையும் வாங்கி விட்டுக்கு வந்து வைத்துவிட்டும் போய்விட்டார்.
அதில் எலி மட்டும் மாட்டாவிட்டால் பொறியை என்னையே வைத்துக்கொள்ளும் படியும் சொல்லிவிட்டார். என்னே தமிழரின் தன்மான உணர்ச்சி.
<br />
<br />
இரவு படுக்கப் போகும் போது அடுக்களை முழுவதுமே அந்த மணம் நிரம்யிருந்தது. நாசிக்குள் நுழையும் போதே எச்சில் ஊறியது. அடடா, கொஞ்சம் யோசித்திருந்தால் இன்னொரு வடை கூடுதலாக வாங்யிருக்கலாம் என்றெழுந்த நப்பாசையை அடக்கிக்கொண்டு உறங்கச் சென்றுவிட்டேன்.
<br />
<br />
ஒரு பெரிய வெண்மணற்பரப்பில் நின்றுகொண்டிருக்கும் போதுதான் அது கண்ணில் பட்டது. தொலைவில் ஒரு மசால் வடை. அதன் மணம் நான் இருந்த இடம் வரை சுண்டி இழுத்துக்கொண்டிருந்தது. தன்னிச்சையாக தொலைவில் தெரிந்த வடைப்புள்ளியை நோக்கி நடக்கத்தொடங்கியிருந்தேன். முதலில் மிக பக்கமாகத் தோன்றிய தொலைவு நடக்க நடக்க வளர்ந்துகொண்டே போவது போல் பட்டது. அப்போதுதான் அந்த எலியைக் கவனித்தேன். அது மறுபுறமிருந்து வடையை நோக்கி வந்துகொண்டிருந்தது. நான் பார்த்துக்கொண்டிருக்கும் போதே மிக எளிதாக, மிக லாவகமாக வந்து அந்த வடையை தின்னத்தொடங்கிவிட்டது. ஆத்திரம் கொப்பளிக்க அதை நோக்கி ஓடினேன். முதலில் ஒரு புள்ளியாகத் தெரிந்த எலி அருகில் செல்லச் செல்ல எலியின் உருவத்திற்கு வளர்ந்தது. அத்தோடு நின்றிருக்கலாம். நான் மொத்தமாய் அருகில் சென்ற போதும் கூட அது வளர்வது நிற்கவில்லை. ஏறக்குறைய என் உயரத்திற்கு வளர்ந்த பின், அலட்சியமாக என் பக்கம் திரும்பி ”வடை வேண்டுமா?” என்ற போது,
திடுக்கிட்டு எழுந்துவிட்டேன். என்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ளவே சில நிமிடங்கள் ஆனது.
மெதுவாக அடுக்களைக்குச்சென்று எட்டிப்பார்த்த போதுதான், என் அத்தனை நாள் சந்தேகத்தை முடிவுக்குக் கொண்டு வந்த முதல் தரிசனம் நிகழ்ந்தது. சிலிண்டருக்கும் சுவருக்கும் இடையிலிருந்த இடுக்கிலிருந்து எட்டிப்பார்த்த அந்த எலி கண்மூடி திறப்பதற்குள் காணமல் போயிருந்தது. மசால் வடை அப்படியே இருந்தது.
<br />
<br />
பரவாயில்லை. குறைந்த பட்சம், என் சந்தேகம் உறுதிப்பட்டதே ஓரளவுக்கு திருப்தியளிக்க நிம்மதியாய் உறங்கிப்போனேன்.
ஆனால், அந்த நிம்மதி அடுத்த நாள் காலை நீடிக்கவில்லை. பொறிவைத்த இடத்தில் அப்படியே இருக்க உள்ளிருந்த மசால் வடை மட்டும் காணாமல் போயிருந்தது. கோபாலை சபித்தபடியே அருகில் சென்று பார்த்த போது, சுற்றி கொஞ்சம் எலிப்புளுக்கை மட்டும் என்னைப் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தது. இதற்கு மேலும் கோபாலையும் அவன் எலிப்பொறியையும் இந்த எலியையும் நான் நம்புவதாயில்லை.
ஒன்று நிஜமாகவே இது ஒரு outdated பொறியாக இருக்க வேண்டும். அல்லது அந்த எலி ராட்டடுயி ரெமி மாதிரி படு சமத்தாக இருக்கவேண்டும்.
<br />
“வடை போச்சே..“<br />
<br />
பைட் பைப்பர் மாதிரி ஏதாவது வாசிக்கத்தெரிந்தாலும் பரவாயில்லை. அதுவும் இல்லை.
இப்படி தினம் தினம் நீயா நானா விளையாடுவதற்குப்பதில் பேசாமல், நாலு ரூபாயில் விஷம் வாங்கி வைத்துவிடலாம் என்று விஷமத்தனமான ஒரு யோசனையும் வந்தது. ஆனால் அது வேறு விஷத்தை தின்றுவிட்டு வீட்டில் எங்காவது இடுக்கில் செத்துவிழுந்து நான்கு நான் கழித்துதான் நமக்கு தெரியவரும். அதனால் வேண்டாம் என்று சமாதானம் செய்துகொண்டேன். அதைவிட முக்கியமான காரணம், 12ம் வகுப்பு விலங்கியல் பாடத்திற்காக எலியின் உணவுமண்டலத்தை அறுவைசெய்து காட்டியதற்கே மயங்கி விழுந்து பள்ளியில் பிரபலமானவன் என்பதால், தேவையில்லாத விபரீதங்கள் வேண்டாம். பெட்டியே போதும்.. மாட்டியதும் தூரமாக எங்காவது கொண்டு சென்று விட்டுவிடலாம் என்றுதான் நினைத்திருந்தேன். இப்போது அதற்கும் வழியில்லை என்றே படுகிறது.<br />
<br />
ஆனால், அன்றிரவு நான் ஏன் அப்படிச்செய்தேன் என எனக்கே புதிராகத்தான் இருக்கிறது. ஆனாலும் செய்தேன்.
அந்த புராதண எலிப்பொறியின் இருபக்க கதவுகளையும் திறந்தே வைத்து உள்ளே சில தேங்காய் சில்லுகளையும் வைத்துவிட்டு உறங்கப்போனேன். என்ன எதிர்பார்த்து அப்படிச்செய்தேன் என்று என்னால் தெளிவாகச் சொல்லமுடியவில்லை. ஆனால், அடுத்த நாள் காலையில் கொஞ்சமும் மிச்சமில்லாமல் சில்லுகள் காணாமல் போயிருந்தன. வருகையின் அடையாளமாய் கொஞ்சம் எலிப்புளுக்கை. ஆனால், அன்று எனக்கு கோபம் இல்லை. ஏதோ தினசரி நடவடிக்கை மாதிரி பெட்டி இருந்த இடத்தை சுத்தம் செய்துவிட்டு அலுவலகம் சென்றுவிட்டேன். அன்றிரவும் கூட கொஞ்சம் பொட்டுக்கடலைகள் வைத்தேன். அடுத்த நாள் கொஞ்சம் வாழைப்பழம் என என் இரவு நடவடிக்கைகளின் ஒரு அங்கமாகிப்போனது.
<br />
<br />
இப்போது உங்களிடம் ஜீவகாருண்யம் அது இதென்று நான் புருடா விட்டுக்கொள்ளலாம். உங்களுக்கும் தெரியப்போவதில்லைதான். அனால், உண்மையில் அப்போது என் துணி அடுக்குகள் பாதுகாப்பாய் இருக்கக கண்டேன். அதுதான் என்னை தொடர்ந்து செய்யத் தூண்டியிருக்க வேண்டும்.
<br />
வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியதைப் போல் இருந்தது.
அதுவும் ரொம்ப நாள் தொடரவில்லை. திடீரென ஒரு நாள் காலை, பெட்டியில் வைத்தது வைத்த படியே இருந்தது. வந்து சென்றதற்கும் ஏதும் அடையாளம் இல்லை. அதற்கடுத்த நாளும் அப்படியே.
எப்படி வந்ததோ அப்படியே சொல்லாமல் ஒரு நாள் சென்றுவிட்டது.
<br />
<br />
ஒன்றும் கவலையில்லை. எப்போது வாழ்க்கை மீண்டும் போரடிக்கத் தொடங்கிவிட்டதாக நினைக்கிறேனோ அப்போது அது மீண்டும் வரக்கூடும்.Bee'morganhttp://www.blogger.com/profile/17499868778064830704noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-27865649.post-27691199722200997632011-07-10T23:22:00.003+05:302011-07-10T23:35:19.017+05:30மோகமுள்<blockquote> <p><span>பாண்டுவின் செல்வனே! சத்துவ குணத்தின் போக்கு ஒளிமயமாகவும் ரஜோ குணத்தின் போக்கு காரியத்தில் ஈடுபாடாகவும், தமோ குணத்தின் போக்கு மோகமாகவும் வெளிப்படும்போது அவைகளை அவ்விவேகி வெறுப்பதில்லை. வெளிப்படாதிருக்கும் போது இவைகளுக்காக ஆசைப்படுவதுமில்லை. இக்குணங்களிடம் விருப்பு வெறுப்பு இல்லாமல் இருப்பார். இக்குணங்ககளால் பாதிக்கப்பட்டாலும் இருப்பார்.மேலும் குணங்களே தம்மை வெளிப்படுத்திக் கொண்டும் செயல்படுத்திக் கொண்டும் இருப்பதை உணர்கிறார்.தம் சொரூபத்திலேயே நிலைத்திருக்கிறார்.தாமாக எந்தச் செயலிலும் ஈடுபட இயலாது என்பதை உணர்ந்து அமைதியாக வாழ்கிறார்.</span></p> <p><span>- கண்ணன் </span></p> </blockquote> <p><span style="font-family: 'Arial Unicode MS'; ">நீண்ட நாட்களாகவே வாசிக்க நினைத்திருந்த புதினம். வாசிக்கத்தொடங்கிய பிறகு, நான் நினைத்த மாதிரியெல்லாம் பக்கங்களை நாலுகால் பாய்ச்சலில் தாண்டிவிட முடியவில்லை. மிக நிதானமாக மிக மிக நிதானமாக ஏறக்குறைய சில மாதங்கள் கடந்து இன்று மாலைதான் படித்துமுடித்திருக்கிறேன். </span></p> <p><span class="Apple-style-span" style="font-family: 'Arial Unicode MS'; ">இப்போது என்ன நினைக்கிறேன் என்று என்னால் தெளிவாகச் சிந்திக்க முடியவில்லை. ஆனால், மிக நெருங்கிய நண்பனொருவனை இனி பல காலத்திற்கு சந்திக்க முடியாது என்று தெரிந்தே, இரயில்நிலையத்தில் வழியனுப்பிவிட்டு திரும்பி வருவது போல் உணர்கிறேன்.</span></p> <p><span class="Apple-style-span" style="font-family: 'Arial Unicode MS'; ">கதையைப் பற்றி நான் எதுவுமே சொல்லப்போவதில்லை. இப்படைப்பிற்கு, ஏன் எந்தவொரு நல்ல படைப்புமே கதை என்கிற கட்டத்தை கடந்து ஒரு அனுபவமாக பரிணமித்துக்கொள்கிறது. அந்த அனுபவம் படிக்கும் ஒவ்வொருவருக்கும் இடையே வேறுபட்டாலும், அது தனித்துவமான ஒரு அனுபவம்தான். அதை அனுபவித்துக்கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு. பதிவின் எழுத்து வசதிக்காக இங்கு கதையென்றே கொள்வோம்.</span></p> <p><span class="Apple-style-span" style="font-family: 'Arial Unicode MS'; ">கதையின் களன் புழங்கும் பகுதி, கும்பகோணமும் பாபநாசமும் இரண்டாம் பாதியில் சென்னை. ஆனையடியும் கும்பேச்வரன் கோவிலும் பாபநாசமுமும் குடமுருட்டி ஆறும் நான் பார்த்துப் பழகிய இடங்கள் என்பதாலோ என்னவோ மனதுக்கு மிக நெருக்கமாக உணர்ந்தேன். அதிலும் காட்சிகளை அதன் ஒலிக்குறிப்புகளுடன் வர்ணிப்பதில் தி.ஜா தி.ஜாதான். குடமுருட்டி ஆற்றின் இரவில் பாபுவுக்கு வைத்தி மந்திரம் சொல்லும் அந்த காட்சி ஒரு சோறு. </span></p> <p><span style="font-family: 'Arial Unicode MS'; ">வார்த்தைகளில் இதெல்லாம் சாத்தியமா? இசையை வார்த்தைகளில் வடிக்கமுடியாது.. ஆனால், இசையென்னும் அனுபவத்தை வார்த்தைகளில் கொண்டுவந்தால் இப்படித்தான் இருக்குமோ? இருக்கக்கூடும். இசை மட்டுமல்ல அறுபது ஆண்டுகளுக்கு முந்திய கும்பகோணமும் நம் கண்முன் விரிகிறது. காவிரியோரத்து மாடியறையும், பூங்காவும் துக்காம்பாளையத்தெருவும் இதோ தொட்டுவிடும் தூரத்தில் ஜாலம் காட்டுகின்றன. </span></p> <p><span class="Apple-style-span" style="font-family: 'Arial Unicode MS'; "></span></p> <p><span style="font-family: 'Arial Unicode MS'; ">அதைவிட முக்கியமான விஷயம், அறுபது ஆண்டுகளுக்கு முன் இவ்வளவு துணிச்சலான கதையை வடிப்பதற்கும் ஒரு தைரியம் வேண்டும். அன்று என்ன இன்றும் கூட இது விவாததுக்குரிய கருதான். மனித மனத்தின் சில இயல்புகள் என்றும் மாறுவதில்லை. அல்லது மாறுவதற்கு மிக அதிக காலம் எடுத்துக்கொள்கின்றன. கயிற்றின் மேல் சாகசம் காட்டுபவனைப் போல ஒரு புறம் இசையையும் ஒரு புறம் இச்சையையும் வைத்து மிக லாவகமாக பயணித்துக்காட்டியிருக்கிறார் தி.ஜா.</span></p> <p><span class="Apple-style-span" style="font-family: 'Arial Unicode MS'; ">”மோகம் மனிதனை ஆட்டிவைக்கிறது” என்பது ஒரு statement. ஒரு உலகப்பொது உண்மை. இதனைப்பேசாத மதங்கள் இல்லை. சில மதங்கள் அரவணைத்துக்கொள்கின்றன. சில கூடவே கூடாது என்கின்றன. ஆனால், </span><span style="font-family: 'Arial Unicode MS'; ">நாம் ஞானியல்ல. வாழ்வின் ஏதோவொரு கட்டத்தில் சாதாரண மனிதனுக்குண்டான சுக துக்கங்களுடன் மோகத்தையும் கடந்துதான் வரவேண்டியிருக்கிறது. இந்த ஒரு வரிக்கு உயிரும் உணர்வும் கலந்து கூடவே இசையையும் சேர்த்துப் பிசைந்து மறக்கமுடியாத ஒரு அனுவமாக ரசவாதம் காட்டியிருக்கிறார் தி.ஜா. எந்தவொரு காட்சியும் இலக்கில்லாமல் எங்கோ இட்டுச்செல்வதாக உணரமுடியாது. பக்கங்கள் கடக்க கடக்க நமக்கும் மிகப்பரிச்சமான ஒருவர்களாக ஆகிவிடுகின்றனர் அனைவருமே. </span></p> <p><span class="Apple-style-span" style="font-family: 'Arial Unicode MS'; ">அறுநூற்று சொச்ச பக்கங்களில் பல ஆயிரம் வார்த்தைகளில் எழுப்பிககட்டிய கோட்டை கடைசியில் ”<strong>இதற்குத்தானா?</strong>” என்ற ஒற்றை கேள்வியில் உடைந்து நொறுங்கும் போது, வாழ்க்கையின் அபத்தங்களின் மீது நாம் கொண்டிருக்கும் நம்பிக்கையை மீள் பரிசீலனை செய்யவேண்டியிருக்கிறது. </span></p> <p><span class="Apple-style-span" style="font-family: 'Arial Unicode MS'; ">யமுனாவும் ரங்கண்ணாவும் என்னுள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திப்போயினர். எனக்கு இந்த உலகில் இசைமட்டும் போதும் என்கிற ரங்கண்ணா, நான் எதையும் எதிர்கொள்வேன் என்கிற யமுனா, இவர்களை சிறுபிள்ளைத்தனமாக சித்தரித்து அவமதிக்கவிரும்பவில்லை நான். ஆசிரியரின் வார்த்தைகளில் நீங்களே உணர்ந்து கொள்ள,</span></p> <p><span>------------</span><br /><span>மோகமுள்,<br />தி. ஜானகிராமன்,<br />ஐந்திணைப்பதிப்பகம்<br />ரூ. 300<br />இணையத்தில் <a href="http://www.udumalai.com/?prd=&page=products&id=2028" target="_blank">இங்கே</a> கிடைக்கும்.<br />-------------</span></p><p><span></span></p><p><span class="Apple-style-span" style="font-family: 'Arial Unicode MS'; ">புத்தகத்தை மூடிவைத்த பிறகும் விடாமல் காதில் ஒலித்துக்கொண்டிருக்கிறது அந்த ஒற்றைக்கேள்வி.</span></p> <p><span style="font-family: 'Arial Unicode MS'; ">புத்தகத்தில் <a href="http://puththakam.blogspot.com/2010/02/57.html" target="_blank">மோகமுள்</a>.</span></p>Bee'morganhttp://www.blogger.com/profile/17499868778064830704noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-27865649.post-36387094505699861262011-06-26T20:16:00.005+05:302011-06-26T20:33:59.436+05:30ஒரு நாள் கூத்து<p class="MsoNormal"><span class="Apple-style-span" style="font-family: 'Arial Unicode MS', sans-serif; ">எழுமையும் ஏமாப்புடைக்கும் என்றாலும் கூட கல்வி எல்லாரும் மிக எளிதாக கிடைத்துவிடுவதில்லை. நானும் கூட மரத்தடி பள்ளியில் மண்ணைக் கிளறியபடி ஆர்க்கிமிடீசைப் படித்தவன்தான். இதைப்பற்றியெல்லாம் அவ்வப்போது அலசி காயப்போடுகையில்,</span></p> <p class="MsoNormal"><span lang="EN-US" style="font-family:"Arial Unicode MS","sans-serif"; mso-ansi-language:EN-US">”ஏதாவது செய்யணும் சார்” என்று ஒரு குரல் கேட்கும்.<o:p></o:p></span></p> <p class="MsoNormal"><span lang="EN-US" style="font-family:"Arial Unicode MS","sans-serif"; mso-ansi-language:EN-US"><span style="mso-spacerun:yes"> </span>என்னதான் அந்த<span style="mso-spacerun:yes"> </span>அசரீரி அடிக்கடி கேட்டாலும், இது வரை ஏதும் செய்ததில்லை. அதற்கான வாய்ப்புகளும் சரியாக அமைந்ததில்லை.<o:p></o:p></span></p> <p class="MsoNormal"><span lang="EN-US" style="font-family:"Arial Unicode MS","sans-serif"; mso-ansi-language:EN-US">அவை எல்லாவற்றிற்கும் பதில் சொல்வது மாதிரி அமைந்திருந்தது சென்ற வாரத்தில் ஒரு நாள். அலுவலகத்திலிருந்து நாங்கள் 25 பேர் ஒரு குழுவாக, அரசு சாரா தொண்டு நிறுவனமொன்று நடத்தும் பள்ளிக்குச் சென்று ஒரு நாள் முழுவதும் அவர்களுடன் செலவிட்டோம்.<o:p></o:p></span></p> <p class="MsoNormal"><span lang="EN-US" style="font-family:"Arial Unicode MS","sans-serif"; mso-ansi-language:EN-US">ஒரு நாள் முழுவதும் குழந்தைகளுடன், அவர்களுக்கு கற்றுக்கொடுத்து நிறையவே கற்றுக்கொண்டு, கதைகள் பேசி விளையாடி அவர்களின் பிரியா விடைகளுடன் மாலை கிளம்புகையில், இது ஒரு முழுமையான நாள் என்ற எண்ணமே எழுந்தது.<o:p></o:p></span></p> <p class="MsoNormal"><span lang="EN-US" style="font-family:"Arial Unicode MS","sans-serif"; mso-ansi-language:EN-US">சம்பிரதாயமான முறையில் இல்லாமல், சின்னச்சின்ன பரிசோதனைகள் வாயிலாக பாடம் நடத்தும் உத்தியை நாங்கள் தேர்ந்தெடுத்துக்கொண்டோம். அவ்வப்போது கேள்விகள் கேட்டு அவர்களையும் சோதனையில் பங்கேற்கச்செய்தது எதிர்பார்த்த பலனைத்தந்தது. எல்லாக்குழந்தைகளுக்கும் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. சரியான முறையில் பாடம் நடத்தும் ஆசிரியர்கள்தான் இப்போதைய பெரிய தேவை.<o:p></o:p></span></p> <p class="MsoNormal"><span lang="EN-US" style="font-family:"Arial Unicode MS","sans-serif"; mso-ansi-language:EN-US">என் பள்ளிக்காலத்தை இன்று நிதானமாக யோசித்துப்பார்க்கையில், முதலில் நினைவுக்கு வருவது, பாடப்புததகங்களுக்கு வெளியிலும் சென்று ஒரு கதை சொல்வது மாதிரி ஈடுபாட்டுடன் பாடமெடுத்த ஒரு சில ஆசிரியர்கள் மட்டுமே. அவர்களின் பிம்பம் என் மனதில் ஒரு ஆதர்சமாகவே பதிந்திருக்கிறது. எனக்கு ஆங்கிலம் எடுத்த பாலு வாத்தியார். பொதுவாகவே அரசுப்பள்ளிகளில் ஆங்கிலத்துக்கு மருமகள் மரியாதைதான். ஆனால், அவர் ஒரு கவிதையை எடுத்துக்கொண்டு சிலாகிக்கும் போது, அப்படி ஒரு பரவச நிலையில் இருப்பார். அப்படி என்னதான் அந்த நாலு வரியில் அடங்கியிருக்கிறது என்று தெரிந்துகொள்வதற்காகவே படிக்கத்தோன்றும். அதே போல் சமூக அறிவியல் எடுத்த பாஸ்கர் வாத்தியார். ”1963 ம் ஆண்டு பைத்தியக்காரன் ஒருவனால் கென்னடி சுட்டுக்கொல்லப்பட்டார்” என்று புத்தகத்தில் வரும் ஒரு வரியை வைத்துக்கொண்டு ஒரு வகுப்பு முழுமைக்கும் கதைசொல்லிக்கொண்டிருப்பார். <span style="mso-spacerun:yes"> </span>கேட்டுமுடிக்கையில் ”என்னது, கென்னடி செத்துப்போய்ட்டாரா?” னு கேட்கத்தோன்றும்.<o:p></o:p></span></p> <p class="MsoNormal"><span lang="EN-US" style="font-family:"Arial Unicode MS","sans-serif"; mso-ansi-language:EN-US"><span style="mso-spacerun:yes"> </span><span style="mso-spacerun:yes"> </span>அது போலவே இன்னும் சிலர் உண்டு. பள்ளியில் பாடப்புத்தை மட்டுமே கட்டியழுத ஆசியர் எவர் பெயரும் மூளைமடிப்புகளில் பதியவேயில்லை. <o:p></o:p></span></p> <p class="MsoNormal"><span lang="EN-US" style="font-family:"Arial Unicode MS","sans-serif"; mso-ansi-language:EN-US">சென்ற வாரம் அந்த குழந்தைகள் அனைவரையும் பார்க்கையில் அந்த எண்ணம் மேலும் வலுப்பட்டது.</span></p><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgAZQ1wF-iYJwtFb0-2rjMeZgPrlcMB0ps2pTXeqyePuWWgXacFwaMmtXWbmzJA2Nv49cFhdW6xQBrGNM5FqavJEPpEow9NHWRYaUHJKocCb7Bgm9qArq3Djp9pePRundW4OaNM/s1600/refugee.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 224px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgAZQ1wF-iYJwtFb0-2rjMeZgPrlcMB0ps2pTXeqyePuWWgXacFwaMmtXWbmzJA2Nv49cFhdW6xQBrGNM5FqavJEPpEow9NHWRYaUHJKocCb7Bgm9qArq3Djp9pePRundW4OaNM/s320/refugee.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5622542217555363314" /></a><br /><span class="Apple-style-span" style="font-family: 'Arial Unicode MS', sans-serif; ">அந்த பள்ளியைப் பற்றி குறிப்பிட்டுச்சொல்ல வேண்டிய ஒரு விஷயம், அவர்கள் அனைவரும் இலங்கையிலிருந்து அகதிகளாக இந்தியாவிற்கு வந்தவர்கள்.<span style="mso-spacerun:yes"> </span>அனைவருக்கும்<span style="mso-spacerun:yes"> </span>பொதுவான மற்றொரு அம்சம், அனைவருமே பெற்றோரில் ஒருவர் அல்லது இருவரையும் போருக்குப் பறிகொடுத்தவர்கள். இருக்கும் பெற்றோரும் தமிழகத்திலும் ஒரிசாவிலும் அகதிகள் முகாமை விட்டு வெளியில் செல்ல ஏகப்பட்ட கெடுபிடிகள். அவர்கள் அருகிலுள்ள இடங்களுக்கு வேலைக்குச் சென்றால் கூட மாலை இத்தனை மணிக்குள் முகாம்களுக்குத் திரும்பியிருக்க வேண்டும் என்று கட்டுப்பாடுகள். இந்த தொண்டு நிறுவனம் அங்கிருக்கும் குழந்தைகளில் இருநூறு பேரை அழைத்து வந்து இங்கு எழுத்தறிவிக்கிறது. இது ஒரு Residential school. மாதத்தின் பத்து மாதங்கள் குழந்தைகள் அனைவரும் இங்கேயே இருக்கின்றனர். கோடை விடுமுறையாக இரு மாதங்கள் மட்டும் முகாம்களுக்கு விஜயம்.</span><br /><p class="MsoNormal"><span lang="EN-US" style="font-family:"Arial Unicode MS","sans-serif"; mso-ansi-language:EN-US">இப்படி ஒரு இடம் பெங்களுரில் இருப்பது எனக்கு பெரிய ஆச்சரியம். அதுநாள் வரையில், இப்பள்ளியைப் பற்றி நான் கேள்விப்பட்டது கூட கிடையாது. <o:p></o:p></span></p> <p class="MsoNormal"><span lang="EN-US" style="font-family:"Arial Unicode MS","sans-serif"; mso-ansi-language:EN-US">அப்பள்ளியைப் பற்றிய விவரங்கள் அறிந்தவுடன், நிச்சயம் ஏதாவது செய்யவேண்டும் எனத்தோன்றியது. இலங்கையில் அவர்கள் துடித்துச் சாகும் போதும் கூட, வரட்டுப் பேச்சு பேசிக்கொண்டிருந்த கையாலாகாதவர்களாகத்தான் நாம் இருந்திருக்கிறோம். அரசை மட்டும் குற்றம் சொல்வதில் பயனில்லை. நாமும் அதன் ஓர் அங்கம்தான்.<o:p></o:p></span></p> <p class="MsoNormal"><span lang="EN-US" style="font-family:"Arial Unicode MS","sans-serif"; mso-ansi-language:EN-US">என்னால் முடிந்த குறைந்த பட்சமாக ஒரு நாளை அவர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம் என்ற எண்ணமே மேலோங்கியது. நிர்வாகிகளுடன் மேலும் பேசியதில், அனைவரும் கையிலிருந்த சொற்ப ரூபாய்களைத் தொகுத்து, அவர்களின் உடனித்தேவையாக சில மருந்துகளும் முதலுதவிப்பெட்டியும் வாங்கிக்கொடுத்தோம்.<o:p></o:p></span></p> <p class="MsoNormal"><span lang="EN-US" style="font-family:"Arial Unicode MS","sans-serif"; mso-ansi-language:EN-US">அங்கு கட்டமைப்பு வசதிகளும் ரொம்ப பெரிதாக இல்லை. 10வது வரை அங்கு வகுப்புகளுக்கு வசதிகள் உள்ளன. பத்தாவதுக்கு<span style="mso-spacerun:yes"> </span>பிறகு வகுப்பில் சிறந்து விளங்கும் ஒரு சிலர் மட்டும் P.U செல்கின்றனர். அதிலும் சிலர் மட்டுமே கல்லூரி வரை எட்டிப்பார்க்கின்றனர். <o:p></o:p></span></p> <p class="MsoNormal"><span lang="EN-US" style="font-family:"Arial Unicode MS","sans-serif"; mso-ansi-language:EN-US">பள்ளியைப் பற்றி மேலும்: </span><a href="http://www.igia.org.in/">http://www.igia.org.in/</a><span lang="EN-US" style="font-family:"Arial Unicode MS","sans-serif";mso-ansi-language:EN-US"><o:p></o:p></span></p> <p class="MsoNormal"><span lang="EN-US" style="font-family:"Arial Unicode MS","sans-serif"; mso-ansi-language:EN-US">நாங்கள் 6 லிருந்து 10 வரையிலான மாணவ மாணவிகளுக்கு பாடங்கள் எடுத்தோம். <o:p></o:p></span></p> <p class="MsoNormal"><span lang="EN-US" style="font-family:"Arial Unicode MS","sans-serif"; mso-ansi-language:EN-US">திட்டப்படி நான் எடுத்துக்கொண்ட, காந்தவியலுக்கு மொத்தம் மூன்று பேர். ஒவ்வொருவம் சுழற்சி முறையில் எடுப்பதாகத்தான் திட்டம். ஆனால் மாணவர்கள், ஆங்கிலத்தில் தடுமாறவே, அனைத்தையும், தமிழிலேயே விவரிக்க வேண்டி வந்ததால் ஒய்வில்லாமல் மூன்றரை மணிநேர வகுப்பையும் நானே எடுத்தேன். <o:p></o:p></span></p> <p class="MsoNormal"><span lang="EN-US" style="font-family:"Arial Unicode MS","sans-serif"; mso-ansi-language:EN-US">வகுப்பிலிருந்து வெளிவருகையில் என்னால் சரியாக பேசவே முடியாவிட்டாலும் கூட மிகுந்த மனநிறைவைத்தந்தது அந்த சிலமணிநேரங்கள். மாணவர்களின் இடைவிடாத கேள்விகள், ஆச்சரியப் பார்வைகள், புரிந்த சிரிப்புகள், கற்றுக்கொண்டதன் நன்றிகள் . <o:p></o:p></span></p> <p class="MsoNormal"><span lang="EN-US" style="font-family:"Arial Unicode MS","sans-serif"; mso-ansi-language:EN-US">மதியம் உணவுக்குப் பின்னர், அவர்களுடன் விளையாட்டுகள். அடுத்த இரண்டு மணி நேரமும் கண்மூடித்திறப்பதற்குள் கடந்துவிட்டது.<o:p></o:p></span></p> <p class="MsoNormal"><span lang="EN-US" style="font-family:"Arial Unicode MS","sans-serif"; mso-ansi-language:EN-US">இவ்வளவு நெருக்கமாக அம்மாணவர்களுடன் பழகுவேன் என்று நானே எதிர்பார்க்கவில்லை. கிளம்புகையில், மாணவிகள் சிலர்<span style="mso-spacerun:yes"> </span>அவர்களே தயாரித்த நன்றி கூறும் வாழ்த்து அட்டையொன்றை நீட்டிய போது என்னால் எதுவுமே பேசமுடியவில்லை.<o:p></o:p></span></p> <p class="MsoNormal"><span lang="EN-US" style="font-family:"Arial Unicode MS","sans-serif"; mso-ansi-language:EN-US">அலுவலகத்திலுந்து திரும்பவும் அடுத்த வருடம்தான் என்றாலும், நான் தனியாகவே மீண்டும் ஒரு முறை செல்லாம் என்று எண்ணியிருக்கிறேன்.<o:p></o:p></span></p> <p class="MsoNormal"><span lang="EN-US" style="font-family:"Arial Unicode MS","sans-serif"; mso-ansi-language:EN-US">பிறந்தநாள், இறந்தநாள் என்று ஆயிரக்கணக்கில் ரெஸ்டாரன்ட்டுகளில் கொட்டித்தீர்க்கும் பெங்களுர் மக்கள் வருடத்தில் ஒரு நாள் இங்கும் வந்து தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளலாம். பகிரப்படும் மகிழ்ச்சி இரட்டிப்பாகுமென்று ஒரு சொல்வழக்கு உண்டு. நம்பாதாவர்கள் ஒரு முறை கண்டிப்பாய் இங்கு வரவும்.<o:p></o:p></span></p> <p class="MsoNormal"><span lang="EN-US" style="font-family:"Arial Unicode MS","sans-serif"; mso-ansi-language:EN-US">இது ரெசிடென்சியல் பள்ளி என்பதால் அம்மாணவர்களுக்க பெரிதாக வெளியில் செல்லும் வாய்ப்புகளும் இல்லை. பள்ளியின் காம்பௌண்டு சுவர்களுடன் முடிந்துவிடுகின்றன அவர்களின் இந்தியப்பெருங்கடலும், இமயமலைகளும்.<span style="mso-spacerun:yes"> </span>நாங்கள் அவர்களுக்கு கற்றுக்கொடுத்ததன் திருப்தியை விட, அவர்களுக்கு ஒரு மாறுதலாக , அவர்கள் உலகின் ஒரு நாள் விருந்தினர்களாக சந்தோஷம் அளித்ததே பெரிதாக இருந்தது. <o:p></o:p></span></p> <p class="MsoNormal"><span lang="EN-US" style="font-family:"Arial Unicode MS","sans-serif"; mso-ansi-language:EN-US">எத்தனையோ சோகங்களைக் கடந்து வந்திருந்த போதும், அனைவர் முகத்திலும் சந்தோசமும் நம்பிக்கையும் இன்னும் மிச்சமிருக்கின்றன.<o:p></o:p></span></p> <p class="MsoNormal"><span lang="EN-US" style="font-family:"Arial Unicode MS","sans-serif"; mso-ansi-language:EN-US">வீடு திரும்பிய பின் குற்றவுணர்ச்சி கொஞ்சம் குறைந்தது மாதிரி இருந்தது. <o:p></o:p></span></p><p class="MsoNormal"><span lang="EN-US" style="font-family:"Arial Unicode MS","sans-serif"; mso-ansi-language:EN-US">* * * *</span></p> <p class="MsoNormal"><span lang="EN-US" style="font-family:"Arial Unicode MS","sans-serif"; mso-ansi-language:EN-US">குறிப்பு<span style="mso-spacerun:yes"> </span>1: வழக்கொழிந்து போன பல அழகான தமிழ்ப்பெயர்களைச் சந்தித்தேன். ஈகை வேந்தன், நெடுஞ்செழியன், கார்முகிலன் என இன்னும் பல. இன்று தமிழ்நாட்டில் எந்தவொரு பெற்றொரும்<span style="mso-spacerun:yes"> </span>மூன்றெழுத்துக்கு மிகுந்து நாமகரணம் சூட்டுவதாகத்தெரியவில்லை. அந்த மூன்றில் ஒன்று வடமொழியாக இருந்தால் பெற்றோருக்கு இன்னும் பெருமை<o:p></o:p></span></p> <p class="MsoNormal"><span lang="EN-US" style="font-family:"Arial Unicode MS","sans-serif"; mso-ansi-language:EN-US">குறிப்பு 2: ஒரு சிறுவனுடன் பேசிக்கொண்டிருக்கையில் அவன் நெருங்கிய உறவினர்கள் அவன் கண்முன் கொல்லப்பட்டதை ஒரு செய்தியைப் போலச் சொன்னான். எனக்குதான் அதற்கு மேல் பேசமுடியவில்லை. <o:p></o:p></span></p>Bee'morganhttp://www.blogger.com/profile/17499868778064830704noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-27865649.post-43077656768303855832011-06-20T00:06:00.004+05:302011-06-20T00:13:59.487+05:30அவனும் இவனும்<p class="MsoNormal"><span class="Apple-style-span" style="font-family: 'Arial Unicode MS', sans-serif; font-size: 13px; line-height: 14px; ">Disclaimer: இது அவன் இவன் விமரசனம் அல்ல. விமர்சனம் தேடி வந்தவர்கள் இப்போதே தப்பித்துக்கொள்ளலாம். :)</span></p> <p class="MsoNormal"><span lang="EN-US" style="font-size:10.0pt;mso-bidi-font-size: 11.0pt;line-height:115%;font-family:"Arial Unicode MS","sans-serif";mso-ansi-language: EN-US">நீண்ட நாட்களுக்குப் பின் தியேட்டர் சென்று படம் பார்ப்பதென முடிவான பிறகு, ஆரண்ய காண்டம் பார்க்கலாம் என்றானது. ஆகா ஓகோ வென நண்பர்களும் உசுப்பேற்ற, நானும் இரு நண்பர்களும் ஒரு வழியாக படத்தின டிரெய்லர் பார்த்து படத்துக்கு தயாராகி படம் எங்கு ஓடுகிறது என்று தேடினால், எங்குமே இல்லை என்று பல்லிளித்தார் கூகிலாண்டவர். படம் வந்து ஒரு வாரம்தானே ஆகிறது.. என்னடா தமிழுக்கு வந்த சோதனை என்று மீண்டும் சளைக்காமல் தேடியதில்,<span style="mso-spacerun:yes"> </span>nowrunning.com மட்டும் இந்த படம் ஒரு டப்பா தியேட்டரில் இன்னமும் ஓடிக்கொண்டிருப்பதாக <span style="mso-spacerun:yes"> </span>பாலை வார்த்தது.<o:p></o:p></span></p> <p class="MsoNormal"><span lang="EN-US" style="font-size:10.0pt;mso-bidi-font-size: 11.0pt;line-height:115%;font-family:"Arial Unicode MS","sans-serif";mso-ansi-language: EN-US">கோடை விடுமுறை முடிந்து பள்ளி செல்லும் மாணவர்கள் மாதிரி ஜோராக கிளம்பி 30 நிமிடங்கள் முன்னதாகவே தியேட்டருக்கு சென்றால், பார்க்கிங்கிலேயே <o:p></o:p></span></p> <p class="MsoNormal"><span lang="EN-US" style="font-size:10.0pt;mso-bidi-font-size: 11.0pt;line-height:115%;font-family:"Arial Unicode MS","sans-serif";mso-ansi-language: EN-US">”மலையாளமா?” என்று கர்ண கடூரமான குரலில் குச்சியை நீட்டினார் பார்க்கிங் ஆசாமி..<o:p></o:p></span></p> <p class="MsoNormal"><span lang="EN-US" style="font-size:10.0pt;mso-bidi-font-size: 11.0pt;line-height:115%;font-family:"Arial Unicode MS","sans-serif";mso-ansi-language: EN-US">பொதுவாக தமிழ்நாட்டுக்கும் கர்னாடகத்தும்தானே பிரச்சனை வரும்.. இப்ப இவர் கேட்கிற தொனியைப் பார்த்தால், கேரளாவுக்கும் பிரச்சனையா.. <span style="mso-spacerun:yes"> </span>நல்லவேளையாக நான் இப்போது கேரளா இல்லை என்பது சந்தோசம் என்றாலும், பயத்தை விழுங்கியபடி <o:p></o:p></span></p> <p class="MsoNormal"><span lang="EN-US" style="font-size:10.0pt;mso-bidi-font-size: 11.0pt;line-height:115%;font-family:"Arial Unicode MS","sans-serif";mso-ansi-language: EN-US">”தமிழ்நாடு” என்றேன்..<o:p></o:p></span></p> <p class="MsoNormal"><span lang="EN-US" style="font-size:10.0pt;mso-bidi-font-size: 11.0pt;line-height:115%;font-family:"Arial Unicode MS","sans-serif";mso-ansi-language: EN-US">”அக்கட ரண்டி.. அக்கட ரண்டி” என்று அருகிலிருந்த மற்றொரு தியேட்டரை நோக்கி கை காட்டினார்..<o:p></o:p></span></p> <p class="MsoNormal"><span lang="EN-US" style="font-size:10.0pt;mso-bidi-font-size: 11.0pt;line-height:115%;font-family:"Arial Unicode MS","sans-serif";mso-ansi-language: EN-US">இது என்ன புது அநியாயமாக இருக்கிறது. தமிழ்நாட்டிலிருந்து வந்தால்<span style="mso-spacerun:yes"> </span>இங்கு படம் பார்கமுடியாதா என்று மேலும் விசாரித்ததில், நேற்றே படம் மாறிவிட்டதாம். இப்போது ஒரு மலையாள படம் ஓடிக்கொண்டிருக்கிறது. . ஆண்டவா. .<o:p></o:p></span></p> <p class="MsoNormal"><span lang="EN-US" style="font-size:10.0pt;mso-bidi-font-size: 11.0pt;line-height:115%;font-family:"Arial Unicode MS","sans-serif";mso-ansi-language: EN-US">தியேட்டர் முன் அப்படத்தின் ஃப்ளெக்ஸ் பேனரில், மார்வரை பாவாடை ஏற்றிக்கட்டிய மங்கை அனைவரையும் வருக வருக என்று வரவேற்றுக்கொண்டிருந்தார். . <o:p></o:p></span></p> <p class="MsoNormal"><span lang="EN-US" style="font-size:10.0pt;mso-bidi-font-size: 11.0pt;line-height:115%;font-family:"Arial Unicode MS","sans-serif";mso-ansi-language: EN-US">இது வரை தியேட்டரில் மலையாளப்படமே பார்த்ததில்லையே என்று எழுந்த குற்றவுணர்ச்சியையும் ஓரங்கட்டி, பார்த்தால் தமிழ்ப்படவே பார்ப்பதென சூளுரைத்து அருகிலிருந்த தியேட்டருக்கு சென்றால், அங்கு காத்திருந்தது அடுத்த அதிர்ச்சி. அங்கு ஆரண்ய காண்டத்திற்கு பதிலாக அவனும் இவனும் எங்களைப் பார்த்து முறைத்துக்கொண்டிருந்தனர்.<o:p></o:p></span></p> <p class="MsoNormal"><span lang="EN-US" style="font-size:10.0pt;mso-bidi-font-size: 11.0pt;line-height:115%;font-family:"Arial Unicode MS","sans-serif";mso-ansi-language: EN-US"><span style="mso-spacerun:yes"> </span>அவன் இவன் ஆ என்று நண்பர்களிருவரும் பின்வாங்க, <o:p></o:p></span></p> <p class="MsoNormal"><span lang="EN-US" style="font-size:10.0pt;mso-bidi-font-size: 11.0pt;line-height:115%;font-family:"Arial Unicode MS","sans-serif";mso-ansi-language: EN-US">இவ்வளவு தூரம் பெட்ரோலை புகைத்து வந்த ஒரே காரணத்துக்காகவாவது இந்த படம் பார்த்துவிட்டு போகலாம்<span style="mso-spacerun:yes"> </span>என்று முண்டியடித்து டிக்கெட்டும் வாங்கினால், படம் தொடங்குவதற்கு 5 நிமிடம் முன்பாகத்தான் உள்ளே விடுவோம் என்று சங்கிலியைப்போட்டு இறுக பூட்டியிருந்தனர். அதற்கு இன்னும் பத்து நிமிடம் இருக்கிறதே என்று அக்கம் பக்கம் நோட்டம் விட்டதில் நிறைய பேர் குடும்பம் சகிதமாக பிள்ளை குட்டிகளுடன் வந்திருந்தனர். ஜீன்ஸ் கூலிங்கிளாஸ் சகிதமாக பீட்டர் மங்கைகளையும் காணமுடிந்தது. இவர்களுக்கு இன்னமும் பாலா மேல் இருக்கும் நம்பிக்கையா, இல்லை என்னைப் போல் ஏமாந்த சோனகிரிகளா என்று எழுந்த சந்தேகத்தையும் பொறுத்துக்கொண்டு காத்திருந்தோம். பூட்டு திறக்கும் போதுதான் தெரிய வந்தது, டிக்கெட்டில் போட்டிருக்கும் இருக்கை எண்கலெல்லாம் சும்மா உல்லுலாயிக்கு. உள்ளே நுழைந்ததும் உங்கள் கபடியாடும் திறமைக்கேற்ப ஒரு இருக்கையை பட்டாபோட்டுக்கொள்ளலாம். .<span style="mso-spacerun:yes"> </span>கிட்டத்தட்ட மன்னன் பட ரஜினி ரேன்ஞ்சுக்குத்தான் உள்ளே நுழைய முடிந்தது. <o:p></o:p></span></p> <p class="MsoNormal"><span lang="EN-US" style="font-size:10.0pt;mso-bidi-font-size: 11.0pt;line-height:115%;font-family:"Arial Unicode MS","sans-serif";mso-ansi-language: EN-US">இதெல்லாம் சரி.. படம் என்னவானதா? வேண்டாம்.. குறை சொல்வது ரொம்பவும் சுலபம். அது நிறைய சொல்லலாம். முதல் பாதி என்னால் கொஞ்சமும் ஒன்றமுடியவில்லை. ரொம்ப செயற்கையாகத் தெரிந்தது பல இடங்களில். படத்தில் எனக்குப் பிடித்த இரு விஷயங்கள் மட்டும்.. <o:p></o:p></span></p> <p class="MsoNormal"><span lang="EN-US" style="font-size:10.0pt;mso-bidi-font-size: 11.0pt;line-height:115%;font-family:"Arial Unicode MS","sans-serif";mso-ansi-language: EN-US">முதலாவது.. <span style="mso-spacerun:yes"> </span>பாலாவின் ட்ரேட் மார்க் பாத்திரங்கள்..<span style="mso-spacerun:yes"> </span>இது வரை நீங்கள் சந்தித்திராத கதாபாத்திரங்களை அவளர்களின் வாழ்விடங்களிலேயே ஒப்பனைகளின்றி காணலாம். . இப்படி குற்றப்பரம்பரையைப் பற்றி தமிழில் வேறேதும் படம் வந்திருக்கிறதா எனத்தெரியவில்லை. அப்புறம் அந்த கமுதிக்கோட்டை ஜமீன்.. சுதந்திர இந்தியாவிடம் ஜமீனை பறிகொடுத்துவிட்டு வறட்டு ஜம்பத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் அவரின் பாத்திரமும் கச்சிதம்.. அப்புறம் அந்த சிறுவன்.. எதுவுமே பேசாவிட்டாலும், அவர்களின் குடியிருப்பின் வாயிலில் அபாய மணியடிக்கும் கிழவன்.. இன்னும் இன்னும்.. இவர்களையெல்லாம் திரையில் கொண்டுவர பாலாவால் மட்டுமே முடியும்.<o:p></o:p></span></p> <p class="MsoNormal"><span lang="EN-US" style="font-size:10.0pt;mso-bidi-font-size: 11.0pt;line-height:115%;font-family:"Arial Unicode MS","sans-serif";mso-ansi-language: EN-US">அடுத்து ஜமீன்தாரின் நடிப்பும், அவருக்கும் அந்த சிறுவனுக்கும் இடையிலான உறவும் எனக்கு பிடித்திருந்தது. பாசாங்குகள் இன்று உறவுகளை காட்சிப்படுத்திய பாலா, நாயகர்கள் என்றாலே ஒரு நாயகி தேவை என்கிற ஆலம் ஆரா கால ஃபார்முலாவின் சறுக்கியிருப்பது உறுத்துகிறது. <o:p></o:p></span></p> <p class="MsoNormal"><span lang="EN-US" style="font-size:10.0pt;mso-bidi-font-size: 11.0pt;line-height:115%;font-family:"Arial Unicode MS","sans-serif";mso-ansi-language: EN-US">பெரிதும் எதிர்பார்த்த ”ஒரு மலையோரம்” பாடல் படத்தில் வரவே இல்லை. </span><span lang="EN-US" style="font-size:10.0pt;mso-bidi-font-size:11.0pt;line-height:115%; font-family:Wingdings;mso-ascii-font-family:"Arial Unicode MS";mso-fareast-font-family: "Arial Unicode MS";mso-hansi-font-family:"Arial Unicode MS";mso-bidi-font-family: "Arial Unicode MS";mso-ansi-language:EN-US;mso-char-type:symbol;mso-symbol-font-family: Wingdings"><span style="mso-char-type:symbol;mso-symbol-font-family:Wingdings">L</span></span><span lang="EN-US" style="font-size:10.0pt;mso-bidi-font-size:11.0pt;line-height:115%; font-family:"Arial Unicode MS","sans-serif";mso-ansi-language:EN-US"><o:p></o:p></span></p> <p class="MsoNormal"><span lang="EN-US" style="font-size:10.0pt;mso-bidi-font-size: 11.0pt;line-height:115%;font-family:"Arial Unicode MS","sans-serif";mso-ansi-language: EN-US">படத்திற்கு செல்லும் முன், இது ஒரு காமெடி படமென்று யாரோ சொன்னதாக நினைவு. அது யாரென்று இன்னமும் தேடிக்கொண்டிருக்கிறேன்..<o:p></o:p></span></p> <p class="MsoNormal"><span lang="EN-US" style="font-size:10.0pt;mso-bidi-font-size: 11.0pt;line-height:115%;font-family:"Arial Unicode MS","sans-serif";mso-ansi-language: EN-US">பாலா படத்திற்கெல்லம் genre சொல்லவது ரொம்பவே கஷ்டம். இது பாலா படம் அவ்வளவுதான். நான் கடவுளும் பிதா மகனும் உங்களுக்கு மிகப்பிடித்த படங்கள் என்றால், இதுவும் பிடிக்கக்கூடும். அதற்கு மேல் உங்களின் ஊழ்வினை. <span style="mso-spacerun:yes"> </span><o:p></o:p></span></p> <p class="MsoNormal"><span lang="EN-US" style="font-size:10.0pt;mso-bidi-font-size: 11.0pt;line-height:115%;font-family:"Arial Unicode MS","sans-serif";mso-ansi-language: EN-US">Moral of the story: கூகிலாண்டவர் (பெரும்பாலும்) பொய் சொல்ல மாட்டார். :P<o:p></o:p></span></p>Bee'morganhttp://www.blogger.com/profile/17499868778064830704noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-27865649.post-44415067981028766142011-06-12T22:39:00.002+05:302011-06-12T22:47:53.997+05:30காலக்கணக்கு<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj9CjXDMOyN2gegFpSkU2RQKmQA4wILrOWdoDqi8yOIIaH59JAsvkLbQ3vJeRwNPiObE0o2dCdnfpBFFv5pwOCWKItrTjmHV_4bzK3XvzpOVQkPqH104o-WvkoeUS47B9OoXtth/s1600/bird+at+night+desktop+wallpaper+fantasy.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 200px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj9CjXDMOyN2gegFpSkU2RQKmQA4wILrOWdoDqi8yOIIaH59JAsvkLbQ3vJeRwNPiObE0o2dCdnfpBFFv5pwOCWKItrTjmHV_4bzK3XvzpOVQkPqH104o-WvkoeUS47B9OoXtth/s320/bird+at+night+desktop+wallpaper+fantasy.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5617381783298012642" /></a><p class="MsoNormal"><span class="Apple-style-span" style="font-family: 'Arial Unicode MS', sans-serif; ">பாதை தொலைத்த கருநிறப்பறவையொன்று</span></p> <p class="MsoNormal"><span lang="EN-US" style="font-family:"Arial Unicode MS","sans-serif"; mso-ansi-language:EN-US">ஆழியின் இருள் வானில் நீந்துகிறது. . .<o:p></o:p></span></p> <p class="MsoNormal"><span lang="EN-US" style="font-family:"Arial Unicode MS","sans-serif"; mso-ansi-language:EN-US">சிறகின் திராணி தீரும் மட்டும்<o:p></o:p></span></p> <p class="MsoNormal"><span lang="EN-US" style="font-family:"Arial Unicode MS","sans-serif"; mso-ansi-language:EN-US">இருள் கிழித்த அப்பறவை,<o:p></o:p></span></p> <p class="MsoNormal"><span lang="EN-US" style="font-family:"Arial Unicode MS","sans-serif"; mso-ansi-language:EN-US">செயலற்று நீர் சேரும் அந்த வினாடி<o:p></o:p></span></p> <p class="MsoNormal"><span lang="EN-US" style="font-family:"Arial Unicode MS","sans-serif"; mso-ansi-language:EN-US">உதிரத்தொடங்குகிறது பறவையின்<o:p></o:p></span></p> <p class="MsoNormal"><span lang="EN-US" style="font-family:"Arial Unicode MS","sans-serif"; mso-ansi-language:EN-US">இறகுகளில் படிந்திருந்த வானம். . <o:p></o:p></span></p>Bee'morganhttp://www.blogger.com/profile/17499868778064830704noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-27865649.post-678536485788517642011-06-02T22:15:00.005+05:302011-06-02T22:21:26.069+05:30எனக்கும் ஒரு கனவுண்டு<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgOvrQQKfuQr-dQvVG6t8T9ni7fmoCdqJB8w63z5DUsFQ8Pw0G5EegNEi45gT3BeHW4lZtGksI_veYfJxSqwtfDoImIrheS6LhySTw8921MmMGlTLG9AnPDA_b3EtXeR6KN90K_/s1600/girl%252Chands%252Ckey%252Cwhite%252Cdress%252Cwoman%252Chand-09ce34a20526ca1b654fb031379f6726_h.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"><span class="Apple-style-span" ><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgOvrQQKfuQr-dQvVG6t8T9ni7fmoCdqJB8w63z5DUsFQ8Pw0G5EegNEi45gT3BeHW4lZtGksI_veYfJxSqwtfDoImIrheS6LhySTw8921MmMGlTLG9AnPDA_b3EtXeR6KN90K_/s320/girl%252Chands%252Ckey%252Cwhite%252Cdress%252Cwoman%252Chand-09ce34a20526ca1b654fb031379f6726_h.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5613664748232002818" /></span></a><div><div><span class="Apple-style-span" >எனக்கு ஒரு கனவுண்டு. .</span></div><div><span class="Apple-style-span" >அடிக்கடி வரும் கனவு,</span></div><div><span class="Apple-style-span" >அது ஒரு மந்திரவாசல் பற்றியது. .</span></div><div><span class="Apple-style-span" >என் வாழ்வின் அத்தனை பிரச்சனைகளுக்குமான தீர்வு</span></div><div><span class="Apple-style-span" >அந்த கதவின் மறுபுறம்</span></div><div><span class="Apple-style-span" >என் வருகையை எதிர்நோக்கிக்காத்திருந்தது</span></div><div><span class="Apple-style-span" ><br /></span></div><div><span class="Apple-style-span" >எல்லாமே இருந்தது அங்கு</span></div><div><span class="Apple-style-span" >மனம் கொண்ட மனைவி</span></div><div><span class="Apple-style-span" >நிறைவான பெற்றோர்</span></div><div><span class="Apple-style-span" >குதூகலமாய்க் குழந்தைகள் என</span></div><div><span class="Apple-style-span" >கண் நிறையும் விளம்பரக்குடும்பம்.</span></div><div><span class="Apple-style-span" ><br /></span></div><div><span class="Apple-style-span" >பிசிராந்தையார் மாதிரி நரைக்காத தலையுடன்</span></div><div><span class="Apple-style-span" >நூறாண்டுகள் வாழ்ந்து முடித்து,</span></div><div><span class="Apple-style-span" >சலித்துப்போகும் ஒரு நாளில்</span></div><div><span class="Apple-style-span" >சந்தோசமாய் செத்துப்போகலாம்.</span></div><div><span class="Apple-style-span" ><br /></span></div><div><span class="Apple-style-span" >விழித்திருக்கும் வினாடியெல்லாம்</span></div><div><span class="Apple-style-span" >விழி நோக, அந்தக் கதவினைத்தேடி</span></div><div><span class="Apple-style-span" >பித்தம்கொண்டலைந்தேன்</span></div><div><span class="Apple-style-span" ><br /></span></div><div><span class="Apple-style-span" >கனவின் வருகையும் வீரியமும்</span></div><div><span class="Apple-style-span" >நாளுக்குநாள் கூடி,</span></div><div><span class="Apple-style-span" >தேடிக்களைத்த ஒரு நாள்</span></div><div><span class="Apple-style-span" >கதவுகள் மட்டுமே சூழ்ந்த ஒரு அறையில்</span></div><div><span class="Apple-style-span" >தனித்து விடப்பட்டதை உணர்ந்தேன்</span></div><div><span class="Apple-style-span" ><br /></span></div><div><span class="Apple-style-span" >ஒரு கதவினைப்போல மற்றொன்றில்லை</span></div><div><span class="Apple-style-span" >எந்த கதவிலும் சாவித்துவாரங்களில்லை</span></div><div><span class="Apple-style-span" >எனக்கான அமிர்தம் எந்த கதவின் பின்?</span></div><div><span class="Apple-style-span" ><br /></span></div><div><span class="Apple-style-span" >எனதென நான் நினைத்த கதவினைத்</span></div><div><span class="Apple-style-span" >தொடவிழைந்த வினாடியே,</span></div><div><span class="Apple-style-span" >சுற்றியிருந்த கதவுகள் அனைத்தும்</span></div><div><span class="Apple-style-span" >சுழலத்தொடங்கின..</span></div><div><span class="Apple-style-span" >மெதுவாய்த்தொடங்கிய சுழற்சி</span></div><div><span class="Apple-style-span" >சிற்சில வினாடிகளில்</span></div><div><span class="Apple-style-span" >என்னை மையமாகக்கொண்ட</span></div><div><span class="Apple-style-span" >பேய்ச்சுழலாக உருக்கொண்டது. .</span></div><div><span class="Apple-style-span" ><br /></span></div><div><span class="Apple-style-span" >பார்வைப்புலம் முழுவதும்,</span></div><div><span class="Apple-style-span" >பிரிதத்தறிய முடியாத காட்சிச்சிதறல்..</span></div><div><span class="Apple-style-span" ><br /></span></div><div><span class="Apple-style-span" >கிறுகிறுத்த சிந்தையும்,</span></div><div><span class="Apple-style-span" >ஓடிக்களைத்த கால்களுமாய்,</span></div><div><span class="Apple-style-span" >சுழற்சி ஓயும் சமயம்</span></div><div><span class="Apple-style-span" >என் கதவென நான் தேர்ந்தெடுத்த ஒன்றினுள்</span></div><div><span class="Apple-style-span" >ஆவலாய்ப் பாய்ந்தேன். .</span></div><div><span class="Apple-style-span" ><br /></span></div><div><span class="Apple-style-span" >அது வரை தேடியலைந்த களைப்பில்</span></div><div><span class="Apple-style-span" >உடன் உறங்கிப்போனேன்..</span></div><div><span class="Apple-style-span" ><br /></span></div><div><span class="Apple-style-span" >கனவில் வந்தது ஒரு மந்திர வாசல்..</span></div><div><span class="Apple-style-span" ><br /></span></div><div><span class="Apple-style-span" >எனக்கும் ஒரு கனவுண்டு</span></div><div><span class="Apple-style-span" >உங்களைப் போலவே. . .</span></div></div>Bee'morganhttp://www.blogger.com/profile/17499868778064830704noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-27865649.post-42763110828854886622010-05-03T20:55:00.005+05:302010-05-04T12:34:23.836+05:30இடமாறு தோற்றப்பிழை<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgbu1J20wiHFWnLuDJeFNXwr9AMWG3jYUrggwFXW9RQuWC5QTvAwqNXItZ-ghifxo_C5KDPON_Unja53XJVBEUFnfisIH2qjxLQhM00qN67dRbCtuANFDetTHb4eugyzHQEvCEm/s1600/child_looking_up.jpg"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 320px; height: 214px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgbu1J20wiHFWnLuDJeFNXwr9AMWG3jYUrggwFXW9RQuWC5QTvAwqNXItZ-ghifxo_C5KDPON_Unja53XJVBEUFnfisIH2qjxLQhM00qN67dRbCtuANFDetTHb4eugyzHQEvCEm/s320/child_looking_up.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5467065457955252050" border="0" /></a>யாருமற்ற பெருவெளியில்<br />பஞ்சுப்பொதி சுமந்தபடி<br />ஊர்ந்துகொண்டிருந்த யானை,<br /><br />நான்<br />பார்த்துக்கொண்டிருக்கும் போதே<br />உடல் குறுக்கி, துதிக்கை உயர்த்தி<br />ஒரு கோபுரமாய்ச் சமைந்தது<br /><br />அந்த யானையின் படைப்பில்<br />என் பங்களிப்பும்<br />உண்டெனினும்,<br /><br />அது காணாமல் போனதைப் பற்றிய<br />சஞ்சலங்கள் ஏதுமில்லை<br />என்னிடம்<br /><br />புதிதாய் முளைத்த<br />கோபுரம் ஏற்படுத்திய<br />கிளர்ச்சி மட்டுமே<br /><br />கல்பகாலமல்ல<br />கால் நிமிடம்தான்<br /><br />கல்விழுந்த குளமென<br />சிறிய சலசலப்பில்<br />கோபுரம் சரிந்துவிழுந்து<br />தவழும் குழந்தையானது<br /><br />அம்மாவிடம் அடம்பிடித்தும்<br />கிடைக்காத ஐஸ்க்ரீம்<br />ஆசையுடன் நான் நட்ட<br />பூச்செடி<br />சாகசங்கள் புரியும்<br />இரும்புக்கை மாயாவி<br /><br />என் மனதுக்கு நெருக்கமான<br />அத்தனையாகவும் உருக்கொண்ட<br />அந்த மாயக்கம்பளம்<br />வெறும் வெண்மேகமென<br />உணர்ந்த ஒரு நாளில்<br />நான் வளர்ந்துவிட்டிருந்தேன்Bee'morganhttp://www.blogger.com/profile/17499868778064830704noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-27865649.post-57508920590842768912010-04-26T14:56:00.009+05:302010-04-27T10:12:05.107+05:30இருத்தல்<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjA6QAtEjeKyqkSlMfBPTct4P_Vi5XCUjulkH0DhmRQmfycYXY-wgZRAPMbViIW5bq0-uj75upkcGYyIzHC4voucoNkojIjw2FmWtzkOPKX_M1fhUCNIjEzytIO0xLIuN5DCEqY/s1600/soap_ball.jpg"><img style="margin: 0pt 0pt 10px 10px; cursor: pointer; width: 320px; height: 214px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjA6QAtEjeKyqkSlMfBPTct4P_Vi5XCUjulkH0DhmRQmfycYXY-wgZRAPMbViIW5bq0-uj75upkcGYyIzHC4voucoNkojIjw2FmWtzkOPKX_M1fhUCNIjEzytIO0xLIuN5DCEqY/s320/soap_ball.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5464375276551634370" border="0" /></a><br /><br /><div style="text-align: left;"><br />சோப்புக்குமிழ்கள் ஊதி விளையாடும்<br />சிறுபிள்ளையாய்<br />உன் பார்வைகளை விசிறிச்செல்கிறாய்<br /><br />ஒவ்வொரு குமிழும் என் உலகையே<br />பிரதிபலித்தபடி யாருக்காகவுமில்லாமல்<br />மிதந்து கொண்டிருந்தது<br /><br />விரும்பி விரும்பிச்சென்று<br />குமிழ்களை தொடவிரும்பும் சிறுவனாய்<br />இலக்கற்றலையும் உன் பார்வைப்புலத்தில்<br />பட்டுவிடத் தவிக்கிறேன் நான்<br /><br />என்செய்வேன்,<br />விரல்தொடும் அக்கணமே குமிழுடைந்து<br />என் உலகமும் சிதறுகிறது<br /><br />இன்னும் சிலமுறை குமிழ்களை<br />இழந்தபின்தான் புரிகிறது<br /><br />என் உலகம் என் கைகளில் இருப்பதைவிட<br />உன் பார்வையில் இருப்பதனால்தான்<br />இன்னும் இருந்துகொண்டிருக்கிறது</div>Bee'morganhttp://www.blogger.com/profile/17499868778064830704noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-27865649.post-88424224140494870322010-01-12T11:01:00.002+05:302010-01-12T11:07:06.464+05:30துளி விஷம்<div>கோபம் கொள்ள முடியா </div><div>நபர்கள் மீது </div><div>கோபம் கொள்ளும் நேரங்களில்</div>கைக்கெட்டும் தூரத்தில் இருக்கும்<div>ஜீவராசிகளனைத்தும் </div><div>அவனாகவே உருக்கொள்கின்றன</div><div><br /></div><div>நீ, அவன், அவள் என்று அதற்கு</div><div>பேதமில்லை</div><div><br /></div><div>சின்ன பென்சில் கூட</div><div>கொலைக்கருவியாகிறது</div><div><br /></div><div>குறைந்தபட்ச தண்டனையாய்</div><div>மரணதண்டனை அளித்து</div><div>கூர் உடைக்கிறேன்</div><div><br /></div><div>கருவிகளில்லா நேரங்களில்</div><div>வெறும் கையே<br /></div><div>போதுமானதாயிருக்கிறது</div><div><br /></div><div>கையில் படியும் இரத்தக்கறை</div><div>இரசிக்கையில்</div><div>என்னையுமறியாமல் </div><div>முளைத்துவிடுகின்றன</div><div>இரு கோரைப்பற்கள்</div><div><br /></div><div>தெருவில் கலவிசெய்யும் நாயை</div><div>கல்லெடுத்து எறிகிறேன்</div><div>அந்த நாயாய் என்னை</div><div>ஒருவன் சொல்லால் அடித்தது</div><div>கல்லாய் பறக்கிறது</div><div><br /></div><div>வீட்டில் நுழைந்து காலணி விடுகையில்</div><div>குதித்தோடும் கரப்பானை</div><div>துரத்திச் சென்று மிதிக்கையில்</div><div>வாயொழுகும் இரத்தம் சுவைக்கிறது</div><div><br /></div><div>ஆற்றாமை, கோபம், காழ்ப்பு</div><div>எந்த கோப்பையிலிருந்தாலும்</div><div>விஷம் ஒன்றுதானே..!</div><div><br /></div><div>சாக்ரடீசாக விரும்பியே</div><div>பருகுகிறேன்</div><div>ஒவ்வொரு துளியையும்</div><div><br /></div><div>விஷம் என்னைப் பருகும் வரை<br /><br /><a style="color: rgb(102, 0, 0);" href="http://naayakan.blogspot.com/2009/11/blog-post_25.html"><span style="font-weight: bold;">உரையாடல் கவிதைப்போட்டிக்காக.....</span></a><br /><br /><a style="color: rgb(102, 0, 0);" href="http://www.tamil.blogkut.com/uraiyaadal.php"><span style="font-weight: bold;">போட்டிக்கான <span></span></span><span style="font-weight: bold;">எல்லாக்</span><span style="font-weight: bold;"><span style="font-weight: bold;"></span> கவிதைகளும் இங்கே.... </span></a><br /></div>Bee'morganhttp://www.blogger.com/profile/17499868778064830704noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-27865649.post-7945187879816707292009-11-30T14:41:00.002+05:302009-11-30T14:45:19.606+05:30விகடனில் புத்தகம்இந்த வார (02/12/2009) விகடனில் புத்தகம் வலைப்பூவைப் பற்றிய அறிமுகம் 'வரவேற்பறை' பகுதியில் இடம்பெற்றுள்ளது. உடன்வரும் நண்பர்கள் அனைவருடனும் இம்மகிழ்வைப் பகிர்ந்துகொள்கிறேன் :)<br /><br />மேலும் தகவல்கள் <a href="http://puththakam.blogspot.com/2009/11/blog-post_27.html">இங்கே</a><br /><br />- Bee'morganBee'morganhttp://www.blogger.com/profile/17499868778064830704noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-27865649.post-24301744010949811952009-11-25T21:00:00.012+05:302009-11-26T14:00:24.185+05:30பூவும் தலையும்- தொடர்பதிவுகொஞ்ச நாட்களாகவே இணையம் பக்கம் வரமுடியாதபடி ஆணிகள் பெருகியிருந்த நிலையில், சேரலிடமிருந்து கிடைத்தது இந்த தொடர்பதிவு அழைப்பு.. அண்ணன் சொல்லிட்டாருல்ல.. தட்ட முடியுமா? இதோ என் பங்குக்கு நானும் தொடர்கிறேன்..<br /><br />இந்தத் தொடர் பதிவுக்கான விதிகளாகக் கொடுக்கப்பட்டிருப்பவை<br /><br />1. பிடித்தவர்களும், பிடிக்காதவர்களும் தமிழ்நாட்டிற்குள்ள இருக்கணும். (நீங்க எழுதறப்பவோ நாங்க அதைப் படிக்கறப்பவோ அவரு ஷீட்டிங்குக்கோ, மீட்டிங்குக்கோ வெளிநாடு போயிருக்கலாம்.. தப்பில்ல!)<br /><br />2. நீங்க இதை எழுத அழைக்கிற பதிவர் குறைந்தது இருவராகவும், அதிகபட்சம் ஐவராகவும் இருக்கலாம்<br /><br />3. பிடித்தவரோ, பிடிக்காதவரோ கண்டிப்பாய் பிரபலமானவராய் இருக்க வேண்டும். அவங்களை உங்களுக்கு இப்பத்தான் பிடிக்கல, பின்னாடி பிடிக்கலாம்ங்கற சமயத்தில தற்போது-ன்னு சேர்த்திக்கலாம்.<br /><br />4. கேள்விகள் குறைந்தது ஏழு இருக்கணும். ஆனா பத்தைத் தாண்ட வேண்டாம்.<br /><br />ம்ம். இது போதும். இனி எனக்குப் பிடித்த சில தலைகள்..<br /><br />1)தொலைக்காட்சியில்<br /><span style="color: rgb(0, 102, 0);">பிடித்தவர்கள்:</span><br />கோபிநாத், அனு ஹாசன், சின்மயி (எல்லாரும் விஜய் டிவியான்னு கேக்காதீங்க.. இது தற்செயலானதே )<br /><br /><span style="color: rgb(255, 0, 0);">பிடிக்காதவர்கள்:</span><br />சுஹாசினி<br />விதிவிலக்கில்லாமல் சன்மியூசிக்கின் அனைத்து தொகுப்பாளர்களும்<br />மானாட மயிலாட வரும் நடுவர்கள் அனைவரும்<br /><br />2) விளம்பரங்களில்<br /><span style="color: rgb(0, 102, 0);">பிடித்தவர்கள்: </span>சிலருண்டு. ஆனால் பெயர் தெரியாது. அடுத்த முறை டிவியில் வரும் போது காட்டறேன் ;)<br /><br /><span style="color: rgb(255, 0, 0);">பிடிக்காதவர்கள்:</span><br /><br />அப்பாஸ் - பத்து நாயகிகளுடன் உப்புக்குச் சப்பாணி கேரக்ட்டராக இருந்தாலும் அவரோட மனதைரியத்துக்காக<br /><br />சூர்யா : சுடர்மணி ஜட்டிகளைத் தவிர பாக்கி எல்லாத்திலயும் நடிச்சுட்டார்னு நினைக்கிறேன். இவர் கொஞ்சம் விளம்பரங்களைக் குறைச்சுகிட்டா நல்லாயிருக்கும்<br /><br />அப்புறம் நமீதாவுக்கும் TMT கம்பிக்கும் என்ன சம்பந்தம்னு யாராவது தெரிஞ்சா சொல்லுங்க<br /><br />3) படத்தயாரிப்பில்<br /><span style="color: rgb(0, 102, 0);">பிடித்தவர்கள்:</span><br />பிரகாஷ்ராஜ், ஷங்கர் அவசரத்தில் நினைவுக்கு வராத இன்னும் சிலர்<br /><br /><span style="color: rgb(255, 0, 0);">பிடிக்காதவர்கள்:</span><br />கலாநிதிமாறன், உதயநிதி (இவங்கள்லாம் நெனச்சா குருவி மாதிரி ஒரு படம் எடுக்கறதுக்கு தரமா இன்னும் நாலு படம் எடுக்கலாம். எவ்வளளோ பண்றாங்க. இதப் பண்ண மாட்டாங்களா? )<br /><br />4) வசனத்தில்<br /><span style="color: rgb(0, 102, 0);">பிடித்தவர்கள்:</span><br />எப்போதும் சுஜாதா :) அப்புறம் பாக்யராஜ், விஜி, சிற்சில முறைகள் பாலகுமாரன்<br /><br /><span style="color: rgb(255, 0, 0);">பிடிக்காதவர்கள்:</span><br />கலைஞர்<br /><br />5) எழுத்தில்<br /><span style="color: rgb(0, 102, 0);">பிடித்தவர்கள்:</span><br />சுஜாதா, கல்கி, எஸ்ரா, வண்ணதாசன், கி.ரா இது கொஞ்சம் பெரிய பட்டியல்.. அதனால இத்தோட போதும்<br /><br /><span style="color: rgb(255, 0, 0);">பிடிக்காதவர்கள்:</span><br />சாருவின் சில எழுத்துகள் அதன் காட்டத்தினாலேயே பிடிக்காமல் போனது. ஒரு சில இலக்கிய அரசியல்களில் மட்டும் ஜெமோ<br /><br />6) பாடலில்<br /><span style="color: rgb(0, 102, 0);">பிடித்தவர்கள்:</span><br />SPB, ஜேசுதாஸ், விஜய் ஜேசுதாஸ், ஜெயச்சந்திரன்,கார்த்திக், சித்ரா, ஹரிணி, ஷ்ரேயா கோஷல்<br /><br /><span style="color: rgb(255, 0, 0);">பிடிக்காதவர்கள்:</span><br />சில பாடல்களில் மனோ, மற்றபடி பெரிதாக யாரும்இல்லை<br /><br />7) ஓவியர்களில்<br /><span style="color: rgb(0, 102, 0);">பிடித்தவர்கள்:</span><br />மாருதி, மதன், மணியம் செல்வன்<br /><br /><span style="color: rgb(255, 0, 0);">பிடிக்காதவர்:</span> நான் சமீபத்தில் வாங்கிய பொன்னியின் செல்வன் பதிப்புக்கு <a href="http://twitter.com/beemorgan/status/3143379179">ஓவியம்</a> வரைந்தவர். வரைந்தவர் பெயர் போடவில்லை. குந்தவையைப் பார்த்து டென்சனாயிட்டேன். ஸ்ஸ்ஸ்ஸ். வந்தியத்தேவன் ஒரு படி மேலே போய் காமெடி பீஸ் மாதிரி இருந்தார். இந்த மாதிரி படம் போடறதுக்கு படம் இல்லாமலேயே பொசெ அருமையா இருக்கும்.<br /><br />அப்பாடா.. ஒரு வழியா முடிச்சிட்டேனா.. அடுத்து இன்னும் மூணு பேர கோத்துவிடனுமாம்.. இதோ<br /><br /><a href="http://www.rejovasan.com/">ரெஜோ</a><br /><a href="http://vurathasindanai.blogspot.com/">சாணக்கியன்</a><br /><a href="http://the-other-side-of-you.blogspot.com/">Smiley</a><br /><br />வாங்க மக்கா. .வந்து ஒரு அட்டண்டன்ஸ் போடுங்க.. :)Bee'morganhttp://www.blogger.com/profile/17499868778064830704noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-27865649.post-48166591891109033692009-09-16T18:42:00.011+05:302009-09-16T19:23:57.018+05:30அலைக்குறிப்புகள்-3<a href="http://beemorgan.blogspot.com/2009/07/i.html">அலைக்குறிப்புகள்-1</a><br /><a href="http://beemorgan.blogspot.com/2009/09/2.html">அலைக்குறிப்புகள்-2</a><br /><br />நாங்கள் வந்தடைந்த டச் பேலஸ், உண்மையில் கொஞ்சம் பெரிய சைஸ் பங்களா மாதிரிதான் இருந்தது. இரண்டடுக்குகள், விஸ்தாரமான அறைகள், நீண்டிருக்கும் திண்ணையென நீண்டு படுத்திருந்தது அந்த மாளிகை.<br /><br />16ம் நூற்றாண்டில் இதனைக்கட்டியர்வகள் போர்ச்சுக்கீசியர்களே. அதற்கடுத்த நூற்றாண்டில், தொடர்ந்து வந்த காலனியாதிக்கப் போரில், டச்சுக்காரர்கள் கொச்சினைக் கைப்பற்ற இந்த அரண்மனையும் அவர்கள் வசமானது. அவர்களும் அவர்கள் பங்குக்கு அங்கங்கே சில மாறுதல்கள், அலங்காரங்கள் செய்து, போரினால் கோபமுற்றிருந்த திருவாங்கூர் மகாராஜாவுக்கு இந்த மாளிகையை பரிசாக அளித்துவிட்டனர்.<br /><br />அன்றிலிருந்து இது ஒரு ராஜ மாளிகை.<br /><br />ராஜாக்களெல்லாம் ராஜ்ஜியமிழந்து போக, இப்போது இந்த மாளிகை ஒரு அருங்காட்சியகமாக செயல்பட்டுவருகிறது.<br /><br />ஏறக்குறைய ஒரு மணிநேரத்திற்கும் மேல் இந்த காட்சியகத்தினுள் அலைந்தோம். ராஜாக்கள் பயன்படுத்திய கர்சீப்பிலிருந்து பல்லக்கு வரைக்கும் காட்சிக்கு வைத்திருக்கின்றனர். குடும்ப ஓவியங்கள், கேரளாவின் அரச பரம்பரையை விளக்கும் ஓவியங்கள் என்று விதவிதமாய் காட்சிக்கு கிடைக்கின்றது அரச வாழ்க்கை.<br /><br />மேற்கத்திய கட்டிடக்கலைக்கும் இந்திய கட்டிக்கலைக்குமான கலப்பை இங்கு தெளிவாக உணரமுடியும். கட்டிடத்தின் வெளிப்புற அமைப்பும் நுழைவாயிலும் பாரம்பரிய கேரள வடிவில் அமைந்திருந்தாலும், உள்நுழையும் போது உயர்ந்த நிலைப்படிகளும் கதவுகளும் மேல் நோக்கிய ஆர்க் வடிவில் மேற்கத்திய பாணியை நினைவுபடுத்துகின்றன.<br /><br /><a href="javascript:;" onmousedown="if(document.getElementById('alai_3').style.display == 'none'){ document.getElementById('alai_3').style.display = 'block'; }else{ document.getElementById('alai_3').style.display = 'none'; }">மேலும் படிக்க...</a><br /><div class="mid" id="alai_3" style="display: none;"><br />முக்கியமாக எனக்குப் பிடித்த ஒரு பகுதி, முதல்தளத்தில் ஒரு அறை முழுக்க ராமாயணக் காட்சிகளை ஒரு வகை கொலாஜ் சித்திரங்களாக சுவர் முழுவதும் தீட்டியுள்ளனர். கொஞ்சம் நிறம் மங்கியிருந்தாலும், இத்தனை காலத்திற்குப் பிறகும், அதன் கம்பீரம் குறையாமல், ராமனும் லக்குவணனும் இன்ன பிறரும் காட்சி தருகின்றனர். அப்படி ஒரு உணர்ச்சி மயமான ஓவியங்கள். நிச்சயம் ஒரு நாள் முழுவதும் பார்த்துக்கொண்டிருக்கலாம். பலமணிநேர அவதானிப்பிற்குப் பிறகும், நாம் தவறவிட ஒரு தகவல் இந்த ஓவியங்களில் ஒளிந்திருக்கும். அப்படி பார்த்து பார்த்து தீட்டியிருக்கின்றனர்.<br /><br />அதன் பிறகான எங்கள் பயணம், சான்டா க்ருஸ் தேவாலயம். இந்நேரம் நீங்களே ஊகித்திருக்கலாம், இந்த தேவாலயம் எவ்வளவு பழமையானதென்று. 1505 ல் கட்டப்பட்டது. போர்த்துக்கீசிய மொழியில் சாண்டா க்ருஸ் என்றால் holy cross என்று பொருள் சொல்கின்றனர். அத்தனை நுண்வேலைப்பாடுகளுடன், தொலைவிலிருந்து பார்க்கும் போதே புருவங்களை உயரச்செய்கிறது. கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி செல்கையில் பிரமாண்டமாய் உயர்ந்து நிற்கிறது இந்த ஆலயம். கோதிக் வகை கட்டிடக்கலையின் சிறந்த உதாரணமாகச் சொல்லப்படுகிறது இந்த தேவாலயம்.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEge8bpqZH6HrFyoAjhFF8ouAfQ0EA_1gtisVeZ2gzDrRf8Xte34gQ05O-t-16LqYhbsfG4_qqv_Xv6o0-s0m7sV_xbY8DEawHJ6jHrtD6umdECQpcLQxXUHkeO2sQH5mVZw1vIw/s1600-h/Apr06_0927.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 240px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEge8bpqZH6HrFyoAjhFF8ouAfQ0EA_1gtisVeZ2gzDrRf8Xte34gQ05O-t-16LqYhbsfG4_qqv_Xv6o0-s0m7sV_xbY8DEawHJ6jHrtD6umdECQpcLQxXUHkeO2sQH5mVZw1vIw/s320/Apr06_0927.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5382053897719740338" border="0" /></a><br />கொச்சின் போர்த்துக்கீசியர்களிடமிருந்து டச்சுக்காரர்களின் வசமான போது, இந்த தீவிலிருந்த பெரும்பான்மையான கத்தோலிக்க கட்டிடங்கள் அழிக்கப்பட்டன. அவர்களும் கூட இந்த தேவாலயத்தைப் பார்த்து வியந்திருக்கவேண்டும். அவர்களிடமிருந்து தப்பிப்பிழைத்தாலும் பின்னாளில் ஆங்கிலேயர்களின் வசமான போது, கொஞ்சம் சேதாரம் சுமந்து அதன்பின் சரிசெய்யப்பட்டு இன்னமும் ஒலித்துக்கொண்டிருக்கிறது இந்த தேவாலயத்தின் மணியோசை. கிட்டத்தட்ட நடை சாத்தும் நேரத்தில் வந்ததால், இங்கு அதிக நேரம் செலவழிக்கமுடியவில்லை. கொஞ்சம் மனவருத்தத்துடன் எங்களின் அடுத்த இலக்கை நோக்கினோம்.<br /><br />இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தையும் சொல்லியே ஆக வேண்டும். இந்த தீவினுள் சுற்றியலைவதற்கு யாரிடமும் உதவி கேட்கத் தேவையில்லை. திருப்பத்திற்கு திருப்பம், ஒவ்வொரு தெருவிலும் தெள்ளத்தெளிவாய் திசைகாட்டுகின்றன வழிகாட்டிப் பலகைகள். பார்க்கவே சந்தோஷமாய் இருந்தது. பார்க்கவேண்டிய ஒரு இடத்தை தவறவிட கொஞ்சமும் வாய்பளிக்காமல் நம்மை இட்டுச்செல்கின்றன. கொச்சின் மாநகராட்சி நிர்வாகத்திற்கு தாராளமாய் ஒரு ஷொட்டு. :)<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEizN0YsMttmNNRD0RzP8IenAqqXJKNLTWfwimejQ2FKOscH_oRYVbFfVpWF8ZHCZwXtP9lL26DL-Q-StxOBH1zJ5jpSOZf5A5sm7Ntgp3WXqQmahdlh5wgqd8UdK3fB4I8Dq4aD/s1600-h/kochin+copy.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEizN0YsMttmNNRD0RzP8IenAqqXJKNLTWfwimejQ2FKOscH_oRYVbFfVpWF8ZHCZwXtP9lL26DL-Q-StxOBH1zJ5jpSOZf5A5sm7Ntgp3WXqQmahdlh5wgqd8UdK3fB4I8Dq4aD/s320/kochin+copy.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5382054669305956274" border="0" /></a><br />சரி.. வாங்க.. அடுத்தது, சான்டா க்ருஸ் தேவாலயத்திலிருந்து நடை பயிலும் தொலைவில் உள்ளது, St.Francis தேவாலயம் (அ) வாஸ்கோடகாமா சர்ச். இது நானே எதிர்பார்க்காத பம்பர் பிரைஸ்.<br /><br />இந்தியாவின் மிகப்பழமையான தேவாலயம் இது.<br /><br />சாண்டில்யனின் 'கடல் புறா'வில் எனக்குப் பிடித்த ஒப்புமை ஒன்று.<br /><br />கடல் ஒரு காந்தம். ஒரு முறை கடலோடியாக இருந்தவன் அந்த ஈர்ப்பின் புலத்திலிருந்து வெளியேறுவது கடினம். அவனுக்கு நிலம் ஒரு நிலையற்ற இடமாக மயக்கம் கொள்ளச்செய்யும். கடலோ அவனை மீண்டும் மீண்டும் தன்னிடம் இழுத்து கிறக்கம் கொடுக்கும் - என அமீரின் கூற்றாக வரும்.<br /><br />எனக்கும் எப்போதுமே கடல் பயணத்தைப் பற்றிய ஒரு கற்பனை உண்டு. வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு உணர்வாக. நாற்புறமும் நீர் சூழ்ந்த<br />திசைகள் தொலைத்த ஒரு பயணமாக. ஒரு சாகசப் பயணமாக.. சிறுவயதில் சிந்துபாத்திலிருந்து கொலம்பஸின் வாழ்க்கை வரலாறு வரை நான் படித்த அனைத்துமே இந்த கற்பனையை தூண்டிவிட்டே சென்றிருக்கின்றன.. இப்போதைய நவீன வழிகாட்டி கருவிகள், வானிலை முன்னெச்சரிக்கைகள் எதுவுமே இல்லாமல் மரக்கலங்களில் கடற்பயணம் எப்படி இருந்திருக்கும்..<br /><br />கடலென்றால் இப்படி இருக்கும் அதில் பயணமென்றால் அப்படி இருக்கும் என்பதெல்லாம் ச்சும்மா.. கடல் என்பது கடல்.. அவ்வளவுதான். அந்த உணர்வை கடல் மட்டுமே தரமுடியும். மனிதனை அற்பனாக சுருங்கச்செய்யும் அந்த பிரம்மாண்டம் கடலால் மட்டுமே முடியும்.<br /><br />தஞ்சாவூரிலிருந்து திருவாரூர் செல்லும் சாலையில் புன்னைநல்லூரில் உள்ளது ராணிசமுத்திரம் ஏரி. இன்றைக்கு ஆக்கிரமிப்புகளில் அகப்பட்டு சிறுத்திருந்தாலும், முன்னாளில் இன்னும் விஸ்தாரமாக இருந்திருக்க வேண்டும். அதற்கு பெயர்க்காரணமாக இப்பகுதியில் வழங்கப்பட்டு வரும் வாய்வழிக்கதையொன்று.<br /><br />முன்னொரு காலத்தில் தஞ்சையை ஆண்ட ஒரு ராஜா ஒருவர் போரிடச்செல்கையில்தான் முதன் முதலில் கடலைப் பார்த்தாராம். போர்முடிந்து திரும்பி வந்தவர் தன் ராணியிடம் தான் பார்த்த கடலைப்பற்றி ஆச்சரியம் மேலிட விவரித்திருக்கிறார். அவர் என்ன சொல்லியும் ராணியால் அவர் சொல்லும் அந்த 'கடலை' கற்பனை செய்யமுடியவில்லை. அவர்தான் ராஜாவாச்சே.. உடனே ஆட்களை அழைத்து மிக பிரம்மாண்டமாக இந்த ஏரியை வெட்டி நீர் நிரப்பினாராம். அப்போதும் அவருக்கு திருப்தியில்லை. மீண்டும் மீண்டும் அதனை விஸ்தரித்திருக்கிறார்.. கடைசி வரை அவரால் கடலை கொண்டுவரமுடியவில்லை.. கடைசியல் ஏமாற்றத்துடன்<br />'கடல் னா கிட்டத்தட்ட இந்த மாதிரி இருக்கும்' என்று ராணியிடம் சொன்னதாக முடிகிறது இந்த கதை. ராணிக்கு சமுத்திரத்தைக் காட்ட வெட்டியதால் இதுவும் ராணிசமுத்திரம் ஆனது.<br /><br />அதுதான் கடல்.<br /><br />ஆபத்துகள் நிறைந்த ஒரு சாகசப் பயணம் அது. ஒவ்வொரு பயணமும் ஒரு கொண்டாடத்தகுந்த வெற்றி. அந்த வெற்றி போதைதான் அவனை மீண்டும் மீண்டும் ஈர்த்திருக்க வேண்டும்.<br /><br />அப்படித்தான் சுமார் 510 ஆண்டுகளுக்கு முன்பு, கொலம்பஸ் மேற்கு நோக்கி பயணத்தை தொடங்கிய காலத்தில் கிழக்கு நோக்கி தன் பயணத்தைத் தொடங்கி சரியாக 317 நாட்கள் கழித்து இந்தியாவிற்கு வெற்றியுடன் வந்தடைந்தார் வாஸ்கோடகாமா. ஒரு முறை லிஸ்பனிலிருந்து கோழிக்கோடு வரை வந்தசேர்தலே கற்பனைக்கு அப்பாற்பட்ட சாதனையாக கருதப்பட்ட காலத்தில்,<br />முதல் முறை கடலோடியாக வந்தவர், வெற்றிச்செய்தியுடன் திரும்பிச்சென்று அடுத்த முறை போர்க்கலங்களுடன் வந்திறங்கினார். அப்போதும் கடல் அவரை விடவில்லை. இரண்டாவது முறையும் திரும்பிச்சென்று தன் மூன்றாவது பயணமாக 1519 ல் திரும்பவும் இந்தியா வந்தவர், ஒரு வருடம் இந்தியாவில் போர்த்துக்கீசிய வைசிராயாக இருந்துவிட்டு 1524ல் இங்கேயே காலமானார்.<br /><br />அவரின் கல்லறை இந்த தேவாலயத்தில்தான் அமைந்துள்ளது.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi29X6hERHu5Dtk13wLTVW_E40blQ0SUDIwnEU7Jz_Up9cQTtZVk1fJkMsjce35o0RxQPLXukNbmzdXYjinVnit2bYe4cgY8qPIPJKzcEKr42XmCS0Oj5z2hW-jUNzR1Uxct9ny/s1600-h/Apr06_0940.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 240px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi29X6hERHu5Dtk13wLTVW_E40blQ0SUDIwnEU7Jz_Up9cQTtZVk1fJkMsjce35o0RxQPLXukNbmzdXYjinVnit2bYe4cgY8qPIPJKzcEKr42XmCS0Oj5z2hW-jUNzR1Uxct9ny/s320/Apr06_0940.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5382057330401480402" border="0" /></a><br />கடலென்னும் காந்தம் கடலோடியை எப்போதும் விடுவதில்லைதான். பாதை கண்டுபிடிப்பதுதான் வாஸ்கோடகாமா வின் ஒரே குறிக்கோளாக இருந்திருந்தால் அவர் முதல் தடவையோடு நிறுத்திக்கொண்டிருக்கலாம். அல்லது பதவியும் செல்வமும் ராஜ்ஜிய விஸ்தரிப்பும் குறிக்கோளெனில்<br />இரண்டாம் முறை போர்க்கலங்களோடு வந்து வெற்றிவாகை சூடிய போதே பயணத்தை முடித்துக்கொண்டிருக்கலாம். மூன்றாம் முறையும் அவரை ஈர்தது எது? சில நேரங்களில் சென்று சேரும் இடம் ஒரு சாக்கு போக்கு மட்டுமே. அந்த இடத்தைவிட அதை நோக்கிய பயணமே போதை தருவதாக அமைவதுண்டு. அந்த போதைதான் அவரை ஆட்டுவித்திருக்கிறது.<br /><br />சரித்திரத்தின் பாதைகளில் காற்றின் திசைகளை எதிர்த்து கடலில் தன் காலனியை நிறுவிய அந்த மாலுமி முதன் முதலில் நிரந்தரமாக நிலத்தில் உறங்கிய இடம் இது என்ற நினைவே சிலிர்க்க வைத்தது. அப்போதும் கூட கடல் அவரை விட்டுவிடவில்லை. புதைக்கப்பட்ட பதினைந்து ஆண்டுகளுக்குப் பின் அவரது சவப்பெட்டியின் மிச்சங்கள் இங்கிருந்து போர்த்துக்கலுக்கு கடல் மார்க்கமாக கொண்டுசெல்லப்பட்டு லிஸ்பனில் உள்ள அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டன.<br /><br />ஆனால், அவர் முதலில் புதைக்கபட்ட கல்லறை இன்றும் இங்கு காணக்கிடைக்கிறது.<br /><br />அவர் நினைவாக இந்த தேவாலயமும் வாஸ்கோடகாமா தேவாலயம் ஆனது. இதற்கடுத்த ஒரு சதுக்கமும் அவர் பெயரால் அழைக்கப்படுகிறது.<br /><br />(மீண்டும் அலையலாம்)<br /></div>Bee'morganhttp://www.blogger.com/profile/17499868778064830704noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-27865649.post-57842578903502283462009-09-06T19:35:00.007+05:302009-09-30T14:50:13.887+05:30அலைக்குறிப்புகள்-2<a href="http://beemorgan.blogspot.com/2009/07/i.html">அலைக்குறிப்புகள்-1</a><br /><br />எங்கள் சொந்த கிராமத்தின் ரயில்வே ஸ்டேஷனுக்கும் நாங்கள் வந்திறங்கிய போர்ட் கொச்சியின் போட் ஜெட்டிக்கும் பெரிய அளவு வித்தியாசங்கள் ஏதுமில்லை. ஆரவாரமும் பரபரப்பும் இல்லாமல் மிக அமைதியாக மற்றொரு ஞாயிற்றுக் கிழமையை வரவேற்றுக்கொண்டிருந்தது அந்த நகரம்.<br /><br />ஊருக்குள் நுழைந்ததும் கண்ணில் படும் முதல் விஷயம், இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்சனை தொடர்பான சுவரொட்டிகள். எனக்கே கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருந்தது. யூதர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதி அது என்று பின்புதான் தெரிந்து கொண்டோம்.<br /><br />பெரிதாக திட்டம் எதுவும் இல்லை எங்களிடம். போட் ஜெட்டியிலிருந்து வெளியில் வந்தவுடன், இடது புறம் 'டச் பேலஸ்' என்று போர்ட் போட்டு 1.5 கிலோமீட்டர்கள் என்று போட்டிருந்தது. அதுவே எங்களின் முதல் திட்டமானது. வெயிலின் உக்கிரம் தொடங்காத காலை வேளை என்பதால் நடந்தே செல்லலாம் என்று தொடங்கினோம். மிக அமைதியான கடைவீதி.. மிக மிக அமைதியான தெருக்கள் என்று வழி நெடுகிலும் கிராமத்துக்கான உணர்வைத் தந்து செல்கிறது. ஒரு காலத்தில் செழிப்புடன் வாழ்ந்த சுவடுகளும் அங்கங்கே காணக்கிடைக்கின்றன. வாசனைப் பொருட்கள் ஏற்றுமதி செய்வதாய் அறிவித்த பெயர்ப்பலகை ஒன்று ஏறக்குறைய நூறு வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்டு காலத்தின் சுவடுகளைச்சுமந்த மிச்சம் இன்னமும் எஞ்சிய படி கண்ணில் பட்டது. கடையின் கதவுகள் திறந்திருக்காத நிலையில் இன்னமும் அந்த கடை அதே இடத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறதா என்று ஆச்சரியப்படுத்தியது.<br /><br /><a href="javascript:;" onmousedown="if(document.getElementById('alai_2').style.display == 'none'){ document.getElementById('alai_2').style.display = 'block'; }else{ document.getElementById('alai_2').style.display = 'none'; }">மேலும் படிக்க...</a><br /><div class="mid" id="alai_2" style="display: none;"><br />முதலில் சென்ற டச் பேலஸ் பார்வையாளர் நேரம் 10 மணிக்குத்தான் தொடங்குவதாய் அறிந்து, அதே திசையில் இன்னும் சில நூறு மீட்டர்களில் சைனகோஜ் என்றழைக்கப்படும் யூத ஆலயத்திற்குச் சென்றோம். செல்லும் வழியில் அனேகமாய் யூத முகங்கள் எதிர்ப்படுகின்றன. பல நூற்றாண்டுகளுக்கு முன் வந்து குடியேறியவர்கள் அவர்கள். கொஞ்சம் பின்னோக்கி பார்க்கையில், கி.மு 700 வாக்கில் வாணிபம் செய்வதற்காக முதன் முதலில் யூதர்கள் இங்கு வந்ததாக சொல்லப்படுகிறது. அதன் பின் கிங் சாலமனின் காலத்தில் கொஞ்சம் இஸ்ரேல் இரண்டாக பிரிந்த போது தஞ்சமடைந்தவர்கள் கொஞ்சமென, வளர்ந்து இப்பகுதி இன்று jew town என்று அழைக்கப்படுகிறது.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhfauhvPSDzUoNoNkY0xHowPa3kxSJIvIybJIRXYRxFULVdZhBG060g5s0WrBQorhgwxQQa3W3KI38fafiHHPx5GsH1yyL3pNRCo0SG3KfYinngFedJ8ueP2JSbB2je_zQ5mM5t/s1600-h/Apr06_0906.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 240px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhfauhvPSDzUoNoNkY0xHowPa3kxSJIvIybJIRXYRxFULVdZhBG060g5s0WrBQorhgwxQQa3W3KI38fafiHHPx5GsH1yyL3pNRCo0SG3KfYinngFedJ8ueP2JSbB2je_zQ5mM5t/s320/Apr06_0906.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5380986022280730658" border="0" /></a><br />காமன்வெல்த் நாடுகளில் இருப்பதிலேயே மிகப்பழமையான சைனகோஜ் இது. இடைக்காலத்தில் கொச்சின் ஒரு சில ஆக்கிரமிப்புகளுக்கு உள்ளானபோதும் இவையனைத்திற்கும் தப்பி இன்றும் உயிர்ப்புடன் உள்ள இந்த ஆலயம் 1568ல் நிர்மாணிக்கப்பட்டது. இங்கு ஹீப்ரு மொழியில் அமைந்த கல்வெட்டுகள் சிலவும் காணக்கிடைக்கின்றன. அவர்களின் வழிபாட்டு முறைகளோ, சடங்குகளோ எதுவும் எனக்குத் தெரியாதெனினும், உள்நுழைந்தவுடனேயே வந்து கவிழ்ந்து கொள்ளும் அடர்ந்த மெளனம், ஒரு ஆலயத்தினுள் நாம் இருப்பதை சொல்லிச்செல்கிறது. பல நூறு வருடங்களாக கடவுளின் சாலையாக இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் அந்த இடத்தினுள் சில நிமிடங்கள் மெளனமாய் நின்ற பின் திரும்பினோம். இந்த ஆலயத்தின் முன்புறம் இந்தியாவில் யூதர்களின் பாரம்பரியத்தை விளக்கும் காட்சி சாலை ஒன்றும் உள்ளது.<br /><br />அங்கிருந்து வரும் வழியெங்கும் சிறிதும் பெரிதுமாய் ஆண்டிக் எனப்படும் பழம்பொருள் விற்பனைக் கடைகள் ஏராளமாய் இருக்கின்றன. முழுக்க முழுக்க இங்கு வரும் வெளிநாட்டு பயணிகளைக் குறிவைத்து இயங்குபவை இந்தக் கடைகள். ஓவியம், சிற்பம், கைவினைப் பொருட்கள், பழங்கால சிலைகள், ஓலைச்சுவடிகள், பட்டு, வாசனைப்பொருட்கள், புத்தகங்கள், மூலிகைகள் என்று ஒன்றுக்கொன்று சம்ந்தமில்லாமல் பல பொருட்கள் ஒரே இடத்தில் கிடைக்கின்றன. (தனியாகவும் கிடைக்கின்றன) . என்னவாக இருந்த போதிலும் இவை அனைத்திற்கும் இடையில் நூலிழை போன்றதொரு தொடர்பு ஓடுகிறது. அது இந்தியா. வரலாற்றுப் புத்தகத்தில் இந்தியா என்ற நாட்டில் எதுஎதெல்லாம் சிறப்பானவை என்று உள்ளதோ, அது நூற்றாண்டுகளுக்கு முன்னராக இருக்கலாம் கவலையில்லை, அவையனைத்தும் இங்கு விற்பனைக்குக் கிடைக்கின்றன.<br /><br />இந்தியா என்ற ஒரு பிம்பம் மேற்கில் எப்படி பிரதிபலிக்கப்படுகிறது என்று இந்தக் கடைகளில் தெளிவாகத் தெரிந்துகொள்ளலாம்.<br />ஒரு சில பதிற்றாண்டுகளுக்கு முன் வெளிவந்த சில ஹாலிவுட் படங்களில், இந்தியா என்றாலே யானைகளும் பாம்பாட்டிகளும் மந்திரவாதிகளும் நிறைந்த ஒரு நிலம் என்பது மாதிரியான சித்தரிப்பு இருக்கும். அதற்கும் இதற்கும் பெரிதாக எதுவும் வித்தியாசம் இல்லை எனலாம். புத்தக்கடைக்குச் சென்றால், சல்மான் ருஷ்டி, கிரண் தேசாய், அருந்ததிராய் என்று மேற்கில் பிரபலமான எழுத்துகள் மட்டும் கிடைக்கின்றன. குறிப்பாக இன்னொரு விஷயமும் எல்லா கடைகளிலும் தவறாமல் கிடைக்கிறது. அது காமசூத்ரா. கொக்கோகரிலிருந்து வாத்ஸ்யாயனர் வரை பிறந்த தேசம் என்பதாலோ என்னவோ, வரும் வெளிநாட்டுப் பயணிகளில் இரண்டில் ஒருவர் தவறாமல் கேட்கும் விஷயம் இதுவாம். coffee table books என்றழைக்கப்படும் சைஸில் சில ஆயிரங்கள் விலையிட்டு அமோகமாய் விற்பனையாகின்றன இந்த புத்தகங்கள்.<br /><br />பட்டு ஆடைகள் நுண் வேலைப்பாடமைந்த தரை விரிப்புகளும் ஏராளமாய்க் கிடைக்கின்றன. இங்கு கடை வைத்திருப்போரில் பெரும்பாலானோர் காஷ்மீரிலிருந்து வந்ததாகச் சொல்கின்றனர். இந்த தரைவரிப்புகள் முதலான கைவினைப்பொருட்களும் அங்கிருந்துதான் வருகின்றனவாம். ஆச்சரியமாய் இருந்தது. இந்தியாவின் வடமுனையில் தயாராகும் ஒரு பொருளுக்கு தென்முனையில் இப்படி ஒரு சந்தை அமைந்திருக்கிறது. அதுவும் வெளிநாட்டு பயணிகளால் விரும்பி வாங்கிச்செல்லப்படுகிறது.<br /><br />இப்படியே ஒவ்வொரு கடையாக கடந்து டச் பேலஸ் க்கு வந்தடைந்தோம்.<br /><br />(மீண்டும் அலையலாம்)<br /></div>Bee'morganhttp://www.blogger.com/profile/17499868778064830704noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-27865649.post-89758940825088692272009-07-27T21:27:00.002+05:302009-07-27T21:33:21.099+05:30இன்னுமொரு பாதை<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEir4BHyueXeXiNNYck9GTRu6euxK42iMJWK7dmeKJDPxSzuFUO-GGkUXCzZLsSRk9QlScmV9sqHaAtW2wvpmriHnywkWA8NPXLhAMvSyKEdm84PBTn49etuMjBFp87UXXnaMJ0A/s1600-h/path.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 238px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEir4BHyueXeXiNNYck9GTRu6euxK42iMJWK7dmeKJDPxSzuFUO-GGkUXCzZLsSRk9QlScmV9sqHaAtW2wvpmriHnywkWA8NPXLhAMvSyKEdm84PBTn49etuMjBFp87UXXnaMJ0A/s320/path.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5363170827095802786" border="0" /></a><br />அன்பு நண்பர்களுக்கு வணக்கம்,<br /><br />இன்றிலிருந்து இனிதே துவங்குகிறேன், இன்னுமொரு பாதையில் என் பயணத்தை.<br /><br />நான் இதுவரை சந்தாதாரராக இருந்து கைதட்டி ரசித்துக்கொண்டிருந்த புத்தகம் வலைப்பூவில் இனி நானும் பங்குதாரராகிறேன். நான் அவ்வப்போது படிக்கும் புத்தகங்களின் ஒரு அறிமுகத்தை இந்த பக்கத்தில் இனி எழுதலாம் என்றிருக்கிறேன்.<br /><br />நினைக்கும் போதே ஒரு பயம் கலந்த சந்தோஷம் உண்டாகிறது. என்னை இன்னும் பல புதிய மனிதர்களிடம் இட்டுச்செல்லும் இந்த புதிய பாதை. திடுதிப்பென்று களத்தில் இறக்கிவிடப்பட்ட சிறுவனின் படபடப்புடன், தொடர்ந்து சிறப்பாகச் செய்யவேண்டும் என்ற ஜாக்கிரதை உணர்வும் சேர்ந்து, நான் கொள்ள வேண்டிய கவனத்தை இன்னும் அதிகரிக்கன்றன.<br /><br />ஊக்கமும் உற்சாகமும் அளித்து, வழித்துணையென இப்பயணத்தில் என்னை இட்டுச்செல்லும் சேரலுக்கும் ஞானசேகருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.<br /><br />இவர்கள் இருவருமாக இணைந்து 'புத்தகம்' வலைப்பூவிற்கென்று ஒரு அளவீட்டை முன்னமே ஏற்படுத்திவிட்டனர். இனியெழுதப்போகும் எனக்கிருக்கும் மிகப்பெரிய சவால், அவர்கள் ஏற்படுத்தியிருக்கும் அளவீடுகளைத் தொடர்வதே. என்னால் முடிந்த வரை இப்பணியை சிறப்பாகச் செய்ய விழைகிறேன்.<br /><br />என்னுடைய முதல் பதிவு '<a href="http://puththakam.blogspot.com/2009/07/40.html">மெளனியின் கதைகள்</a>' இங்கே.<br /><br />இந்த பக்கத்திலும் உங்களின் நேர்மையான விமர்சனங்களுக்காகக் காத்திருக்கிறேன்..<br /><br />நட்புடன்,<br />பாலாBee'morganhttp://www.blogger.com/profile/17499868778064830704noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-27865649.post-86219029190371394822009-07-23T07:37:00.008+05:302009-07-24T07:35:41.921+05:30கன சதுரம்எங்கிருந்து தொடங்க.. என்னவோ யோசித்து எங்கெங்கோ தேடி, ஏறக்குறைய 3 வருடங்களுக்கு முன் தொடங்கியும் விட்டேன் இந்த வலைப்பூவை.<br />முழு மூச்சுடன் இல்லாவிட்டாலும் அவ்வப்போது எழுதி வருகிறேன்.<br /><br />இந்த மூன்றாண்டு கால எழுத்தில் நான் சாதித்தது என்று பெருமையுடன் சொல்லிக்கொள்ள ஒரு விஷயம் உண்டென்றால் அது உறவுகள்தான். எத்தனையோ முகம் தெரியாத நண்பர்கள். எங்களுக்கிடையில் இருப்பது என்ன. ஏதோ ஒரு இழை.. ஒரே ஒரு ஒத்த உணர்ச்சி போதும். முரண்பட்டாலும் கூட போதும். எங்கிருந்தோ வந்து, வாழ்த்தி, வசைபாடி, திருத்தம் சொல்லி என்னை மென்மேலும் செதுக்கும் அந்த உறவுகள்தான் இந்த எழுத்தால் எனக்கு கிடைத்த பொக்கிஷம்.<br /><br />அப்படித்தான் போன வாரம் திடீர்னு ஒரு நாள் <a href="http://amsyed.blogspot.com/">அ.மு.செய்யது</a> interesting blog னு ஒரு விருது குடுத்து நம்மளையும் புல்(லா) அரிக்க வைச்சுட்டார். அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjN8T_SAUPHmJTqLs5UyIlM99MvhHRuc2haWoOlrB77GjAfj1JnrotGR6SLE7IH4hvoJKTHDaEJ-xwptgNBfJjmF67Mj3Zss2OE-NzUtSQ6zEu3HQld5WBgwX2OFmOG_N11NQnY/s1600-h/award_interesting.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 210px; height: 210px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjN8T_SAUPHmJTqLs5UyIlM99MvhHRuc2haWoOlrB77GjAfj1JnrotGR6SLE7IH4hvoJKTHDaEJ-xwptgNBfJjmF67Mj3Zss2OE-NzUtSQ6zEu3HQld5WBgwX2OFmOG_N11NQnY/s320/award_interesting.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5361471867744838546" border="0" /></a><br /><br /><a href="javascript:;" onmousedown="if(document.getElementById('int_blog').style.display == 'none'){ document.getElementById('int_blog').style.display = 'block'; }else{ document.getElementById('int_blog').style.display = 'none'; }">மேலும் படிக்க...</a><br /><div class="mid" id="int_blog" style="display: none;"><br /><br />இந்த விளையாட்டுக்கு விதிமுறை ரொம்ப சிம்பிள். எனக்குப் பிடித்த இன்னும் ஆறு சுவாரஸ்ய பதிவர்களுக்கு இந்த விருதை கடத்தனும். :) அவ்ளோதான். கொஞ்சம் கஷ்டமான வேலைதான்.<br />இருந்தாலும், என் கடன் விருது கொடுத்து எஸ்கேப் ஆவதே.. எனக்குப் பிடித்த சுவாரஸ்யமான ஆறு பதிவர்கள் கீழே. இன்னும் நிறைய பேர் இருக்காங்க. எண்ணிக்கை கட்டுப்பாட்டினால் ஆறுடன் முடித்துக்கொள்கிறேன்.<br /><br />சுற்றத்திலும் நட்பிலும் நிறைய சுவாரஸ்யமான பதிவர்கள் இருந்தாலும்,<br />இம்முறை, நான் இது வரை கண்டிராத அந்த முகம் தெரியா நண்பர்களுக்கு இந்த விருது சமர்ப்பணம்.<br /><br />இந்த மாய உலகம் தரும் சுதந்திரம் மிகப்பெரியது. எழுதுபவனின் எந்தவொரு பாதிப்பும் இல்லாமல், எழுத்துக்களை மட்டும் கொண்டுசேர்க்கும் வல்லமை இதற்குண்டு. அப்படி நான் ரசிக்கும் ஆறு பக்கங்கள் இவை. எல்லாம் ஒரே தளத்தில் இருக்கவேண்டிய அவசியமில்லை. ஒரு கனசதுரத்தைப் போல் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தளத்தில் இருக்கலாம். ஆனால் நான் ரசிக்கும் பக்கங்கள் இவை.. உங்களின் பார்வைக்கு..<br /><br /><a href="http://nchokkan.wordpress.com/">மனம் போன போக்கில்:</a><br /><br />இவரைப் பற்றி நான் அறிமுகம் கொடுத்தால் சரியாக இருக்காது. ஆனால், இவரின் வலைப்பதிவைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். கிட்டத்தட்ட இவரது நாட்குறிப்புகள்தான் இந்த வலைப்பூ. அபுனைவுகளை இத்தனை சுவாரஸ்யமாய் எழுதமுடியுமா என்று ஆச்சரியப்பட வைக்கும் எழுத்து இவருடையது. என்னை நோய்விட்டு வாழச்செய்வதில் சொக்கருக்கும் ஒரு பங்குண்டு. :)<br /><br />ஒரு வகை சுய எள்ளலுடன் இவர் எழுதும் கட்டுரைகள் எப்போதும் என் ஃபேவரிட்.<br /><br /><a href="http://www.thiruvilaiyattam.com/">கென்:</a><br /><br />ஹா..என்ன சொல்வது.. இவரின் புனைவுகளை புனைவுகள் என்று நம்புவது அத்தனை கஷ்டம். அப்படி ஒரு உயிர்புடன் எழுதும் எழுத்துகளுக்கு சொந்தக்காரர். இவரின் வலைப்பக்கத்தி்ல் நான் படித்த அந்த முதல் பதிவு இன்னும் நினைவில் நிற்கிறது.<br /><a href="http://www.thiruvilaiyattam.com/2008/09/blog-post_25.html">எனக்கு பெண்குழந்தை பிறந்திருக்கிறது</a>. இதனைப் படித்துவிட்டு இவருக்கு உண்மையிலேயே குழந்தை பிறந்திருப்பதாக ஏமாந்து போனோர் ஏராளம். கொஞ்சம் தீவிரமான பதிவர். இவரை உணர்ந்து கொள்ள இவரின் நிறைய பதிவுகளைப் படிக்க வேண்டும். படிச்சுப் பாருங்களேன்.<br /><br /><a href="http://pkp.blogspot.com/">PKP:</a><br /><br />பல பூச்சி பூச்சியான விஷயங்களை அழகு தமிழில் விவரிக்கும் வாத்தியார் இவர். டெக்னாலஜி சம்பந்தமான அனைத்தும், கூடவே அவ்வப்போது சில தத்துவங்களும் நிச்சயம் கிடைக்கும் இங்கு. உங்கள் சந்தேகங்களுக்கும் விடை சொல்லும் ஆல் இன் ஆல் அழகுராஜா இவர். ஏராளமான பயனுள்ள தொடுப்புகள் இவர் பக்கத்தில் கிடைக்கும். இது ஒரு மினியேச்சர் தகவல் களஞ்சியம். up-to-date ஆ இருக்க இந்த பக்கத்தை தொடர்ந்து வாசிக்கலாம்.<br /><a href="http://vaagai.blogspot.com/"><br />உலகிர்க்கெல்லாம் ஒரே துப்பட்டி-ஆகாயம்.எனக்கு மட்டும் கவிதை</a><br /><br />பூபேஷ். ரொம்ப சாதாராணமான வார்த்தைகள் கொண்டு அசாதாரணமான கவிதைகள் புனையும் வித்தகர் இவர். எங்கெங்கோ அலையாமல், தலையைச் சுற்றி மூக்கைத் தொடாமல் நேரடியாக சொல்லும் கவிதைகள் இவரது. ரொம்ப நாட்களாக எழுதாமல் இருந்து இப்போதுதான் திரும்பவும் எழுதத் தொடங்கியிருக்கிறார். தொடருவார் என்று நம்புவோம்.<br /><br /><a href="http://nandhu1.blogspot.com/">நந்து f/o நிலா</a>:<br /><br />இவரிடம் என்னை முதலில் ஈர்த்ததே அந்த பெயர்தான். நந்து f/o நிலா. தன் குழந்தை மீது அவர் கொண்ட காதல்தான் அவர் பக்கத்துக்கு போகும் முன்னமே எனக்குப் பிடித்தது. தேர்ந்த புகைப்படக் கலைஞர். நிச்சயம் ஒரு நடை போய் இவரின் படைப்புகளைப் பாருங்கள்.<br />நந்து சார், மறக்காம நிலாவுக்கு சுத்திப்போடுங்க.. :)<br />இவரும் ரொம்ப நாட்களாக எழுதாமல் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருக்கிறார். கூடிய விரைவில் திரும்புவார் என்று நம்புவோம்.<br /><br /><a href="http://tamilcomic.blogspot.com/">தமிழ் காமிக்ஸ் உலகம்:</a><br /><br />வாங்க.. வாங்க.. இது நம்ம ஏரியா. இரும்புக்கை மாயாவியில் தொடங்கி கன்னித்தீவு வரைக்கும் எல்லா காமிக்ஸ் பற்றியும் கொசுவர்த்திப்பதிவுகள் நியாயமாகவும் தரமாகவும் இங்கு கிடைக்கும். என்னைக்காவது ரொம்ப டென்சனா இருந்தீங்கன்னா, இங்க வாங்க. "அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே" ன்னு சந்தோசமா பாடிக்கிட்டே திரும்ப போகலாம்.<br /><br />---<br /></div>Bee'morganhttp://www.blogger.com/profile/17499868778064830704noreply@blogger.com12tag:blogger.com,1999:blog-27865649.post-89685846729403682612009-07-22T07:46:00.013+05:302009-07-24T07:33:54.935+05:30அலைக்குறிப்புகள் - Iஏறக்குறைய ஒரு வருடத்திற்குப் பிறகு மீண்டும் எர்ணாகுளம் செல்லும் வாய்ப்பு கடந்த வாரம் அமைந்தது. கடந்த முறை எர்ணாகுளத்திலும் கொச்சியிலும் அதிகமாக நேரம் செலவழி்க்க முடியாமல் போனதால் இம்முறை நிச்சயம் கொச்சின் செல்ல வேண்டும் என்று முடிவு செய்துகொண்டேன்.<br /><br />உள் நுழைவதற்கு முன் ஒரு கொசுறு தகவல். எர்ணாகுளமும் கொச்சியும் இருவெவ்வேறு ஊர்களல்ல. இவை இரண்டுமே ஒருங்கிணைந்த கொச்சி மாநகராட்சியின் பகுதிகள். 1967ல் தனித்தனியாக இருந்த எர்ணாகுளம் கொச்சி மற்றும் மட்டன்சேரி நகராட்சிகள் இணைந்து கொச்சின் மாநகராட்சி உருவானது. எர்ணாகுளம் நவநாகரீகத்தில் திளைத்திருக்கும் நவீன பட்டணம். கொச்சி (அ) ஃபோர்ட் கொச்சி இன்னும் நூற்றாண்டுகளுக்குப் பின்னால் தான் சிறப்புடன் வாழ்ந்த கால்த்தை அசைபோட்டுக்கொண்டிருக்கும் பழமையின் பட்டணம். இப்படி இரு முரண்பட்ட நகரங்களை ஒரே இடத்தி்ல் காண்பதே சிறப்புதானே..<br /><br /><a href="javascript:;" onmousedown="if(document.getElementById('kochin_1').style.display == 'none'){ document.getElementById('kochin_1').style.display = 'block'; }else{ document.getElementById('kochin_1').style.display = 'none'; }">மேலும் படிக்க...</a><br /><div class="mid" id="kochin_1" style="display: none;"><br />எனக்கு போர்ட் கொச்சி செல்வதற்குத்தான் ஆர்வம் அதிகம். இருந்தாலும் எர்ணாகுளத்தையும் ஒரு வலம் வரலாமே என்றொரு எண்ணம்.<br /><br />நாங்கள் ஒரு குழுவாகச் சென்றிருந்த போதும் முதல் நாள் பயணக்களைப்பிலிருந்தே யாரும் மீண்டு வராத நிலையில் நான் மட்டும் தனியே என் பயணத்தைத் தொடங்கினேன். காலை 6 மணிக்கு முதலில் சென்ற இடம், எர்ணாகுளத்தில் மரைன் டிரைவ் என்றழைக்கப்படும் கடலொட்டிய நடைபாதை. பொதுவாகவே மேற்குக் கடற்கரையில் சூரிய உதயத்தை விட அஸ்தமனமே சிறப்பு என்றாலும், மாலை 5 மணிக்கு ரயில் என்பதால் கண்டிப்பாக அஸ்தனமனம் பார்க்க முடியாது. உதயமாவது பார்ககலாமே என்றுதான் கிளம்பினேன்.<br /><br />கொஞ்சம் கொஞ்சமாக இருளின் பிடியிலிருந்து மீண்டு வரும் கடலின் பிரம்மாண்டம் கொள்ளை அழகு. சூரியனைக் காணமுடியாவிட்டாலும் விடியலின் ஒவ்வொரு வினாடியிலும் அதன் இருப்பை உணரமுடியும்.<br /><br />மரைன் டிரைவ் 2லிருந்து 3 கிலோமீட்டர் நீளம் இருக்கலாம். இது பருவழைக்காலம்.. மொத்த ஊரையும் தண்ணீரில் நனைத்து பிழியாமல் கொடியில் போட்ட மாதிரி ஈரம் அப்பியிருந்தது. லேசான தூறல் இருந்த போதும் குடைபிடித்தபடியே அந்த காலைவேளையில் பல பெரிசுகள் சுவாரஸ்யமாக கதைத்தபடியே நடைபயின்றுகொண்டிருந்தனர். மருந்துக்குக் கூட 40 வயதுக்குக் கீழ் யாரையும் காணோம்.<br /><br />கற்கள் பதிக்கப்பட்ட நடைபாதை. ஓரத்தில் குரோட்டன்ஸ் செடிகள். அங்கங்கே இளைப்பார பெஞ்சுகள் என்று நடைபாதையை மிகச்சிறப்பாக பராமரித்து வருகின்றனர். ஆனால் கடல்தான் கொஞ்சம் ஏமாற்றம் தருகிறது.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjmhZ4FopkDe1BU-GawvTtaKYSq8Pd5BHXqGn3PRqv9VYJ6EVVjdsNgYg3lrsEuEZ5fi3B5UV9MkgGuGQjnBDwkGTbBUxMJs5YNg9oKW-U4o_9y_j8Q3PGKdzxmUsKubbKSYDmc/s1600-h/Apr06_0858.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjmhZ4FopkDe1BU-GawvTtaKYSq8Pd5BHXqGn3PRqv9VYJ6EVVjdsNgYg3lrsEuEZ5fi3B5UV9MkgGuGQjnBDwkGTbBUxMJs5YNg9oKW-U4o_9y_j8Q3PGKdzxmUsKubbKSYDmc/s320/Apr06_0858.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5361835419497518050" border="0" /></a><br />இந்த இடத்தில் கடல் கிட்டத்தட்ட கழிமுகம் மாதிரி. அரபிக்கடல் கொஞ்சம் கன்னாபின்னாவென்று நிலத்தினுள் நீண்டிருக்கும் இடம் இது. அலைகள் இல்லாமல் நான்கு சுவர்களுக்குள் அடைபட்ட சிறைக்கைதியைப்போல் தன் சீற்றம் தணிந்து கவிழ்ந்த முகத்துடன் காட்சி தருகிறது கடல். இந்த பிம்பத்திற்கு மேலும் வலு சேர்க்கின்றன அங்கங்கே மிதந்து கொண்டிருக்கும் ஆகாயத்தாமரைகள். அதன் பரிமாணத்தைத் தவிர வேறெந்த வகையிலும் ஒரு குளத்திலிருந்து வேறுபடுத்திச்சொல்லிவிடமுடியாது. ஆனாலும் அந்த மரைன் டிரைவிற்காகவே நிச்சயம் செல்லவேண்டிய இடம் இது.<br /><br />அறைக்குத்திரும்பி காலை உணவுக்குப் பின் போர்ட் கொச்சிக்கான பயணம் தொடங்கியது. இம்முறை நண்பர் ஒருவரும் இணைந்து கொள்ள இருவரானது எங்கள் பயணம்.<br /><br />எர்ணாகுளத்திலிருந்து கொச்சிக்கு செல்ல சாலை மார்கம் தலையைச் சுற்றி மூக்கைத்தொடுவது மாதிரி. ஆனால், பகல் முழுவதும்<br />20 நிமிட இடைவெளியில் போக்குவரத்துப் படகுகள் தாராளமாய்க் கிடைக்கின்றன. ம்ம்ம்.. டவுன் பஸ் மாதிரி இதனை கற்பனை பண்ணிக்கொள்ளலாம். 50 லிருந்து 80 பேர் வரை செல்லக்கூடிய படகுகள். சிலசமயங்களில் இருசக்கர வாகனங்களும் இதில் பயணிக்கின்றன. கொச்சியிலிருந்து தினந்தோறும் வேலை நிமித்தமாக எர்ணாகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளுக்குச் சென்று வருவோருக்கு இவைதான் ஆபந்தாண்டவன். டிக்கெட்டும் ரயிலின் பிளாட்ஃபார்ம் டிக்கெட்டைவிட 50 பைசா குறைவுதான். எர்ணாகுளம் போட் ஜெட்டி (படகு நிறுத்தம்) யிலிருந்து எங்களின் பயணம் தொடங்கியது.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjrpENPCrYgvXzq9iMZ1WO1cqIluQXTUvKjpMcXxliPqi6y4BE6CMUlKjdf5qc8fR1FUNRxrlrnRxT73A0mXlmuZrtIEzIet4pFkpujM7hkZiATycXkL8thRh3hLZAlTsRERG3d/s1600-h/Apr06_0884(2).jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjrpENPCrYgvXzq9iMZ1WO1cqIluQXTUvKjpMcXxliPqi6y4BE6CMUlKjdf5qc8fR1FUNRxrlrnRxT73A0mXlmuZrtIEzIet4pFkpujM7hkZiATycXkL8thRh3hLZAlTsRERG3d/s320/Apr06_0884(2).jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5361836935904941970" border="0" /></a><br />பத்து நிமிட பயணம்தான். இந்திய கடல்படை தளமொன்றும் கொச்சின் சரக்குப் பெட்டகமும் இடையில் வருகின்றன. இவற்றைக் கடந்து<br />ஃபோர்ட் கொச்சியில் கால் வைத்தபோதே உணர்ந்து கொண்டேன். இது நான் எதிர்பார்த்த மாதிரி இருக்கப் போவதில்லையென. மொத்த ஊரும் நூற்றாண்டுகளுக்குப் பின்னால் வாழ்ந்து கொண்டிருந்தது.<br />(மீண்டும் அலையலாம்)<br /></div>Bee'morganhttp://www.blogger.com/profile/17499868778064830704noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-27865649.post-19683415299381501992009-06-30T22:17:00.007+05:302009-07-24T07:40:15.619+05:30ஊஞ்சல்அப்போது எத்தனை வயதிருக்கும். சரியாக நினைவிலில்லை. நெப்போலியனும் கஜினியும் பாடப்புத்தகங்களில் படையெடுக்கத்தொங்கியிருந்த காலம். ஏழாம் வகுப்பென்று நினைக்கிறேன். ஏதோ ஒரு நாளில் பள்ளியிலிருந்து திரும்பி வந்த போது அம்மாவின் குரல் கேட்டது.<br /><br />"ரகு, எங்கயும் வெளயாடப் போகாத.. நாளைக்கு கிராமத்துக்குப் போகணும்.. பாட்டிக்கு உடம்பு !@#$%...."<br /><br />அதன்பின் எதுவுமே எனக்கு கேட்கவில்லை. கிராமத்துக்குப் போகிறோம் என்பதே எனக்குப் போதுமானதாக இருந்தது. நான் நினைவுகளுக்குள் அலையத்துவங்கியிருந்தேன்.<br /><br />நாங்கள் இருந்தது ஒரு வளர்ந்து வரும் பேரூராட்சி என்றாலும் அப்பாவுக்கு வேலை மாற்றல் என அடிக்கடி அலைந்து கொண்டிருந்ததால், கால் அரை முக்கால் முழு ஆண்டு என்று எந்த விடுமுறை வந்தாலும் அது கிராமத்தில்தான் என்பது எழுதப்படாத நடைமுறையாக இருந்து வந்தது.<br /><br />ஆனால் கொஞ்ச நாட்களாக கிராமம் பக்கமே போகாமல் இருந்த நேரம் அது. நான் எவ்வளவுதான் அடம்பிடித்தாலும் அப்பாவும் அம்மாவும் ஒத்துக்கொள்ளவே இல்லை. அப்பா மட்டும் அவ்வப்போது சென்று வருவார். நானும் உடன் வருவேனென்று அடம்பிடித்த போதெல்லாம் அது பெரியவர்கள் சமாச்சாரமென்று ஒதுக்கிவைக்கப்பட்டேன்.<br /><br />கிராமத்தில் தாத்தா வீட்டுக்குச் செல்வதென்றாலேயே எனக்கு அலாதியான விருப்பம் உண்டு. வீடும், வீட்டை ஒட்டிய கொல்லையும், கொல்லை முடியும் இடத்திலேயே தொடங்கிவிடும் அந்த குளமும், தாத்தா எவ்வளவுதான் திட்டினாலும். குளத்தில் கும்மாளமடிக்க உடன் வரும் மாரிமுத்து மாமா பையன்களும் என என் சொர்கம் அது.<br /><br />இது எல்லாவற்றையும் விட எனக்குப் பிடித்த இடமொன்று அங்குண்டு என்றால் அது அந்த ஊஞ்சல்தான். தன் ஒவ்வொரு கிரீச்சிலும் அது ஏதோ என்னிடம் சொல்லவிழைவதாகவே எனக்கொரு எண்ணமுண்டு. அத்தனை அலைவிலும், அதே லயம் மாறாமல் ஆடும் அதன் ஆட்டம், காலத்தின் பாதை காட்டும் பெண்டுலம் மாதிரி, தான் கடந்து வந்த காலத்தின் எச்சம் சொல்லுவதாய் ஒரு பிரமை.<br /><br /><a href="javascript:;" onmousedown="if(document.getElementById('swing').style.display == 'none'){ document.getElementById('swing').style.display = 'block'; }else{ document.getElementById('swing').style.display = 'none'; }">மேலும் படிக்க...</a><br /><div class="mid" id="swing" style="display: none;"><br />ஆரம்பத்தில் தாத்தாதான் மடியில் தூக்கி வைத்துக்கொண்டு ஊஞ்சலில் அமர்ந்தபடி கதை சொல்லுவார். அவர் சொல்லும் கதைகளை விட ஊஞ்சலின் ஆட்டம்தான் என் மனதுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தது. ஊஞ்சலில் இருக்கையில் அருகிலும் தொலைவிலுமாக மாறி மாறி பொருள்கள் கொள்ளும் மயக்கம் என்னை சுண்டி இழுத்துக்கொண்டே இருந்தது. தாத்தாவுக்கு ஊஞ்சலை வேகமாக ஆட்டினால் பிடிக்காது. எனக்கு நினைவு தெரிந்து தாத்தா வீட்டினுள் இருந்தால் அந்த ஊஞ்சலில்தான் இருப்பார். அதே கிரீச், மீண்டும் மீண்டும் அவரின் இருப்பைச் சொல்லிக்கொண்டே இருக்கும்.<br /><br />தாத்தாவின் துணையில்லாமலேயே ஊஞ்சலில் ஏறிக்கொள்ளுமளவுக்கு வளர்ந்த பின், அந்த ஊஞ்சலே எனக்கு எல்லாமுமாய் ஆகிப்போனது. அமர்ந்தால், ஆடினால், உணவு உண்டால், தூங்கினால் என அனைத்தும் அந்த ஊஞ்சலில்தான்.<br />எனக்கு வேகம்தான் பிடித்திருந்தது. உந்தி உந்தி இன்னும் இன்னும் என உத்திரத்தை தொட்டு விடும் முனைப்புடனெல்லாம் சிலமுறை ஆடியிருக்கிறேன். சில சமயங்களில் தாத்தா திடீரென வந்து விட்டால் மட்டும் வேகத்தை குறைத்துக்கொள்வதுண்டு. தாத்தாவுக்குத் தெரிந்தாலும் என்னை மட்டும் திட்டார். அதுவே எனக்குப் பெருமையாய் இருந்தது.<br /><br />அதற்கடுத்த முறைகளில் செல்லும் போதெல்லாம் வெளியிலெங்கும் செல்வதைவிட, வீட்டிலேயே இருப்பது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.<br />விளையாட்டுகள் கூட, வீட்டினுள்ளேயே ஊஞ்சலின் மீதமர்ந்து ஆடமுடியக்கூடிய விளையாட்டுகள்தான் எனக்குப் பிடித்தவையாகின.<br /><br />அதன்பின் கொஞ்ச நாட்களிலேயே மேற்சொன்ன களேபரங்களில் மொத்தமும் விட்டுப்போயிருந்து, இப்போதுதான் மீண்டும் செல்கிறேன்.<br /><br />அடுத்தநாள் காலையில் நானும் அம்மாவும் ரயிலில் செல்லும் போது ரயிலின் ஆட்டம் கூட ஊஞ்சலை நினைவுபடுத்தியது.<br /><br />ஊரில் இறங்கியபோது டீக்கடையிலிருந்து ஆல் இந்தியா ரேடியோ எங்களை வரவேற்றது. சாலையில் குறுக்கே கோலம் போடும் பெண்மணிகள். சில சோம்பேறிக் கோழிகளின் கூவல்கள், என கடந்து சென்று கொண்டிருந்தோம். அம்மாவை அடையாளம் கண்டுகொண்டவர்களின்,<br /><br />"என்னக்கா? செளக்கியமா..? அண்ணன் வரலியா?"<br /><br />விசாரிப்புகளிலேயே நேரம் போய்க்கொண்டிருந்தது. எனக்குத்தான் எரிச்சலாய் வந்தது. அம்மாவின் கையைப் பிடித்தபடி அவசரத்துடன் நின்று கொண்டிருந்தேன்.<br /><br />ஒரு வழியாக வீட்டை நெருங்கி, அந்த கடைசி திருப்பத்தில் திரும்பிய போதுதான் அந்த குழப்பம்.<br /><br /><span style="font-style: italic;">"கடந்த முறை நான் வந்திருந்த போது சரியாகத்தானே இருந்தது இப்போது என்னாயிற்று..?"</span><br /><br />கடந்த முறை ஒன்றாய் இருந்த வாசல் கதவு இப்போது இரண்டாய் இருந்தது. புதிதாய் வண்ணம் பூசி பளபளப்பாய் இருந்த வாசல்களில் எதுவென்று நான் குழம்பியிருக்கும் போதே, அம்மா ஒரு கதவினுள் என்னைக் கூட்டிப்போனார். உள்ளே நுழைந்தால் எனக்கான அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. வாசல் மட்டுமல்ல வீடும் இரண்டாய்ப் பிரிந்திருந்தது.<br /><br />ஊஞ்சல் மாட்டும் இரு வளையங்களுக்கு நடுவே புதிதாய் வெள்ளையடித்த ஒரு சுவர் புதிதாய் முளைத்திருந்தது. ஒரு வளையம் மட்டுமே அங்கிருந்து தெரிந்தது. மற்றொன்று அடுத்த பக்கத்தில் இருக்கவேண்டுமென்று எண்ணிக்கொண்டேன்.<br />அந்த பெரியவர்கள் சமாச்சாரம் இதுதான். தாத்தாவின் மரணத்திற்கு பிறகு மாமாக்களுக்குள் ஏற்பட்ட தகராறில், நிலம் மட்டுமல்லாமல் இந்த வீடும் இரண்டாய்ப் பிரிந்திருக்கிறது. கோர்ட்டுக்கெல்லாம் போகுமளவுக்கு பிரச்சனை வளர்ந்திருக்கிறது. கடைசியில் அப்பாதான் இடையில் புகுந்து சமாதானம் செய்திருக்கிறார். ஒரு வீட்டில் ஒரு மாமாவும் பாட்டியும் இன்னொரு வீட்டில் இன்னொரு மாமாவுமென ஏற்பாடு. . என்னால் எதையுமே ஏற்றுக்கொள்ள முடியவில்லை.<br /><br />இந்த ஊஞ்சலை விட வேறெதும் முக்கியமான விஷயம் இருக்கமுடியுமா என்று எனக்குத் தெரியவில்லை.<br />பாட்டிதான்,<br /><br />"நானும் அப்பவே கண்ணை மூடியிருக்கனும்"<br /><br />என்று திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருந்தார்.<br /><br />கடைசியில் அம்மாதான் கூப்பிட்டு பக்கத்து வீட்டுக்குச் சென்று மாமாவைப் பார்த்து வரச்சொன்னார். மாமாவைப் பார்க்கிறோமோ இல்லையோ ஊஞ்சலின் அடுத்த வளையத்தைக் கண்டுவிடவேண்டுமென்ற ஆவலுடன் ஓடினேன். கண்டும் விட்டேன் அந்த அடுத்த வளையத்தை. அது மட்டுமல்ல, இத்தனை நாட்களாக காலத்தின் குறுக்கும் நெடுக்குமாக ஆடிவந்த ஆட்டம் அடங்கி அந்த ஊஞ்சல் பரண் மீது புழுதிபடிய மெளனமாய்க் கிடந்தது. சொல்ல வந்ததை கடைசிவரை சொல்லாமலேயே மரித்துப் போன சோகம் அதன் இருப்பில் கசிந்துகொண்டே இருந்தது.<br /><br />மாலை அம்மாவுடன் வீட்டுக்குத் திரும்பும் போதே முடிவு செய்து கொண்டேன், இனிமேல் திரும்பவும் வருவதில்லையென.<br /><br />இரவு வெகுநேரம் வரையில் கிரீச் சத்தம் காதினுள் ஒலித்துக்கொண்டே இருந்தது.<br /><br />---<br />(இது 'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் <a href="http://naayakan.blogspot.com/2009/05/20-1500.html">சிறுகதைப்போட்டி</a>க்காக எழுதப்பட்டது)<br /></div>Bee'morganhttp://www.blogger.com/profile/17499868778064830704noreply@blogger.com14tag:blogger.com,1999:blog-27865649.post-81038531974953594172009-06-12T07:53:00.001+05:302009-06-12T07:54:59.029+05:30சொல்லாத சொல்எதிர்வீட்டு்க குழந்தை<br />உன்னைப்போலவே முறைக்கிறது<br />கைபேசிக்கு தலைசாய்த்து சாலையில்<br />எதிர்படுபவனின் சிகை<br />உன்னைப்போலிருக்கிறது<br />வாடியபூக்கள் சில வலுக்கட்டாயமாய்<br />உன் முகத்தை மனதில் இருத்திப் போகின்றன<br />கடன் அட்டைக்காக அழைப்பவன் கூட<br />உன் குரலை ஒத்திருக்கிறான்..<br /><br />சாலையில், வீட்டில், திரையரங்கில்,<br />ஆற்றங்கரையில், பேருந்தில் என<br />நாம் ஒன்றாய் இருந்த அத்தனை<br />இடங்களிலும்<br />உன்னிடம் யாசித்துக்கொண்டிருக்கிறேன்.<br /><br />இதற்கு பதில் கிளம்புகையிலாவது<br />சொல்லியிருக்கலாம்<br />”என்னை மன்னித்து விடடா” என்று..Bee'morganhttp://www.blogger.com/profile/17499868778064830704noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-27865649.post-234638604094067052009-06-10T14:04:00.000+05:302009-06-10T14:05:35.684+05:30வாசகன்ஒவ்வொரு ரயில் பயணத்தின்<br />முன்தினத்திலும் தவறாமல் <br />எடுத்துவைக்கப்படும் புத்தகங்கள்<br />பிரிக்கப்படாமலேயே ஊர்வந்தடைகின்றன..<br />அதைவிட சுவாரஸ்யமான<br />மனிதர்கள் வாசிக்கக்கிடைப்பதால்..Bee'morganhttp://www.blogger.com/profile/17499868778064830704noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-27865649.post-86172550099396399312009-05-13T14:11:00.012+05:302009-05-14T14:26:20.739+05:30திருடர்கள் ஜாக்கிரதை"டிக்.. டிக்.."<br /><br />"யாரது?"<br /><br />"திருடன்"<br /><br />"என்ன வேணும்?"<br /><br />"நகை வேணும்"<br /><br />"என்ன நகை?"<br /><br />"கலர் நகை"<br /><br />"என்ன கலர்?"<br /><br />"ம்ம்ம்ம்… செவப்பு கலர்…"<br /><br />ஏழாம் வகுப்பு ஆ பிரிவில், மற்ற அரை டிராயர்களெல்லாம் அந்த செவப்பு கலரைத்தேடி ஓடிக்கொண்டிருக்க, எனக்குள் மட்டும் சில வினோதமான கேள்விகள் எழுந்தன..<br /><br />உண்மையிலேயே திருடன் இந்த குணசேகரன் மாதிரிதான் குள்ளமாக வட்டமுகத்துடன், இருப்பானா? இதே மாதிரிதான் ஒவ்வொரு வீடாகச்சென்று தன் வருகையை பராக் சொல்வதுதான் அவன் வேலையா? இல்லையென்றால் அவன் எப்படி இருப்பான்? எங்கள் வீட்டுக்கு மட்டும் அவன் வருவதே இல்லையே ஏன்?<br /><br /><a href="javascript:;" onmousedown="if(document.getElementById('thief').style.display == 'none'){ document.getElementById('thief').style.display = 'block'; }else{ document.getElementById('thief').style.display = 'none'; }">மேலும் படிக்க...</a><br /><div class="mid" id="thief" style="display: none;"><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgQ0wzOUlFf5dF9zzDuEGwoaH3CMyGCnSxtEA2DOBYD-G4PciC3W9QIWn2umuaDUAzqU2SJHrIEDfifgZ64S7dNkGm1ZRiuti8FTfwGjI3kF1m6fygKEjxLUGYRcgPiasOrdi2L/s1600-h/tdk_joker.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 234px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgQ0wzOUlFf5dF9zzDuEGwoaH3CMyGCnSxtEA2DOBYD-G4PciC3W9QIWn2umuaDUAzqU2SJHrIEDfifgZ64S7dNkGm1ZRiuti8FTfwGjI3kF1m6fygKEjxLUGYRcgPiasOrdi2L/s320/tdk_joker.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5335226058539494226" border="0" /></a><br /><p style="color: rgb(0, 0, 0);" class="MsoNormal">திருடர்கள் மீதான ஈர்ப்பு எப்படி ஏற்பட்டதென்று தெளிவாகத் தெரியவில்லை.. ஆனால், அன்றைக்கு விளையாடும் போதுதான், அந்த முடிவு எனக்குத் தோன்றியது.. அது, எப்படியாவது ஒரு உண்மையான திருடனைப் பார்த்து விடுவதென்று.</p> <p style="color: rgb(0, 0, 0);" class="MsoNormal">ஆனால், திருடர்களைத் தேடி எங்கு போவது எப்படிப் பார்ப்பது எதுவுமே இல்லாமல் ஒரு தீர்மானம் மட்டும் நிறைவேற்றியாகிவிட்டது. முதல் வேளையாக அ பிரிவு ஜெகன் தான் நினைவுக்கு வந்தான். அவனுக்கு இந்த மாதிரி விஷயங்களிலெல்லாம் பரிச்சயம் அதிகம். என்ன கொஞ்சம் அதிகமாக ரீல் சுத்துவான். அவனே வானை அளந்த மாதிரியெல்லாம் கதை சொல்வான். மற்றபடிக்கு சராசரிக்கும் சற்று குறைவான ஒரு மாணவன்தான்.என்ன மாதிரி கூச்சசுபாவமெல்லம் கிடையாது அவனுக்கு. </p> <p style="color: rgb(0, 0, 0);" class="MsoNormal">சொன்னதற்கு கெக்கெ பிக்கேவென்று கொஞ்ச நேரத்திற்கு சிரித்துகொண்டிருந்தவன், திடீரென்று சிரிப்பதை நிறுத்தினான்.</p> <p style="color: rgb(0, 0, 0);" class="MsoNormal">”ஆமாண்டா.. நானும் திருடன பாத்ததே இல்ல.. வா, ரெண்டு பேருமா பாக்கலாம்..”</p> <p style="color: rgb(0, 0, 0);" class="MsoNormal">ஆனால் அவனுக்கும் எப்படியென்று தெரியவில்லை.</p> <p style="color: rgb(0, 0, 0);" class="MsoNormal">எப்படியாவது அவன் ஒரு வழியுடன் வருவானென்று தெரியும்.. ஆனால் என்னவென்று மட்டும் தெரிந்து கொள்ள ஆவலுடன் காத்திருந்தேன்.</p> <p style="color: rgb(0, 0, 0);" class="MsoNormal">நினைத்தது மாதிரியே அடுத்தநாளே ஒரு திட்டத்துடன் வந்தான்..</p> <p style="color: rgb(0, 0, 0);" class="MsoNormal">மதியம் உணவு இடைவேளையில் அவனைப்பார்த்வுடனேயே,</p> <p style="color: rgb(0, 0, 0);" class="MsoNormal">”எப்படி டா?”</p> <p style="color: rgb(0, 0, 0);" class="MsoNormal">”கண்டு பிடிச்சுட்டோம்ல.. நம்மகிட்டேயேவா..” </p> <p style="color: rgb(0, 0, 0);" class="MsoNormal">என்றபடி ஒரு போலி பெருமிதத்துடன் காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டான்.. </p> <p style="color: rgb(0, 0, 0);" class="MsoNormal">“எப்படின்னு சொல்லுடா” ஆர்வம் தாங்கவில்லை எனக்கு..</p> <p style="color: rgb(0, 0, 0);" class="MsoNormal">”சரி சரி. அவசரப்படாத.. எதுக்கு இவ்ளோ அலையனும்.. பக்கத்தூருலதான் எங்க மாமா டீக்கடை வச்சுருக்கார்”</p> <p style="color: rgb(0, 0, 0);" class="MsoNormal">” அதுக்கும் இதுக்கும் என்னடா சம்பந்தம்”</p> <p style="color: rgb(0, 0, 0);" class="MsoNormal">”டேய்.. அங்கதான் G7 ம் இருக்கு” என்றபடி கல்மிஷமாய்ச்சிரித்தான்..</p> <p style="color: rgb(0, 0, 0);" class="MsoNormal">வழக்கம்போல் நான் பேந்த பேந்த விழிக்க, எனக்குத் தெரியாத ஒன்றை தெரிந்துகொண்ட கர்வத்துடன் சொல்லத்தொடங்கினான்.. அதாகப்பட்டது, G7 என்பது எங்களின் பக்கத்தூர் போலீஸ் ஸ்டேஷன். அவன் சொன்ன அந்த மாமா கடை, G7 ன் பக்கத்து காம்பௌண்ட்.. அவர்தான் G7 ற்கு ரெகுலர் டீ சப்ளையர்.. எப்படியாவது, ஒரு நாள் டீ கிளாசுடன் உள்ளே நுழைந்தால் வேண்டியமட்டும் லாக்அப்புக்குள் விதவிதமான திருடர்களை கண்குளிர கண்டுவிடலாம் என்பது அவன் திட்டம்.<br /></p> <p style="color: rgb(0, 0, 0);" class="MsoNormal">என்னைப்பொறுத்தவரை போலீஸ் ஸ்டேஷன் என்பதே ரொம்ப பெரிய சமாச்சாரம்.. அதில டீ கிளாசோட போய் மாட்டிகிட்டு என்னையும் ஜெயில்ல போட்டா என்ன ஆகறது.. அடுத்த நாள் ஸ்கூலுக்கு யார் போறது.வீட்ல எப்படி பதில் சொல்றது..<br /></p> <p style="color: rgb(0, 0, 0);" class="MsoNormal">”ம்கூம்.. இதெல்லாம் ஆவுறதில்ல..”</p> <p style="color: rgb(0, 0, 0);" class="MsoNormal">”..?”</p> <p style="color: rgb(0, 0, 0);" class="MsoNormal">”பக்கத்தூருக்கு போகணும்னா பஸ் புடிக்கனும்.. பஸ்க்கு காசு வேணும்.. வீட்ல கேட்டா உதைவிழும்.. நம்மால முடியதுப்பா”<br /></p><p style="color: rgb(0, 0, 0);" class="MsoNormal">என்ற படி ஜகா வாங்கினேன்..</p> <p style="color: rgb(0, 0, 0); font-style: italic;" class="MsoNormal">திருடனைப்பார்ப்பது ஒன்றும் அவ்வளவு சுலபமான காரியம் இல்லை போல.. </p> <p style="color: rgb(0, 0, 0);" class="MsoNormal">”வேணாம்டா விட்டுறலாம்டா..”</p> <p style="color: rgb(0, 0, 0);" class="MsoNormal">அவன் விடுவதாய் இல்லை.. அவனின் வழக்கமான ஜம்பம்..</p> <p style="color: rgb(0, 0, 0);" class="MsoNormal">”ம்ம்.. அஸ்க்கு புஸ்க்கு.. நான் ஒரு ஐடியா சொன்னேன்ல.. நீயும் ஒன்று சொல்லு.. சரிவரலன்னா விட்டுறலாம்”</p> <p style="color: rgb(0, 0, 0);" class="MsoNormal">என்று என்பக்கமே திருப்பிவிட்டான்.. சரி ஆனது ஆகிவிட்டது.. ஒப்புக்கு ஒரு ஐடியா சொல்லி இவனை கழட்டி விடறத்துக்கு, ஒரு நல்ல ஐடியாவை யோசித்தால் என் ஆசையும் நிறைவேறிய மாதிரி இருக்கும். ஆசை யாரை விட்டது.<br /></p> <p style="color: rgb(0, 0, 0);" class="MsoNormal"> </p> <p style="color: rgb(0, 0, 0);" class="MsoNormal">அதற்கடுத்த ஒரு வாரமும் தினத்தந்தியில் கொலை கொள்ளை செய்திகளை ஒன்று விடாமல் படிக்கத்தொடங்கினேன்.. ஒவ்வொரு நாளும் ஆச்சரியமாய் இருந்தது.. ஒரு நாளில் இவ்வளவு கொள்ளைகள் நடக்கின்றனவா?</p> <p style="color: rgb(0, 0, 0);" class="MsoNormal">ஒரு வாரத்தில் திருடர்களைப்பற்றி பெரிதாக ஒன்றும் தெரிந்துவிடவில்லையென்றாலும், ஒன்று மட்டும் தெளிவானது.. ஒரு நாளில் ஏராளமான திருட்டுகள் நடக்கின்றன.. கண்டிப்பாக எங்கள் ஊரிலும் ஒரு திருடன் இருக்கவேண்டும் என்று. ஆனால், எப்படி அந்த திருடனை அடையாளம் காண்பது? எப்படிப்பாக்கறது..? வீட்டுக்குப் போயா? எதுவும் தெரியவில்லை.. இருந்தாலும், அடுத்த நாளே ஜெகனிடம் சொன்னேன்.. பக்கத்தூருக்கெல்லாம் போகாம உள்ளுரிலேயே திருடனைப்பார்க்கலாமென்று.. அவனுக்கு அந்த திட்டம் மிகவும் பிடித்துப்போனது எனக்கே பெரிய ஆச்சரியம். அதிலிருந்த விடைதெரியா கேள்விகளையும் சொன்னேன்.. அவன் சட்டை செய்ததாகவே தெரியவில்லை..</p> <p style="color: rgb(0, 0, 0);" class="MsoNormal">”அதுக்கெல்லாம் நம்மகிட்ட ஆள் இருக்கு.. எல்லாம் எம் செயல்” என்றபடி சீட்டியடித்தான்..</p> <p style="color: rgb(0, 0, 0);" class="MsoNormal">எரிச்சலாக வந்தது.. எப்படியோ, அவன் ஒரு பதிலுடன் வந்தால் சரி.. </p> <p style="color: rgb(0, 0, 0);" class="MsoNormal">நான் நினைத்ததை விட சீக்கிரமே கண்டுபிடித்துவிட்டான் அவன்.</p> <p style="color: rgb(0, 0, 0);" class="MsoNormal">ஊர்க்கடைசியில் நெடுஞ்சாலைக்கு அருகே வீரனார் கோவிலுக்கு பக்கத்தில் ஒரு தாமரைக்குளம் உண்டு. அதில் இருப்பதெல்லம் அல்லியென்று ஊருக்கே தெரிந்தாலும் பெயர் மட்டும் தாமரைக்குளம்தான். அதற்குப்பின்னே ஒரு புறத்தில் அடர்த்தியாக மூங்கில் புதரும் கொஞ்சம் இடைவெளி விட்டு ஒரு பெரிய ஆலமரமும், தூங்கு மூஞ்சி மரமுமாக அடர்ந்து பந்தல்போட்டிருக்கும்.. அதற்கும் பின்னே போனால், உரக்கடை கோனாரின் வயல் தொடங்கிவிடும்..</p> <p style="color: rgb(0, 0, 0);" class="MsoNormal">அந்த வயலுக்கும் குளத்துக்கு பின்பான மரப்பந்தலுக்கும் இடையே ஒரு திட்டு தரிசு நிலம் உண்டு.. அங்கிருந்து பார்த்தால் நெடுஞ்சாலை தெளிவாகத் தெரியும். ஆனால் நெடுஞ்சாலையிலிருந்து பார்த்தால் ஆலமரம் வரைக்கும்தான் தெரியும். அந்த இடத்தில் இருந்தால், நமக்குத் தெரியாமல் யாரும் நெடுஞ்சாலை வழியே நம்மிடம் வரமுடியாது. இது போன்ற குணநலன்களால் அப்பகுதி மாதம் இருமுறை கள்ளு காய்ச்ச உகந்த இடமாக தேர்ந்தெடுக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்தது. அவ்வகையில், இல்லாமல் அப்பகுதி சும்மா இருக்கும் நேரத்தில்தான் அங்கு திருடர்கள் வருவார்களென்றும் தங்களின் திருட்டுப்பொருட்களை பங்கு போட்டுக்கொள்வார்களென்றும், ஒரு நாள் ராத்திரி அங்கு போய் ஒளிந்திருந்தால் நிச்சயம் திருடனைப்பார்த்துவிடலாமென்றும் சொன்னான்.</p><p style="color: rgb(0, 0, 0);" class="MsoNormal">கேட்பதற்கு தங்கமலரில் கதைபடிப்பது போலிருந்தாலும், எனக்கு உள்ளுர பயம் பரவியது. அந்த திருடர்கள் மாதிரி இவர்களும் கேள்வி கேட்டால் பதில்சொல்லிவிட்டு கொஞ்சம் நகையும் கொடுத்து அனுப்புவார்களா என்று கேட்க நினைத்து அடக்கிக்கொண்டேன்.<br /></p> <p style="color: rgb(0, 0, 0);" class="MsoNormal">என்னதான் இருந்தாலும் இறங்கியாகிவிட்டது ஒரு நாள் ராத்திரிதானே. இதை மட்டும் தாண்டிட்டா, ஸ்கூலில் பெருமையாக சொல்லிக்கொள்ளலாம், எங்களின் பிரதாபங்களை.. மற்ற பசங்களெல்லாம் வாயைப்பிளந்து கேட்பார்களென்பதே கொஞ்சமாய் போதையூட்டியது. இடம் தேர்வாகிவிட்டது. காலம், காலாண்டு விடுமுறையின் கடைசிநாளென நீண்ட கலந்தாய்வுக்குப்பின் முடிவுக்கு வந்தோம்.</p> <p style="color: rgb(0, 0, 0);" class="MsoNormal">அவ்வப்போது கனவுகளில் கழுத்தில் கர்சீப், பாரம்பரிமான கன்னத்து மச்சங்களுடன் திருடர்கள் வந்து பயமுறுத்திப்போயினர். </p> <p style="color: rgb(0, 0, 0);" class="MsoNormal">காலாண்டுப்பரீட்சைக்குப் பிந்திய விடுறைகளை சிதைப்பதற்கென்றே சில ஆசிரியர்கள் இருப்பார்கள். அப்பரீட்சையில் வினாத்தாளாக வந்த அனைத்தையும் நோட்டுப்புத்தகத்தில் எழுதி விடுமுறை முடிந்து வருகையில் கொண்டு வரவேண்டும். அதை நான் எப்போதும் வெறுத்தாலும், அன்றிரவு நான் ஜெகன் வீட்டுக்குச்செல்ல அக்காரணம்தான் உதவியது.</p> <p style="color: rgb(0, 0, 0);" class="MsoNormal">ஜெகனின் அப்பா ஒரு டிரைவர். அவனுக்கு அம்மா கிடையாது. தனியாகவே அனைத்து வேலைகளையும் செய்யுமளவுக்கு வளர்ந்திருந்தான் அவன். அன்றிரவு அவன் அப்பாவும் ஊரிலில்லை. நான் போனதிலிருந்தே ஒரேயடியாக அறிவுரை மழை பொழியத்தொடங்கிவிட்டானவன்.</p> <p style="color: rgb(0, 0, 0);" class="MsoNormal">போகும் போது முகத்தில் ஒரு துணி கட்டிக்கொள்ளவேண்டும். செருப்பு போடக்கூடாது. சத்தம் போடக்கூடாது. இருவரும் கையில் ஒரு பூண்டு வைத்துக்கொள்ள வேண்டும். இன்னும் பலவாய் பட்டியல் நீண்டது..</p> <p style="color: rgb(0, 0, 0);" class="MsoNormal">நள்ளிரவு நேரம் நெருங்க நெருங்க எனக்கு இதயத்துடிப்பு இரட்டிப்பாகி எகிற ஆரம்பித்தது.. குரல் கூட தெளிவாக வரவில்லை..</p> <p style="color: rgb(0, 0, 0);" class="MsoNormal">” ஜெகன்…”</p> <p style="color: rgb(0, 0, 0);" class="MsoNormal">”ம்ம்..”</p> <p style="color: rgb(0, 0, 0);" class="MsoNormal">“கண்டிப்பா போகணுமாடா.. நான் வேணா பேசாம அப்படியே திரும்பி வீட்டுக்குப் போயிடறேனே.. இன்னும் கொஸ்டின் பேப்பர் வேற எழுதல..”</p> <p style="color: rgb(0, 0, 0);" class="MsoNormal">”அடச்ச.. சும்மா கெட.. எத்தன தடவை சொல்றது.. இன்னைக்குப் போறோம்.. அவ்ளோதான்.. ”</p> <p style="color: rgb(0, 0, 0);" class="MsoNormal">”..”</p> <p style="color: rgb(0, 0, 0);" class="MsoNormal">”நீ வந்தா வா.. வராட்டி போ.. நான் இன்னைக்குப் போகத்தான் போறேன்..”</p> <p style="color: rgb(0, 0, 0);" class="MsoNormal">அப்படியே தப்பித்து ஓடிவிடலாம் என்று மனதுக்குள் ஒரு குரல் கேட்டாலும், ஒரு வேளை ஜெகன் மட்டும் தனியே சென்று திருடனைப்பார்த்துவிட்டால் அதற்கப்புறம் அவனை கையிலேயே பிடிக்கமுடியாது. அதற்கும் மேலாக, இது என்னோட ஐடியா.. அதுக்காகவாகது நான் போகணும் என்ற முடிவே நிலைத்துவிட்டது..</p> <p style="color: rgb(0, 0, 0);" class="MsoNormal">11 மணிவாக்கில் மெல்ல வீட்டிலிருந்து கிளம்பினோம்.. அமாவாசைக்கு வெகு பக்கத்தில் நிலவு..இப்பவோ அப்பவோ என்பது மாதிரி கொஞ்சமாய் விளிம்பு காட்டிக்கொண்டிருந்தது. தூரத்தில் சில இரவுப்பறவைகள் சத்தம்போட்டுக்கொண்டிருந்தன. முகத்தில் அந்த துணி வேறு மூச்சைத்திணறடித்தது.. அடுத்த தெரு மூலையில் சில நாய்கள் மிரண்டு துரத்த, அந்த முகமூடித்துணியை நல்ல பிள்ளைகளாக மடித்து கையில் வைத்துக்கொண்டோம். </p> <p style="color: rgb(0, 0, 0);" class="MsoNormal">அது வரை நான் கேள்விப்பட்டிருந்த கொள்ளிவாய்ப்பிசாசுகள், மோகினிகள், கோட்டை வீரன் கதைகளெல்லாம் அசந்தர்ப்பமாக நினைவில் வந்து கலங்கடித்தன. பேசாமல் அவன் சொன்ன முதல் ஐடியாவுக்கு ஓகே சொல்லியிருக்கலாம் என்று பட்டது. எது நடந்தாலும் பகலிலாவது நடந்திருக்கும்.</p> <p style="color: rgb(0, 0, 0);" class="MsoNormal">கண்ணுக்கெட்டும் தூரத்தில் கோயில் வந்தபிறகுதான், அப்பகுதி தெருவிளக்குகளாலும் கைவிடப்ட்ட பகுதியென்று உணர்ந்தோம். அவனுக்குள்ளும் லேசாக பயம் வந்திருக்க வேண்டும்.. ஆனால் வெளியில் காட்டிக்கொள்ளவில்லை. அவன் முன்னே செல்ல, மெல்ல தாமரைக்குளத்தை நெருங்கிவிட்டோம்..</p> <p style="color: rgb(0, 0, 0);" class="MsoNormal">ஏதாவது ஒரு வகையில் குளத்தை கடக்கவேண்டும். வலதுகரையோடு போனல் மூங்கில் புதரைத்தாண்டி அந்த திட்டுக்குப் போகவேண்டும்.. அது கொஞ்சம் தூரம்.. அதைவிட, இடதுகரையோடு போனல், ஆலமரத்தை தாண்டி அந்த திட்டுக்குப் போய்விடலாம்.. ஆனால், குறுக்கே கோனார் வயலுக்கு செல்லும் ஓடை வரும்.. அது குளத்துடன் சேரும் இடம் சதுப்பு நிலம் மாதிரி முட்டிவரை சேறாகிக்கிடக்கும். </p> <p style="color: rgb(0, 0, 0);" class="MsoNormal">ஒரு வழியாக இடது கரையே என்று தீர்ப்பாகியது. அவன் முன்னே செல்ல, அவன் கையைப்பிடித்த படி பின்னே நடந்தேன்.. அவன் கை நடுங்குவது அப்பட்டமாய்த் தெரிந்தது.. </p> <p style="color: rgb(0, 0, 0);" class="MsoNormal">அந்த சேற்றுப்பகுதிக்கு வந்தபின் ஜாக்கிரதையாக ஒவ்வொரு அடியாக வைத்தபடி முன்னேறுகையில்தான் அது நடந்தது.</p> <p style="color: rgb(0, 0, 0);" class="MsoNormal">யாரோ என் காலை கயிற்றைக்கொண்டு இறுக்குவது போல் இருந்தது.. வீல் என்ற ஒரு அலறலுடன் சேற்றில் விழுந்ததில், கழுத்துக்குக் கீழ் மொத்தமாக மூழ்கி சேற்றுக்குள் துளாவிக்கொண்டிருந்தேன். குத்துமதிப்பாக ஒரு திசையிலிருந்து ஜெகன் கத்துவது கேட்டது. என்னால் பதிலுக்கு கூட வாய்திறக்கமுடியாமல், தொண்டைக்குள் அடைப்பது போலிருந்தது. மறக்கமுடியாத அந்த பதினைந்து வினாடி களேபரத்தில், என் கால் கட்டு கொஞ்சமாய் நழுவி விழ, அடித்துபிடித்துக்கொண்டு கரையேறியபோது மொத்தமாக சேற்றில் முழுகி, சொட்டச் சொட்ட, நான் இந்நேரம் அழத்தொடங்கியிருந்தேன்..</p> <p style="color: rgb(0, 0, 0);" class="MsoNormal">அவனுக்குள் மிச்சமிருந்த கொஞ்ச நஞ்ச தைரியமும் காலியாகிவிட்டது..</p> <p style="color: rgb(0, 0, 0);" class="MsoNormal">”டேய்.. திரும்பிடலாம்டா”</p> <p style="color: rgb(0, 0, 0);" class="MsoNormal">விசும்பல்களுக்கிடையே தலையாட்டிடேன்.. அவன் பார்த்தானா தெரியவில்லை..</p> <p style="color: rgb(0, 0, 0);" class="MsoNormal">அதே வழியில் திரும்ப வர இருவருக்குமே தைரியமில்லை. பேசாமல், குளத்தைச்சுற்றிக்கொண்டு வலதுகரையுடன் வெளியேறிவிடலாமென்று முன்னேறினோம்..</p> <p style="color: rgb(0, 0, 0);" class="MsoNormal">அந்த ஆலமரத்தின் கீழ் வந்தபோதுதான் அதை கவனித்தேன்.. எங்களுக்கு நேரெதிரே இருபதடிக்கும் குறைவான தொலையில், இருட்டில், கொஞ்சம் பெரிய சைஸில் சப்பிப்போட்ட மாங்கொட்டை மாதிரி ஒன்று காற்றில் அலைந்துகொண்டிருந்தது. எங்களை நோக்கி வருவது போல் தோன்றியது. அதே நேரம் அவனும் அதைப்பார்த்திருக்க வேண்டும். </p> <p style="color: rgb(0, 0, 0);" class="MsoNormal">”ஓட்றா” என்றொரு குரல் மட்டும் தான் கேட்டது.. அவன் எந்தப்பக்கமாய் ஓடினானென்றெல்லாம் பார்க்க எனக்கு அவகாசம் இல்லை. ஏதோ ஒரு வழி.. தொலைவில் தெரிந்த தெருவிளக்கை நோக்கி ஓடத்தொடங்கியிருந்தேன்.</p> <p style="color: rgb(0, 0, 0);" class="MsoNormal">அதற்கடுத்த நாள் நான் ஸ்கூலுக்குச் செல்ல வில்லை.<br /></p><p style="color: rgb(0, 0, 0);" class="MsoNormal"> </div>Bee'morganhttp://www.blogger.com/profile/17499868778064830704noreply@blogger.com15tag:blogger.com,1999:blog-27865649.post-75165062038410945952009-05-12T18:56:00.007+05:302009-05-12T19:46:00.527+05:30கவிதைகள் மறுவாழ்வு மையம்<div style="text-align: left;"><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgfs7cCS3uUMGq167Aewsh-1YBYSludNsnz2lJdCGhrhpxquwVTemAjNab_wCUwkypcchXQA-1n1amyhDJktlwkkK_ElN9bqOpH2WrHfl1e-8cff_V5-CgvmSgTpvXxKk6vCAO7/s1600-h/khmer-girl-beautiful-girl-painting-11.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 221px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgfs7cCS3uUMGq167Aewsh-1YBYSludNsnz2lJdCGhrhpxquwVTemAjNab_wCUwkypcchXQA-1n1amyhDJktlwkkK_ElN9bqOpH2WrHfl1e-8cff_V5-CgvmSgTpvXxKk6vCAO7/s320/khmer-girl-beautiful-girl-painting-11.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5334929092268399666" border="0" /></a><br />நீ அலட்சியமாய் தூக்கியெறிந்த<br />காகிதக் கோப்பையிலிருந்து<br />மனமுடைந்த கவிதைகள் சில<br />குதித்தோடிப் போயின<br />தற்கொலைக்கு..<br />நான்தான் சமாதானம் செய்து<br />அழைத்துவந்திருக்கிறேன்<br />நீ வருவாய் என..<br /><br />கைவிடப்பட்ட கவிதைகள்<br />சங்கம் ஒன்று அமைக்குமுன்<br />வந்துவிடேன் சீக்கிரம்..!<br /></div>Bee'morganhttp://www.blogger.com/profile/17499868778064830704noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-27865649.post-32352131478399205952009-02-22T11:27:00.007+05:302009-02-23T13:26:43.629+05:30அரசூர் வம்சம்<blockquote>”..... அடுத்த தடவை பனியன் சகோதரர்கள் வரும்போது கேட்க வேண்டும். இல்லை நாளைக் காலை புதுப்பால் காப்பிக்கு முன்னோர்கள் இறங்கி வரும்போது.<br /><br />அவர்கள் என் முன்னோர்கள் இல்லாமல் இருந்தால் ?<br /><br />பாதகமில்லை.அவர்களுக்குத் தெரிந்த ஒரு சுலைமான் இருப்பான். ஒரு சாமிநாதன் இருப்பான். அரசூர் வம்சம் இருக்கும். பெயர் மாறியிருக்கும். இடம் மாறியிருக்கும். காலம் முன்னே பின்னே இருக்கலாம். ஆனாலும் யாரோ எங்கோ இருந்ததையும் மகிழ்ந்ததையும் நடந்ததையும் நடக்காததையும் சொல்லட்டும்.<br /><br />கேட்டு விட்டு எழுதுகிறேன்.”</blockquote><br /><br />படித்து முடித்து மூடிவைத்தபோது எதுவுமே தோன்றவில்லை. சுற்றி சுற்றி மொத்தமாக வெறுமையை நிரப்பிச்சென்றதாக ஒரு பிரமை.. இப்புத்தகம் பிடித்திருக்கிறதா இல்லையா என்று கூட தெளிவாகச் சொல்லமுடியவில்லை.. ஏதோ பிடித்திருக்கிறது.. ஏதோ பிடிக்கவில்லை.. ஏதோ குறைகிறது. ஆனாலும், நிச்சயம் ஏதோ உள்ளே இருக்கிறது.<br /><br /><a href="javascript:;" onmousedown="if(document.getElementById('arasur_vamsam').style.display == 'none'){ document.getElementById('arasur_vamsam').style.display = 'block'; }else{ document.getElementById('arasur_vamsam').style.display = 'none'; }">மேலும் படிக்க...</a><br /><div class="mid" id="arasur_vamsam" style="display: none;"><br /><br />ஒரே கோட்டில்தான் கதை செல்கிறது. ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தைத் தொடராமல், மொத்தமாக அரசூரைத் தொடர்கிறது இக்கதை.<br /><br />காலம் கிட்டத்தட்ட இரு நுற்றாண்டுகளுக்கு முன்.. அது ஏன் கிட்டத்தட்ட? அதுதான் பிரச்சனையே. காலம் என்ற ஒன்றே இங்கு கிட்டத்தட்டதான். சரி. கதைக்குப் போகலாம் வாங்க.<br /><br />அரசூரில் ஒரு புகையிலை வியாபாரம் செய்யும் பிராமணர் சுப்ரமணிய அய்யர். அவருக்கு இரண்டு புத்திரர்கள். வேதங்களை கரைத்துக்குடித்து கடைசியில் மனநிலை பிறழ்ந்து போகும் சாமா முதல்பையன். தந்தைக்குப்பின் புகையிலை வியாபாரத்தை பொறுப்பாக கவனித்துக்கொள்ளும் சங்கரன் இரண்டாமவன். வியாபாரம் மட்டுமல்ல. தினம்தினம் மாடியிலிருந்து பக்கத்து அரண்மனையில் ராணியின் ஜலக்கிரீடையையும் கவனித்துக்கொள்கிறான்.<br /><br />ராணிக்கு ஒரு ராஜா. பெயரைத்தவிர ராஜாவுக்குரிய எந்தவொரு அடிப்படைத்தகுதியுமின்றி, வெள்ளையர்களை அண்டிப்பிழைக்கும் ஒரு டம்மி ராஜா. அவருக்கு மலப்பிரச்சனையிலிருந்து வாய் உபசாரம் கேட்கும் புஸ்தி மீசைக்கிழவன் வரை ஆயிரத்தெட்டு பிரச்சனைகள். இதில் தன் மனைவி குளிக்கையில் பக்கத்து வீட்டுக்காரன் பார்க்கிறான் என்பது பிரதானமிழந்துபோக, கஜானாவிலிருந்து கரையப்போகும் அடுத்த வராகன்தான் அவரின் கவலை.<br /><br />மலையாளக்கரையிலிருந்து மாட்டுப்பெண்ணாக வரும் பகவதிக்குட்டி மற்றும் தமையன் கிட்டாவய்யன் குடும்பத்தைப்பற்றிய பின்புலம்.<br /><br />பார்வதியைப் பெண் பார்க்க அனைவரும் வண்டி கட்டிக்கொண்டு மலையாளக்கரைக்குப் போனபோது சாமாவுடன் வீடும் தீக்கிரையாகுகிறது. அதிர்ச்சியில் அவன் தாய் கல்யாணியம்மாளுக்கு நோவுகண்டுவிடுகிறது. அப்புறம் அங்க சுத்தி இங்க சுத்தி கடைசியில் சங்கரனுக்கும் பார்வதிக்கும் திருமணம் முடிகிறது..<br /><br />உண்மையில் கதையென்று பார்த்தால் எதுவும் சொல்லிக்கொள்ளும்படி பெரிதாக இல்லை.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjReYZRtjvYbkd3FYAC9K-koNzdV-eaMlUthuQwKbIlX0VLux7jcCMKabIRHISjZdpTy-tbzPz3X2FcBrc9nSPoAoLrOJB2d1cBsPDF5mOEc6ExygFkOJlRD97CnjIgIql6QVfw/s1600-h/arasur_vamsam_b.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 195px; height: 297px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjReYZRtjvYbkd3FYAC9K-koNzdV-eaMlUthuQwKbIlX0VLux7jcCMKabIRHISjZdpTy-tbzPz3X2FcBrc9nSPoAoLrOJB2d1cBsPDF5mOEc6ExygFkOJlRD97CnjIgIql6QVfw/s320/arasur_vamsam_b.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5305497775095236834" border="0" /></a><br /><br />இது சாதாராண கதை. இதனை அசாதாராணமாக்குவதற்கென்றே வருகின்றனர் பனியன் சகோதரர்கள். காலத்தால் நுற்றைம்பது வருடத்துக்கு பின்னாலிலிருந்து சர்வசாதாரணமாக ஒரு ஆஸ்டின் காரில் காலத்தில் பயணிக்கின்றனர். கள்ளத்தோணி போட்டு ஜாமான் கடத்தற மாதிரி பின்னாளிலிருந்து பொருட்களை கொண்டு சென்று முன்னாளில் விற்று வருகின்றனர்.<br />ஒரு முறை இறந்தகாலத்தில் புகைப்படம் எடுத்து நிகழ்காலத்துக்கு வந்து டெவலப்செய்து, மீண்டும் இறந்த காலத்துக்கே சென்று விற்கின்றனர். எனக்கு ஏதாவது ஆயிடுச்சோன்னு பயப்படாதீங்க. இதெல்லாம் புத்தகத்தில் வர்ரதுதான்.<br /><br />போதாக்குறைக்கு ராஜாவையே சுற்றி சுற்றி வந்து திவசத்துக்கு சாராயம் கேட்கும் இறந்து போன ராஜாக்கள் வேறு.. சுப்பம்மாளின் வாயில் ஏறி நலங்கு பாடும் மூத்தகுடிப்பெண்டுகள் ஒரு புறம். சாமாவுடன் போகம் கொள்ளும் குருக்கள்பெண் மறுபுறம்.. என்று தெளித்து வைத்த மாதிரி வழி நெடுகிலும் மீகற்பனைக்கான வித்துகள் கொட்டிக்கிடக்கின்றன. யாவரும் அதனை சட்டைசெய்வதில்லை. அதுவும் ஒரு அங்கமாக, அது பாட்டுக்கு இருக்கிறது.<br /><br />நாம்தான் உள்ளே நுழைகயில் ரொம்பவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்..<br />ஏனெனில், எதிர்பாரா சாலையின் திருப்பங்களில், உங்களை மதமாற்றம் செய்விக்க குரிசைகளுடன் பாதிரிகள் காத்திருக்க கூடும். பிரசாதம் வாங்க கோயிலுக்குப் போனால், வெடிக்காரனின் கால்கள் வந்து பிரசாதத்தில் பங்கு கேட்கலாம். அக்கடா என்று சாலையில் நடக்கும் போது ஆகாயத்திலிருந்து சினேகாம்பாளின் தகப்பனார் உங்கள் மீது மூத்திரம் பெய்யலாம். அல்லது யந்திரத்தில் ஒளிந்திருக்கும் தேவதைகள் வந்து குடிக்க பால் கேட்கலாம். 300 ஆண்டுகளுக்கு முன் துர்மரணமடைந்த குருக்கள் பெண் வந்து போகத்திற்கு அழைக்கலாம்...<br /><br />இதுதான் என்றில்லை. எது வேண்டுமானாலும் நடக்கலாம். அதுதான் அரசூர்.<br /><br />குறிப்பிடவேண்டிய விஷயம். அந்த மொழி நடை. விதவிதமான மொழிநடைகள். சுதந்திரத்துக்கும் முந்திய காலத்தின் வெகுஜன தமிழ்நடை மாதிரி.. அரதப்பழசான, தொட்டால் உடைந்துவிடக்கூடிய மாதிரி பழுப்புக்காகிதத்தில் தூசியேறிப்போய் சில புத்தகங்கள் நூலகத்தில் கிடைக்குமே.. அந்த மாதிரி ஒரு நடை.. எப்படித்தான் அப்படி எழுதினார் என்று ஆச்சரியமூட்டுகிறது. ஒரு பக்கம் ரெண்டு பக்கம் அல்ல, பெரும்பாலான இடத்தில் அத்தகைய நடைதான். முழுக்க பிராமண பாஷைதான்.. ஆனால், மனதை கொஞ்சம் திடப்படுத்திக்கொள்ளுங்கள்.. உங்களை அதிரவைக்கும் பிராமண பாஷை இது.<br />பெண்பார்க்கச் செல்கையில் அந்த மலையாள நடை. சென்னைக்குச் செல்கையில் காலத்தால் கொஞ்சம் மாறுபட்ட நடை என்று ஏகத்துக்கு மெனக்கெட்டிருக்கிறார் முருகன்.<br /><br />அதே மாதிரி விதவிதமான கதாபாத்திரங்கள். வெண்பா வடிக்கும் கொட்டக்குடி தாசி, டெலிபதியை முயற்சிக்கும் பிஷாரடி வைத்தியர், தகட்டில் தேவதைகளை நிறுத்தும் ஜோசியர் அண்ணாசாமி ஐய்யங்கார் திவரசப் பிராமணர் சுந்தர கனபாடிகள் என்று நிறைய நிறைய முற்றிலும் முரண்பட்ட கதாபாத்திரங்கள். ஒவ்வொரு கதாபாத்திரத்தையம் ஸ்தாபிப்பதிலும், அந்தந்த சூழ்நிலைகளில் அந்தந்த பாத்திரங்களில் மனஓட்டங்களைச் சித்தரிப்பதிலும் ஆச்சரியமூட்டுகிறார். சில இடங்களில் கொஞ்சம் அதிகப்படியான மன ஓட்டங்கள் சலிப்பைத்தருகின்றன.<br /><br />அப்புறம், கிட்டத்தட்ட நூற்றாண்டு பழமையான மதராஸ்பட்டிண சூழலைப் படம்பிடித்திருப்பதும் ஒரு புதுமையான அனுபவம். காப்பி என்று புதிதாக வந்திருக்கும் ஒரு வஸ்துவைப்பற்றி சிலாகிக்கின்றனர். பெண்பார்ப்பதற்கு வண்டிகட்டிக்கொண்டு நாள்கணக்கில் பயணம் செல்கின்றனர். கிண்டி கிராமத்திலிருந்து சென்னைப்பட்டணம் போய் அரசாங்க உத்தியோகம் பார்க்கும் பிராமணர்கள் இருக்கின்றனர். இப்படி இன்னும் பல.<br /><br />உறுத்திய விஷயம். அதுவும் நடைதான்.. சில இடங்களில் ரொம்ப abusive.. கொஞ்சம் அதிகப்படியான டோஸ்தான்.. இவ்வளவு காட்டம் தேவையான்னு தெரியல. போகம் போகம் போகம். சில பாத்திரங்களின் வடிவமைப்பிலேயே போகமும் கூடவே வந்துவிட்டிருக்கிறது. ராஜாவுக்கு சேடிப்பெண் மீது எப்போதும் ஒரு கண். சாமாவுக்கு குருக்கள் பெண். சங்கரனுக்கு பார்வதிக்குட்டி. இருந்தாலும் கப்பலில் வெள்ளைக்காரப் பெண்மணிகளுடன் சுகித்திருக்கிறான். கிட்டாவய்யனுக்கு பணிமுடிந்து திரும்புகையில் வழியில் தென்படும் அனைத்து பெண்களும் காமபாணம் எய்கின்றனர். சில இடங்களில் கதைக்குத் தேவையான ஒன்றாகத் தோன்றினாலும் இவ்வளவு தேவையா? தெரியவில்லை.<br /><br />இப்படியெல்லாம் கதை எழுதினால் இதன்பெயர் மாய யதார்த்தமாம். ஏதாவது விளக்கம் தேவைப்பட்டால், இருக்கவே இருக்கார் நம்ம கவிதை அண்ணாத்த அனுஜன்யா. அவரின் <a href="http://anujanya.blogspot.com/2008/08/blog-post_28.html">இந்தப் </a>பக்கத்திற்கு போய்ப்பாருங்க.<br /><br /><br />கடைசியா என்னதான் சொல்ல வர்ர? இதைப் படிங்கறீயா? வேணங்கறியா..?<br /><br />நீங்கள் பதினெட்டு வயதுக்குட்பட்டவரா (அ)<br />அவ்வப்போது மனநிறைவுக்குக்காகவும் பொழுது போக்கிற்காகவும் புத்தகங்கள் படிப்பவரா.. தாராளமாய் இந்த பதிவை இத்துடன் மறந்துவிட்டு உங்கள் அன்றாடப்பணிகளைத் தொடரலாம்..<br /><br />இல்லை. நன் ஒரு தீவிர வாசிப்பாளன். தேடித் தேடிப் படிப்பவன். புதியன தேடும் பித்தன் அப்பிடீன்னெல்லாம் வசனம் பேசற ஆளா? தப்பே இல்லை.. படிச்சுப்பாருங்க.<br /><br />புத்தகத்தை இணையத்தில் வாங்க <a href="http://nhm.in/shop/978-81-8368-008-0.html">இங்கே </a>செல்லலாம்<br /><br />--------<br />அரசூர் வம்சம்<br />இரா. முருகன்<br />464 பக்கங்கள்<br />ரூ.175<br />கிழக்கு பதிப்பகம்<br />---------<br /></div>Bee'morganhttp://www.blogger.com/profile/17499868778064830704noreply@blogger.com14tag:blogger.com,1999:blog-27865649.post-46896880054005551402009-02-07T16:29:00.006+05:302009-02-07T22:59:46.537+05:30உபபாண்டவம்வாய்வழிக்கதைகளோ திரைப்படமோ தொலைக்காட்சியோ, இந்தியாவில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் உணவுடன் சேர்த்தே ஊட்டப்படும் விஷயங்களில் ஒன்று மகாபாரதம். எப்படியோ வந்து நம்முடன் ஒட்டிக்கொண்ட அதே பாரதம். அதே கதை. அதே மாந்தர்கள். ஆனால் எஸ்ரா திரும்பவும் சொல்லும் போது முழு பாரதமும் இது வரை கண்டிராத புதியதொரு பரிமாணம் கொள்கிறது.<br /><br />இதுவரை நாம் கேட்டுவந்த பாரதங்கள் போல் படர்க்கையிலல்லாது முன்னிலையில் கதை சொல்லும் உத்தியே மிகவும் அலாதியானது.<br />மகாபாரதம் என்பது நடந்து முடிந்த கதையல்ல. அது நடக்கும் கதை. நடந்து கொண்டிருக்கும் கதை என்கிறார். ஒரு தேசாந்திரியாக அஸ்தினாபுரத்தினுள் நுழைந்து தன் கண்முன் நடக்கும் காட்சிகளாக பாரத்தை விவரிக்கிறார். முன்கதை தேவைப்படும் சில இடங்களில் சூதர்கள் சொல்லும் கதைகளாக நம்முன் வைக்கிறார்.<br /><span class="fullpost"><br />வெறும் வயிறில் பருகப்படும் ஒரு மிடறு திரவம் நாம் உணரும் போதே மிக மெதுவாக உணவுக்குழலுக்குள் இறங்குவதைப்போல், நாம் உணரும் போதே மிக மெதுவாக நம்முள் ஊடுருவிச் சென்று உறைகிறது இந்த பாண்டவம். கொஞ்சம் கூட அவசரப்படாமல் நிதானமாக மிக நிதானமாக ஏறக்குறைய ஒரு மாதங்களுக்கும் மேலாக இந்நுலை படித்துமுடித்தேன். முடிக்கையில், கௌரவர்களும் பாண்டவர்களும் கதாமாந்தர்களாக இல்லாமல், நம் அண்டைவீட்டு மனிதர்களாக உருக்கொள்ளும் அந்த பிம்பமே ஆசியரியரின் வெற்றி.<br /><br />நாம் இதுவரை பெயர் மட்டுமே அறிந்திருந்த பலருக்கு உணர்வும் உருவமும் தந்து உலவவிட்டிருக்கிறார். குறிப்பாக மயனின் முன்கதையும் ஜராவின் வஞ்சமும் ஏகலைவன் பெற்ற நாயின் சாபமும் போன்ற எண்ணற்ற கிளைக்கதைகள் பெருத்த அதிர்வினை ஏற்படுத்துகின்றன. புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அரண்மனையில் பாஞ்சாலியின் சிரிப்பொலியும் அதனால் துரியோதனன் கொண்ட சினமும் இயல்பாக நடந்தவையென்றே நினைத்திருந்தேன். ஆனால் அத்தனையும் தி்ட்டமிட்டே நடத்திவைக்கப்பட்டன என்று இவர் சொல்கையிலும் கூட கொஞ்சமும் முரண்படவிடாமல் மகுடிக்குக் கட்டுப்பட்ட சர்ப்பமென தன்னுடனேயே அழைத்துச்செல்கிறார்.<br /><br />குறிப்பாக துரியோதன வதம் பற்றிய விவரிப்பில் துரியோதனனைப்பற்றி இதுவரை நாம் கட்டமைத்திருந்த அனைத்து பிம்பங்களும் உடைந்து சிதறுகின்றன. நாயகனுக்கும் அநாயகனுக்கும் இடையிலான யுத்தமாக விவரிக்காமல் இரு முரண்பட்ட கருத்துகள் கொண்டோருக்கு இடையிலான யுத்தமாகவே குருஷேத்திரம் இங்கு படர்கிறது.<br /><br />படிக்கப்படிக்க ஆச்சரியப்படாமல் இருக்கமுடியவில்லை. இந்த மனிதர் வார்த்தைகளில் என்னவொரு லாவகத்துடன் விளையாடுகிறார். சுனையிலிருந்து பீறிடும் நீர் போல அத்தனை சரளத்துடன் ஒரு நடை. படிக்கும் போது ஒரு போதையென நம்மை ஆட்கொள்கிறது. <br /><br />எவ்வளவு சொன்னாலும் வார்த்தைகளில் விவரிக்கமுடியாத அனுபவம் அது. தீவிரவாசிப்பில் ஆர்வம் கொண்டவர்கள் நிச்சயம் தவறவிடக்கூடாதது இந்த பாண்டவம்.<br /><br />லயத்துடன் ஆட்டப்படும் ஒரு ஊஞ்சல் போல் கதை காலத்தில் முன்னும் பின்னுமாக பயணிப்பதால் மகாபாரதக்கதையில் ஓரளவுக்கு குழப்பமற்ற பரிச்சயம் நலம்.<br /><br />உபபாண்டவம் பற்றி சேரலும் அருமையானதொரு பதிவிட்டிருக்கிறார் <a href="http://puththakam.blogspot.com/2009/01/30.html">இங்கே</a>. <br /><br />இணையத்தில் வாங்க <a href="http://www.anyindian.com/product_info.php?manufacturers_id=43&products_id=43094">இங்கே</a> செல்லலாம். <br /><br />----------------------<br />உபபாண்டவம்<br />எஸ். ராமகிருஷ்ணன்<br />விஜயா பதிப்பகம்<br />384 பக்கங்கள்<br />ரூ. 150<br />----------------------<br /></span>Bee'morganhttp://www.blogger.com/profile/17499868778064830704noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-27865649.post-18299399245917949912009-01-03T19:41:00.009+05:302009-01-10T22:39:32.928+05:30சமுத்திரத்தில் மீன்களை வரைபவன்<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh3Me-lzu1mGl5nA1de5iwe43YEikDn6UH2lkdPvLs7qRzLCfYbgeCoeUqT7AjAj-3uwhVC7tQyNIKjY1aIAriflM-XPLtO7cX6_0bSx12PXJVlAXFfJKBCScauNmhJPmvo6UDd/s1600-h/child_drawing.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 211px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh3Me-lzu1mGl5nA1de5iwe43YEikDn6UH2lkdPvLs7qRzLCfYbgeCoeUqT7AjAj-3uwhVC7tQyNIKjY1aIAriflM-XPLtO7cX6_0bSx12PXJVlAXFfJKBCScauNmhJPmvo6UDd/s320/child_drawing.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5287080807055556354" /></a><br />நீங்கள் கடைசியாக வரைந்தது எப்போது? நினைவிலிருக்கிறதா? <br /><br />எனக்கு வரையவே வராது. நான் வரைந்ததே இல்லை என்று தத்து பித்து காரணங்களெல்லாம் வேண்டாம். <br />நாம் எல்லாருமே வரைந்திருக்கிறோம்.. சிறிதோ பெரிதோ.. சுமாரோ சூப்பரோ, சிலேட்டோ தரையோ புதுச்சுவரோ, அதனை ஒரு தேர்ந்த ஓவியனுக்கே உரிய சிரத்தையுடன் மற்றவர்கள் நினைப்பைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் நமக்காக.. நமக்காக மட்டுமே வரைந்திருக்கிறோம்.. நினைவிலிருக்கிறதா?<br /><br />ஆனா ஆவன்னாவிற்கும் முன்னதாக நம் கைவரப்பெற்ற கலை அது. நாம் கற்றுக்கொண்ட முதல் வரிவடிவம்..<br />வரைந்து முடித்த பின்பான அந்த மனநிலை நினைவிலிருக்கிறதா..? வரைந்தது சின்னஞ்சிறிய கோட்டோவியமே ஆயினும், முப்பரிமாண பிம்பமென மயக்கமுறும் வகையில் வெவ்வேறு தொலைவுகளில் வெவ்வேறு கோணங்களில் வைத்து ரசித்திருக்கிறீர்களா? தீக்குச்சி மனிதர்களைக் கொண்டு வகுப்பறை நண்பர்களுக்கு கதை சொல்லியிருக்கிறீர்களா? பள்ளியில் ஓவிய நோட்டில், ஓரு மலை அதன் இடையிலிருந்து ஓடிவரும் ஒரு நதி, கரையில் ஒற்றைத் தென்னைமரம், அருகிரேயே வயல் சூழ்ந்த ஒரு குடிசை வரைந்த அனுபவம் உண்டா?<br /><br />எங்கே இருக்கிறான் அந்த ஓவியன் இப்போது? என்றாவது தேடியதுண்டா?<br /><span class="fullpost"><br />நம் முதல் ஓவியம் எழுத்துக்கள்தான். அப்படி ஒரு சிரத்தையுடன் ஒவ்வொரு எழுத்தாக வரையத் தொடங்கினோம். அவை வரையப்படுபவை என்ற நிலையிலிருந்து எழுதப்படுபவையாக மாறும் போது அந்த சிரத்தையும் கொஞ்சம் கொஞ்சமாய் காணாமல் போகிறது.<br /> <br />கொஞ்சம் யோசித்தால், பள்ளியில்தான் நான் முதன் முதலில் மற்றவர்களுக்காக வரையத்தொடங்கினேன்.. ஆசிரியர்களுக்காக. நான் வரையவனவற்றின் மதிப்பு அவை பெறும் மதிப்பெண்களை விட அதிகம் எனக்கு.. ஒவ்வொருவருக்கும்தான்.<br />இப்படித்தான் வரைய வேண்டும் என்றில்லாமல், எப்படியும் வரையலாம் என்றிருந்த காலமது.<br />8 ம் வகுப்பு ஆ பிரிவில் கயல்விழியின் ரப்பர் வளையளோ, ஜியாமெண்ட்ரி பாக்சின் நீள் வட்டத்துளையோ, ஏதுமற்ற நேரங்களில் வெறும் கையோ போதுமானதாக இருந்தது கிளாமிடோமோனாசை வரைவதற்கு. அப்போதெல்லாம் கிளாமிடோமோனாஸ் ராமுவிடம் வட்டமாகவும், புண்ணியமூர்த்தியிடம் நீள்வட்டமாக பென்சில் ஷேட் உடனும், காயத்ரியிடம் பொட்டு வைத்த முகம் போலவும் இருக்கும். அது கிட்டத்தட்ட ஒரு வளர்ப்புப்பிராணி மாதிரி. வரைந்து முடித்த பின், <br /><br />”ஹை.. என்னோடதப் பாரு.. எப்படி இருக்குனு.. நல்லாருக்கா..?”<br /><br />ஒவ்வொரு வகுப்பிலும்.. இந்த சம்பாஷனைகள் கண்டிப்பாய் இடம் பெற்றிருக்கும்.. <br /><br />வகுப்பறைக்கு வெளியே ட்வீட்டியும் மிக்கி மௌசும் என் பால்ய நண்பர்கள். ஏராளமான முறை வரைந்திருக்கிறேன். தங்கமலரில் வரும் கிருஸ்துமஸ் தாத்தா, ஒரு வரி பிள்ளையார், காந்தி தாத்தா என அனைவரும் என் கைவண்ணத்திலிருந்து தப்பியதில்லை.<br /><br />பள்ளியில் மிக எளிய கோட்டோவியங்களிலிருந்து கொஞ்சம் சிக்கலான குறுக்குவெட்டுத் தோற்றங்களை வரையத்தொடங்கிய நாளில், என் நண்பர்கள் பலருக்கு வரைவதின் மீதிருந்த ஆர்வம் ஓரமாய் ஓடிப்போய் ஒளிந்து கொண்டது. அதன் உச்சம் விலங்குசெல்லின் குறுக்கு வெட்டுத் தோற்றம். அந்த சமயம் பெரும்பலானோர், பேப்பரில் பென்சில் கொண்டு கொத்து பரோட்டோ போடத் தொடங்கியிருக்க நான் மட்டும் கோலத்துக்கு புள்ளி வைப்பதாய் வைத்துக்கொண்டிருப்பேன். எப்படியோ வந்து ஒட்டிக்கொண்டு விட்டது அந்த ஆர்வம். நான் பெரிய ஓவியன் என்ற அவசரமுடிவுக்கெல்லாம் வரவேண்டாம். நான் வரைபவன். அது எப்படி வந்தாலும் விடாது வரைபவனாகத்தான் இருந்தேன். அது ஏதோ ஒரு வகையில் மனநிறைவைத் தந்தது. <br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhNlfnJgDU0eQamNAIEEk60JkYwMCv_HsL9ZsmJZys3AisfeRNwBSOs-d9p9yr0zDpZcMaHcCdVBUJV3CZnR9H8PHFqIiqXZwjLvTCCkv4lbMWSkNp1VAkO1k2BoHzYcG6kbi33/s1600-h/drafter.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 248px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhNlfnJgDU0eQamNAIEEk60JkYwMCv_HsL9ZsmJZys3AisfeRNwBSOs-d9p9yr0zDpZcMaHcCdVBUJV3CZnR9H8PHFqIiqXZwjLvTCCkv4lbMWSkNp1VAkO1k2BoHzYcG6kbi33/s320/drafter.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5287081697004407410" /></a><br /><br />கல்லூரிக்கு வந்த புதிதில், Engineering Drawing ஆஸ்பத்திரி சுத்தத்துடன் வரைதலை அணுகச் சொன்னது. ஒவ்வாரு மில்லி மீட்டரும் வரைதலின் அங்கம் என்றது. வரைந்தேன். அதுவும் கூட புதுவகையான ஆனந்தமாக இருந்தது. வரைவதற்கென்றே பிரத்யேகமான தயாரான தாள் , விதவிமான கருவிகள், உயரமான மேசை என புதுச்சீருடையில் பள்ளி செல்லும் குழந்தையின் குறுகுறுப்புடன் கடந்து சென்றன அந்த ஓவிய நாட்கள்.<br />முதலாமாண்டு கடந்த பின்னரும் கூட அவ்வப்போது, தூங்க வைக்கும் பேருரையாசிரியர்களின் வகுப்புகளில் நோட்டுப்புத்தகத்தில் ஏதேதோ வரைந்ததுண்டு.<br /><br />ஆனால் இன்று வேலைக்கு வந்த பின் கடைசியாய் வரைந்தது எப்போது என்று தெளிவாய்ச் சொல்ல முடியவில்லை. வரைதல் என் விருப்ப பொழுதுபோக்காக இருந்ததிலிருந்து, ஒரு தொழிற்பெயராய் மாறியது எப்போது என்று யோசித்தால் விடையில்லை.<br />ஒரு வேளை பால்யம் தொலைத்து சொந்தம் விட்டு, தேசம் விட்டு தூக்கம் தொலைத்து நாம் துரத்தும் நாணயச் சிதறல்களில் காணாமல் போயிருக்கலாம். எனக்கு வரைதல் போல உங்களிடமிருந்தும் கவனிக்கக் கூட அவகாசமின்றி ஏதாவதொன்று காணாமல் போயிருக்கக் கூடும். கொஞ்சம் மூச்சு வாங்கிக்கொண்டு தேடிப்பாருங்கள், தொலைத்த இடத்தை கடப்பதற்கு முன்..<br /><br />பள்ளியில் என்னுடன் படித்த பழனிவேலுவுக்கு வினோதமானதொரு பழக்கமுண்டு. ஒவ்வொரு முறை சமூகஅறிவியல் பாடத்தில், பெருங்கடல்களைக் குறிக்கச்சொல்லி வரைபடங்கள் கொடுக்கப்படும் போதெல்லாம், சமுத்திரங்களை குறித்து விட்டு, அவற்றில் கர்ம சிரத்தையாக மீன்களை வரைந்து கொண்டிருப்பான். பல முறை ஆசிரியர்கள் கூப்பிட்டுக் கண்டித்தும் கூட அவன் மாறவே இல்லை. கேட்டால், <br /><br />”மீன்கள் இல்லா விட்டால் அது எப்படி சமுத்திரமாகும்? என் மீன்கள் இருப்பதால்தான் சமுத்திரத்துக்கு உயிர் வருகிறது ” என்பான்.<br /><br />ம்ம்ம்... <br />இப்போது யோசித்துப் பார்க்கையில் உண்மையென்றே படுகிறது.<br /></span>Bee'morganhttp://www.blogger.com/profile/17499868778064830704noreply@blogger.com41tag:blogger.com,1999:blog-27865649.post-43592353439509770622008-12-08T13:18:00.011+05:302008-12-08T20:07:13.762+05:30ரகுவம்சம்நமக்கெல்லாம் இராமனின் அயணம் இராமாயணம் தெரியும். ஆனால், அவனுக்கு முன்னும் பின்னுமான கதை பெரிதும் தெரியப்படாமலேயே இருக்கிறது. இராமன் பிறந்த அந்த வம்சத்தை அதன் வரலாறை ஆதியோடந்தமாக விவரிக்கிறது இந்நூல்.<br /><br />ஒவ்வொரு அரசனின் வரலாறும் ஒரு அத்தியாயமாக வருகிறது. இராமனின் வரலாறான இராமாயணம் இந்நூலின் ஒரு அத்தியாயம் எனும் போது ரகு வம்சத்தின் உண்மையான பரிமாணம் விளங்கும்.<br /><br />யார் இந்த ரகு? ரகு, ராமனின் கொள்ளுத்தாத்தா. ராமனின் வரலாற்றில் ஏராளமான ஜனரஞ்சக விஷயங்களும் வீரதீர சாகசங்களும் நிறைந்திருந்தாலும், ரகுவின் காலத்தில்தான் அந்த சாம்ராஜ்யம் விசுவருபம் கொண்டு தெற்கே காவிரி வரை வியாபித்து நிலைகொண்டது. அதனால்தான் ரகுவம்சம்.<br />ஆசிரியருக்கு சொல்வதற்கு ஏராளமான விசயங்கள். எல்லாவற்றையும் முடிந்த அளவு சுவைகுன்றாமல் சுருக்கி அளித்திருக்கிறார்.<br /><span class="fullpost"><br />படிக்கும் போதே கருத்தைக் கவர்வது அந்த மொழி நடைதான். படிக்க படிக்கத்தான் புரிகிறது காளிதாசன் ஏன் இவ்வாறு கொண்டாடப்படுகிறான் என்று. ஒரு மாதிரி ஆடம்பரமான எழுத்து நடை. குறிப்பாக உயர்வு நவிழ்ச்சியும் தற்குறிப்பேற்றமும் திகட்டத் திகட்ட கொட்டிக்கிடக்கின்றன.<br />நூற்று முப்பதுக்கும் குறைவான பக்கங்களில் மிகச்சிறிய புத்தகம்தான். ஒரு சில மணிநேரங்களில் முடிக்க முடிந்தாலும், மிக நிதானமாக அனுபவித்துப் படிக்க வேண்டிய ரகம் இது.<br />காட்சி விவரிப்புகளிலும் அப்படி ஒரு அழகு. நான் எதுவும் சொல்ல வேண்டாம். இதோ ஒரு வசந்த கால வர்ணனை..<br /><blockquote>மாமரத்தில் தளிர்கள் தோன்றி காற்றில் அசையும் போது கிளைகள் விரல்களை அசைத்து அபிநயம் செய்ய பழகுவது போல் தோன்றின. குயில்களின் வசந்தகாலக் கூவல், நாணத்தால் இளம்பெண்கள் காதற்பேச்சை மென்று விழுங்கிப் பேசுவது போல் இருந்தது. காடு முழுவதும் மலர்கள் தோன்றி, வண்டுகள் ரீங்காரம் செய்யத்தொடங்கின. இதனால் கிளைகள் அபிநயம் பிடித்து ஆடின<br />ரகுவம்சம் - பக்கம் 67</blockquote><br />அழகியல் மட்டுமல்ல, போர்களங்களிலும் இந்த வார்த்தை ஜாலம் தொடர்கிறது. அஜன் படையெடுத்து செல்லும் காட்சியை காளிதாசன் எப்படி விவரிக்கிறான் என்று பாருங்கள்.<br /><blockquote>ஆனாலும் முறைப்படி நடந்த யுத்தம் மிகக்கடுமையாக நடந்தது. பலர் அதில் கொல்லப்பட்டனர். பலருடைய தலைகள் வெட்டப்பட்டு, வெட்டிய வேகத்தால் அவை உயரக்கிளம்பிச் சென்றன. யுத்தகளத்தில் பிணங்கள் கிடந்ததால், கழுகுகள் ஆகாயத்தில் சுற்றிச் சுற்றி வந்தன. அவற்றின் கால்நகங்களில் தலைகளின் மயிர் சிக்கியதால் தலைகள் கீழே தரையில் விழத் தாமதம் ஆயிற்று.<br />... ... ...<br />குதிரைகளின் காலடி வேகமாகப் படுவதால் புழுதி கிளம்பியது. யானைகள் தன் விசிறி போன்ற காதுகளை அசைப்பதால் புழுதி எங்கும் பரவியது. பரவிச்சென்ற புழுதிப்படலம் சூரியனையே திரையிட்டு மறைப்பதைப் போல் மறைத்துவிட்டது. ஆனால், போரின் கடுமை மேலும் அதிகரித்தபின் வெட்டப்பட்ட உடல்களிலிருந்து பெருகும் ரத்தம் புழுதியைச் சற்றே அடக்கியது..<br />ரகுவம்சம் - பக்கம் - 53,54<br /></blockquote><br /><br />‘நந்தவனத்திற்கு செல்லும் வழி’ என்று பெயர்ப்பலகை படிப்பதைப் போலிந்தது இந்நூல். நந்தவனம் என்று படிக்கும் போதே இப்படி இருக்கிறதே, உண்மையிலே அந்த நந்தவனத்திற்கு சென்றால் என்ற எண்ணம் தவிர்க்க முடியாமல் கடந்து செல்கிறது. ரகுவம்சத்தை அதன் மூல வடிவிலேயே படித்துச் சுவைக்கும் அளவிற்கு மொழியறிவு இல்லாததால் பெயர்ப்பலகை கொண்டே சமாதானம் கொள்ளவேண்டியிருக்கிறது.<br /><br />கதை நடந்த காலத்தை ஒட்டிய பல சுவையான துணுக்குகள் காணக்கிடைக்கின்றன. ஏதாவது மரம் பூக்காமல் இருந்தால் என்ன பண்ணுவோம். கொஞ்சம் யூரியாவோ பொட்டாஷோ கலந்து வைக்கணும் என்றுதான் நாம் யோசிப்போம். ஆனால், காளிதான் எப்படி யோசிக்கறார்னு பாருங்க.<br /><blockquote>மகிழ மரம் மலராது இருந்தால், இளமையான அழகிய பெண்கள் மதுவைத் தம் வாயில் ஊற்றி, பின் மரத்தின் மேல் உமிழவேண்டும். அப்படி உமிழ்ந்தால் மரம் உடனே பூக்கும் என்பது நம்பிக்கை. இதற்கு தோஹதம் என்று பெயர்.<br />ரகுவம்சம் - பக்கம் 66</blockquote><br />(கொடுத்து வைத்த மகிழ மரம் ;-) )<br />இப்படிப் பண்ணினா, நிச்சயம் மரம் பூக்கும்னு நினைக்கிறேன். உங்களுக்கு ஏதாவது சந்தேகமா?<br /><br />பல போர்க்களத் தந்திரங்களும் காணக்கிடைக்கின்றன.<br /><blockquote>முன்னேறிச் செல்லும் சேனைக்கு இடையூறாக எங்கேனும் சிறிய ஆறுகள் குறுக்கிட்டால், யானைகளை வரிசையாக நிறுத்தி பாலம் அமைத்துக்கொண்டு ஆற்றைக் கடந்து படைகள் முன்னேறிச் செல்லும். இப்படித்தான் கபிசை என்ற ஆற்றைக் கடந்து படைகள் முன்னேறிச் சென்றன.<br /></blockquote><br />எங்கும் யுத்ததர்மம் மீறப்பட்டதாக குறிப்புகள் இல்லை. (பெரும்பாலான) யுத்தங்கள் தர்ம சாத்திரத்தின் படியே நடந்திருக்கின்றன. படையெடுத்து செல்லும் மன்னன் போர் ஒன்றையே குறிக்கோளாய்க் கொள்ளாமல் செல்லும் வழியிலுள்ள ஊர்களுக்கெல்லாம் சாலையமைத்தல் நீர்வசதி ஏற்படுத்துதல் போன்ற அடிப்படைச் சீர்திருத்தங்களைச் செய்தபடியே முன்னேறுவதாக வருகிறது.<br /><br />இங்கு கவனிக்க வேண்டிய விசயங்கள் இரண்டு. ஒன்று போர் என்பது நாட்டின் எல்லைகளை விரிவாக்குவதற்கு நடந்தாலும், அதில் ஒரு அவசரம் இல்லை. முன்னேறும் படைகள் மிக நிதானத்துடன், தங்களின் மக்கள் வளத்தை வீணடிக்காமல் ஊர்ச்சீர்திருத்தத்துக்காக பயன்படுத்தியுள்ளனர்.<br /><br />இரண்டாவது போர்களத்திற்கு செல்லும் படைகளை அக்ரோணி என்ற அலகில் வரையறுக்கின்றனர். இப்படி பெரும்படைகள் கடந்து செல்லும் போது கடக்கும் ஒவ்வொரு ஊரிலிருந்தும் ஏராளமான உணவுப்பொருட்களும் பிற அடிப்படைத் தேவைகளும் பெறப்படும். என்னதான் நாட்டைக் காக்கும் படையாக இருந்தாலும், ஒரு அளவைத் தாண்டும் போது மக்களின் அதிருப்தியை சம்பாதிக்க நேரிடும். அதனை தணிக்கும் விதமாகவும் இந்த சீர்திருத்தங்களைக் கொள்ளலாம்.<br /><br />எது எப்படியோ, யுத்த தர்மத்திலும் அரசியல் நடைமுறைகளிலும் ரகு வம்ச மன்னர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன.<br /><br />முழுவதும் கதையுடன் ஒத்துப் போனேன் என்று சொல்ல முடியாது. ஒரு சில முரண்கள் ஏற்பட்டாலும், இது ஒரு காவியம். அந்த வகையில் சில சலுகைகள் கிடைத்துவிடுகின்றன.<br /><br />நூலாசிரியர் அ.வெ.சுப்பிரமணியனை பாராட்டியே ஆகவேண்டும். காலம் கடந்து நிற்கும் ஒரு காவியத்தை அழகாக தமிழ் வாசகர்களுக்காக படைத்திருக்கிறார்.<br /><br />NHM ன் புத்தக வடிவமைப்பு பற்றி சொல்லவே வேண்டியதில்லை. ஒரே ஒரு நெருடல். ‘சமஸ்கிருமும் தமிழும் இவருக்கு இரண்டு கண்கள்’ என்பதைத் தவிர, மருந்துக்குக் கூட ஆசியரைப்பற்றிய குறிப்புகள் புத்தகத்தில் இல்லை. சிறிய அளவிலாவது ஆசிரியர் குறிப்பு வைத்திருக்கலாம் என்று பட்டது.<br /><br />மத பேதங்களைக் கடந்து தொன்மையான இந்திய மனதின் கதைகளை, அதன் வரலாறை, வாழ்க்கையை அறிந்து கொள்ள, இது முழுமையான நூல் அல்ல. ஆனால், நிச்சயம் படிக்கப்பட வேண்டிய நூல்.<br /><br />நூலைப் பற்றிய மேலும் சில தகவல்கள்:<br />ரகுவம்சம்<br />அ.வெ.சுப்பிரமணியன்<br />வரம் வெளியீடு<br />136 பக்கங்கள்<br />ரூ.60<br />ISBN 978-81-8368-424-8<br /><br />புத்தகத்தை <a href="http://nhm.in/printedbook/415/Raghuvamsam">இங்கே</a> வாங்கலாம்.<br /><br /><a href="http://thoughtsintamil.blogspot.com/2008/11/nhm.html">சிறப்பான ஒரு திட்டத்தை</a> அறிமுகம் செய்து, இப்புத்தகத்தை வழங்கி உதவிய NHM - ற்கும் உடனுக்குடன் பதிலளித்து உதவிய நண்பர் ஹரன் ப்ரசன்னாவிற்கும் என் நன்றிகள். <br /></span>Bee'morganhttp://www.blogger.com/profile/17499868778064830704noreply@blogger.com18