Thursday, May 11, 2006

அனுபவம் புதுமை ! ! !


சாயமேற்றப்படும் வெள்ளைத்துணியாய் நம் வாழ்வும் எத்தனையோ அனுபவங்களில் தோய்க்கப்படுகிறது. இந்த அனுபவங்கள் நம் அனைவருக்கும் ஒரே மாதிரி அமைந்து விடுவதில்லை.


ஒருவர் இருக்கும் இடத்தைப் பொருத்து ஒரே நிகழ்வு ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு அனுபவங்களைத் தருகிறது.சுமத்திராவில் ஏற்படும் நிலநடுக்கத்தைத் தொலைக்காட்சியில் பார்த்து உச்சு கொட்டுபவனும் அந்நிலநடுக்கத்தில் தன் உறவைத் தொலைத்தவனும் ஒரே மாதிரி உணர்வதில்லை.


அது போலத்தான், என் வாழ்வில், நானும் ஓர் அங்கமாக அல்லது பார்வையாளனாக அமைந்து என்னைப் பாதித்த சில அனுபவங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். மகிழ்ச்சியோ துக்கமோ ஆத்திரமோ ஆரவாரமோ, எதுவாயினும் என்னுள் தாக்கத்தை ஏற்படுத்திய அனுபவங்கள் இவை. நான் ரசித்தவை இவை. இவை உங்களில் ஏதேனும் பின்விளைவுகளை ஏற்படுத்தினால் மகிழ்வுடன் வரவேற்கிறேன்.


என் கருத்துக்களுடன் முரண்படுபவர்கள் தயங்காமல் விவாதிக்கலாம். பிழையேதுமிருப்பின் சுட்டிக்காட்ட வேண்டுகிறேன்