
எனக்கு ஒரு கனவுண்டு. .
அடிக்கடி வரும் கனவு,
அது ஒரு மந்திரவாசல் பற்றியது. .
என் வாழ்வின் அத்தனை பிரச்சனைகளுக்குமான தீர்வு
அந்த கதவின் மறுபுறம்
என் வருகையை எதிர்நோக்கிக்காத்திருந்தது
எல்லாமே இருந்தது அங்கு
மனம் கொண்ட மனைவி
நிறைவான பெற்றோர்
குதூகலமாய்க் குழந்தைகள் என
கண் நிறையும் விளம்பரக்குடும்பம்.
பிசிராந்தையார் மாதிரி நரைக்காத தலையுடன்
நூறாண்டுகள் வாழ்ந்து முடித்து,
சலித்துப்போகும் ஒரு நாளில்
சந்தோசமாய் செத்துப்போகலாம்.
விழித்திருக்கும் வினாடியெல்லாம்
விழி நோக, அந்தக் கதவினைத்தேடி
பித்தம்கொண்டலைந்தேன்
கனவின் வருகையும் வீரியமும்
நாளுக்குநாள் கூடி,
தேடிக்களைத்த ஒரு நாள்
கதவுகள் மட்டுமே சூழ்ந்த ஒரு அறையில்
தனித்து விடப்பட்டதை உணர்ந்தேன்
ஒரு கதவினைப்போல மற்றொன்றில்லை
எந்த கதவிலும் சாவித்துவாரங்களில்லை
எனக்கான அமிர்தம் எந்த கதவின் பின்?
எனதென நான் நினைத்த கதவினைத்
தொடவிழைந்த வினாடியே,
சுற்றியிருந்த கதவுகள் அனைத்தும்
சுழலத்தொடங்கின..
மெதுவாய்த்தொடங்கிய சுழற்சி
சிற்சில வினாடிகளில்
என்னை மையமாகக்கொண்ட
பேய்ச்சுழலாக உருக்கொண்டது. .
பார்வைப்புலம் முழுவதும்,
பிரிதத்தறிய முடியாத காட்சிச்சிதறல்..
கிறுகிறுத்த சிந்தையும்,
ஓடிக்களைத்த கால்களுமாய்,
சுழற்சி ஓயும் சமயம்
என் கதவென நான் தேர்ந்தெடுத்த ஒன்றினுள்
ஆவலாய்ப் பாய்ந்தேன். .
அது வரை தேடியலைந்த களைப்பில்
உடன் உறங்கிப்போனேன்..
கனவில் வந்தது ஒரு மந்திர வாசல்..
எனக்கும் ஒரு கனவுண்டு
உங்களைப் போலவே. . .
Welcome back :-)Indeed you slept for a long time ...
ReplyDeleteநல்லாருக்கு
ReplyDeleteWelcome Back!! Was waiting for a long time!! :)
ReplyDelete@Rejo . Thanks buddy.. :) Not very long I guess.. I can still type :P
ReplyDeleteThanks for pulling me in.. ;)
@ ஞானசேகர்: நன்றி அண்ணா.. :)
ReplyDelete@ Sara: thank you madam :)
Hey, Just now got the info.. I am going to be your dealmaster!! :) :)
ReplyDeleteamazing wallpaper, daemon tools
Good one Bala :)
ReplyDelete@ Sara:
ReplyDeleteby all means.. :)
Till expiry, the deal gotta be a secret. and you are responsible for that too. .
I see some junk links at the end of your comment. Is that intentional?? :P
@Seral: :) :)
ReplyDeleteநல்ல கவிதை நண்பா.
ReplyDeleteவிளம்பரங்களைக் கலாய்த்ததை மிகவும் ரசித்தேன்.
@bhupesh : :) tv la virumbi pakkara vishayangalla athuvum onnu.. :)
ReplyDelete