Sunday, February 22, 2009

அரசூர் வம்சம்

”..... அடுத்த தடவை பனியன் சகோதரர்கள் வரும்போது கேட்க வேண்டும். இல்லை நாளைக் காலை புதுப்பால் காப்பிக்கு முன்னோர்கள் இறங்கி வரும்போது.

அவர்கள் என் முன்னோர்கள் இல்லாமல் இருந்தால் ?

பாதகமில்லை.அவர்களுக்குத் தெரிந்த ஒரு சுலைமான் இருப்பான். ஒரு சாமிநாதன் இருப்பான். அரசூர் வம்சம் இருக்கும். பெயர் மாறியிருக்கும். இடம் மாறியிருக்கும். காலம் முன்னே பின்னே இருக்கலாம். ஆனாலும் யாரோ எங்கோ இருந்ததையும் மகிழ்ந்ததையும் நடந்ததையும் நடக்காததையும் சொல்லட்டும்.

கேட்டு விட்டு எழுதுகிறேன்.”


படித்து முடித்து மூடிவைத்தபோது எதுவுமே தோன்றவில்லை. சுற்றி சுற்றி மொத்தமாக வெறுமையை நிரப்பிச்சென்றதாக ஒரு பிரமை.. இப்புத்தகம் பிடித்திருக்கிறதா இல்லையா என்று கூட தெளிவாகச் சொல்லமுடியவில்லை.. ஏதோ பிடித்திருக்கிறது.. ஏதோ பிடிக்கவில்லை.. ஏதோ குறைகிறது. ஆனாலும், நிச்சயம் ஏதோ உள்ளே இருக்கிறது.

மேலும் படிக்க...

14 comments:

  1. யப்பா...! இப்பவே கண்ணக்கட்டுதே? :-). இது போல பழைய நடை கொண்ட சிறுவர் புத்தகங்களை நூலகத்தில் படித்திருக்கிறேன். அவை அலாதியானவை. பள்ளிக்கூட விடுமுறையில் உறவினர் வீட்டுக்கு செல்வதும் அங்கே நடக்கும் சம்பவங்களையும் சித்தரிக்கும் சிறார் நாவல் ஒன்றை வாசித்திருக்கிறேன். ‘பரிகாசம்’ போன்ற புதிய வார்த்தைகளை அதிலிருந்துதான் கற்றேன். அந்த நூலக நாட்கள்தான் நினைவிற்கு வருகின்றன...

    பதிவுக்கு பதிவு எழுத்து மெருகேறி வருகிறது... :-)

    ReplyDelete
  2. அழகாக எழுதுகிறாய் பாலா.
    வாழ்த்துகள்!

    தீவிர வாசிப்பு சரிதான். ஆனால் இதைவிடப் படிக்க வேண்டிய நூல்கள் இன்னும் நிறைய இருப்பதாக நான் கருதுகிறேன்.

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  3. @ சாணக்கியன் :
    இதுக்கே அசந்துட்டா எப்படி? இது ட்ரெய்லர்தான். ;)

    உண்மையில் நூலகத்தில் புத்தகம் பெற்று படிப்பதெல்லாம் அழகான ஞாபகங்கள்.. இப்போது அதையெல்லாம் விட்டு ரொம்பதூரம் வந்துவிட்டோம்..

    கருத்துக்கும் நன்றி :)

    ReplyDelete
  4. @ சேரல் :
    நன்றி சேரா.. :)

    //
    ஆனால் இதைவிடப் படிக்க வேண்டிய நூல்கள் இன்னும் நிறைய இருப்பதாக நான் கருதுகிறேன்.
    //

    :) வாவ்.. கிட்டத்தட்ட இதே பொருள்படும் வரியொன்றை நானும் எழுதியிருந்தேன். இது அறிமுகம் மட்டுமே. இதற்குமேல் அவரவர்களின் தனிப்பட்ட விருப்பங்களைப்பொறுத்து என்று, இரண்டாம் மூன்றாம் திருத்தல்களில் அதனை நீக்கிவிட்டேன். நான் விட்டதை அப்படியே நீங்களும் சொல்லியிருக்கீங்க..

    ReplyDelete
  5. பாலா! இந்தப் புத்தகம் ஒரு புண்ணியம் செய்திருக்குமானால், அது உங்க கைல வந்து இங்க ஒரு பதிவாகி, என்ன வயிறு குலுங்க சிரிக்க வச்சதுதான்.

    MMKR-ல ஊர்வசி சொல்றது போல "நீங்க உங்க வேதனையைச் சொல்றேள்! நான் சிரிச்சுண்டு இருக்கேன்!" அப்படின்னு உங்ககிட்ட சொல்லனும்னு தோணுது!

    போகம், சுதித்தல் என்கிற விசயங்கள் பெரும்பாலும் எழுத்து நடைல அளவுக்கு மீறி இருந்தா அனாவசியம். அப்படி எழுதறவங்க விரச உணர்வ தூண்டனும்னு நோக்கம் உடையவங்களா மட்டுமே இருக்க முடியுங்கறது என்னோட எண்ணம். அன்னாரை வாழ்த்தி வரவேற்க கா(ம)மிக்ஸ் பத்தரிக்கைகள் இருக்கின்றன.

    இலக்கியத்துல விரசம்கிறது பிரம்மாஸ்திரம்தான். ஆனா அதை உபயோகிக்காமலேயே வாசக நெஞ்சங்கள வென்றிருக்காரே நம்ம கல்கி :). திருந்துங்கய்யா!

    ReplyDelete
  6. Miga alazha irukirathu ungaloda eluthu mattrum ungaloda tamil alumai, valthukal :-) Ungalai pondravargalin asirvathathudan nanum pathivu poda arambithu ullan.

    Kandipa ungaluku pidikum endru nambugiran.
    http://sureshstories.blogspot.com/2009/03/blog-post_02.html

    கருணாநதி அரசு மருத்துவமனையில் ?
    அன்புள்ள முதல் அமைச்சர் அவர்களே,
    உங்களுக்கு உடம்புக்கு முடியவில்லை என்று நீங்கள் அரசு மருத்துவமனைக்கு சென்று இருந்தால் என்ன லாபம் என்று கிழே பதிவு செய்து இருகிறேன்.

    ReplyDelete
  7. @Subi:
    வணக்கங்கண்ணா.. :) முதல் முறையா வந்துருக்கீங்க.. கருத்தும் சொல்லியிருக்கீங்க.. மிக்க நன்றி :)

    தாமதமா பதில் சொல்றதுக்கு மன்னிக்கனும். அலுவலகத்தில் ஆணிகளின் எண்ணிக்கை அளவுக்கதிகமா பெருகறாதால கொஞ்சம் லேட் ஆயிடுச்சு. :P

    ReplyDelete
  8. //இலக்கியத்துல விரசம்கிறது பிரம்மாஸ்திரம்தான்//
    மிகப்பொருத்தமான உவமை.

    கண்டிப்பா யோசிக்கவேண்டிய ஒரு கருத்து. இங்கு கல்கியையெல்லாம் ஒப்பிடவே முடியாது. அந்த பேலன்ஸ் எல்லாராலும் பண்ணிடமுடியறதில்ல. பெண்ணை வருணிப்பதிலும் கூட அத்தனை கண்ணியம் இருக்கும் கல்கியின் எழுத்தில்.

    வாசகர்கள் தரமான படைப்புகளை மட்டும் ஆதரித்தாலே இன்னபிறவும் ஒதுக்கப்பட்டுவிடும்.. எல்லாம் நம்ம கையிலதான்..

    ReplyDelete
  9. நல்ல விமர்சனம் பாலா. அரசூர் வம்சம் ரொம்ப நாளைக்கு முன்னால வாசிச்சேன். உங்க பதிவைப் படிச்சதும் அந்த புத்தகத்தின் நினைவு வந்தது. இரா.முருகனுக்கு மெயில் அடிச்சு கேட்டுட்டேன்...கதை பிடிச்சுது ஆனா ரொம்ப எராட்டிக்கா இருந்ததுன்னு. மாஜிக்கல் ரியலிசம் கதைகளை வாசிக்கறதுக்கு பொறுமை அதிகம் வேணும். வெகு சிலர்தான் அதை அற்புதமா எழுத்துல கொண்டுவந்திருக்காங்க. என் பொண்ணுக்கு ஹாரி பாட்டர் பிடிக்கும் ஆனா என்னால் அதை சுத்தமா பார்க்கவே முடியாது, ப்ளீஸ் என்னை விட்டுடும்மான்னு சொல்வேன். ஆனா அதை அளவோடும் அழகியலோடும் கையாண்டா nothing like that, நம்மளோட imagination சேர்ந்து முற்றிலும் புதிய தளத்திற்கும் வாசிப்பானுபவத்திற்கும் நம்மை அழைத்துச் செல்லும். Milan Kunderaவின் நாவல்கள் வாசிச்சுப் பாருங்க...பா.வெங்கடேசனின் கதைகளும் நல்லாயிருக்கும். இப்ப நான் வாசிச்ச மயில்வாகவன் மற்றும் கதைகள் அஜயன் பாலாவும் நல்லா எழுதியிருக்கார். புத்தகங்கள் நிறைய வாசிச்சு உங்களோட எழுத்து நடை மெருகேயிருக்குது பாலா. வாழ்த்துக்கள் தொடர்ந்து வாசியுங்கள், நிறைய எழுதுங்கள், சரியா?

    ReplyDelete
  10. உன் எழுத்து நடையில் ஒரு சிறு சறுக்கல் கண்டதாக உணர்கிறேன். நீ எடுத்துக்கொண்ட பாடுபொருளான புத்தகத்தின் விளைவாகக்கூட இருக்கலாம். இனிவரும் உன் படைப்புகளில் பழைய பாலா-வை எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  11. வலைச்சரத்தின் மூலம் உங்கள் பதிவைக் காண நேர்ந்தது மிக்க மகிழ்ச்சி. புத்தகங்களைப் பற்றி எழுதுவது மகிழ்ச்சியளிக்கிறது. தொடர்ந்து என்ழுதுங்கள். புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

    நன்றி,
    கிருஷ்ணப் பிரபு.

    ReplyDelete
  12. @ கிருஷ்ணப் பிரபு:
    உங்களைப் போன்றோரின் ஊக்கம்தான் என்னை மேலும் எழுதவைக்கிறது.. தொடர்ந்து எழுதுகிறேன்..

    வலைச்சரத்தில் தொடுப்பு கொடுத்திருப்பதை இப்போதுதான் காண்கிறேன்.. தகவல் தந்தமைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பரே.. :)

    ReplyDelete
  13. என்னுடைய விமர்சனத்தை விட தங்களுடையது மிக நன்றாக உள்ளது.

    ReplyDelete
  14. நன்றி நடராஜன். :)
    உங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும்..

    ReplyDelete