Monday, April 26, 2010

இருத்தல்




சோப்புக்குமிழ்கள் ஊதி விளையாடும்
சிறுபிள்ளையாய்
உன் பார்வைகளை விசிறிச்செல்கிறாய்

ஒவ்வொரு குமிழும் என் உலகையே
பிரதிபலித்தபடி யாருக்காகவுமில்லாமல்
மிதந்து கொண்டிருந்தது

விரும்பி விரும்பிச்சென்று
குமிழ்களை தொடவிரும்பும் சிறுவனாய்
இலக்கற்றலையும் உன் பார்வைப்புலத்தில்
பட்டுவிடத் தவிக்கிறேன் நான்

என்செய்வேன்,
விரல்தொடும் அக்கணமே குமிழுடைந்து
என் உலகமும் சிதறுகிறது

இன்னும் சிலமுறை குமிழ்களை
இழந்தபின்தான் புரிகிறது

என் உலகம் என் கைகளில் இருப்பதைவிட
உன் பார்வையில் இருப்பதனால்தான்
இன்னும் இருந்துகொண்டிருக்கிறது

8 comments:

  1. எங்கயோ போய்ட்டீங்க மார்கன்... :-) மின்னிதழ் எதுக்கும் அனுப்பலையா?

    ReplyDelete
  2. நன்றி சாணக்கியன்.. :)
    ம்ம்.. இல்லை. ஏனோ இம்முறை ஆர்வம் வரவில்லை..

    ReplyDelete
  3. // இன்னும் சிலமுறை குமிழ்களை
    இழந்தபின்தான் புரிகிறது

    என் உலகம் என் கைகளில் இருப்பதைவிட
    உன் பார்வையில் இருப்பதனால்தான்
    இன்னும் இருந்துகொண்டிருக்கிறது //

    அருமை :-) Welcome Back.

    ReplyDelete
  4. நன்றி நண்பா :)

    ReplyDelete
  5. //என் உலகம் என் கைகளில் இருப்பதைவிட
    உன் பார்வையில் இருப்பதனால்தான்
    இன்னும் இருந்துகொண்டிருக்கிறது//


    சூப்பர் கவிதைங்க.... வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. நன்றி குருபரன்.. :)

    ReplyDelete
  7. WoW!!!! ரொம்ப அழகான கவிதை மார்கன். ரொம்ப நாள் கழிச்சு உங்க தளத்துக்கு வந்தேன். நிறைய மாற்றங்கள்...அனைத்துக் கவிதைகளும் அருமை...

    ReplyDelete
  8. நன்றி உமா :)

    நீண்ண்ண்ட நாட்களாக இணையம் பக்கமே வரஇயலாமல் இருந்தேன்.. படிப்பதும் எழுதுவதும் வெகுவாகக் குறைந்திருந்தன.. இப்போதுதான் மீண்டும் கொஞ்சம் ஆர்வம் பிறந்திருக்கிறது.. தொடர்ந்த வாசிப்பிற்கும் நன்றி :)

    ReplyDelete