Monday, August 25, 2008

Blogging Friends Forever


வலையுலகில் நான் அவ்வளவாக Active கிடையாது. எப்போதாவது நேரம் கிடைக்கையில் எட்டிப் பார்ப்பதோடு சரி.
போனவாரம் அனுஜன்யா வந்து, ஒரு இன்ப அதிர்ச்சி காத்துகிட்டு இருக்கு வலைப்பூவை வந்து பார்க்கவும் சொன்னப்போ எனக்கே கொஞ்சம் குழப்பம்தான்.எனக்கே இன்பமா? அதிர்ச்சியா இருக்கே னு வந்து பாத்தா, நம்மளையும் நம்பி BFF ( Blogging friends Forever) அப்டீனு ஒரு அவார்ட் கொடுத்துட்டாங்க. கூடவே சிலபல கண்டிசன்களும்*. அதையெல்லாம் அப்புறம், அதுக்கு முன்னாடி நான் இதை 5 பேருக்கு கொடுக்கனும். அந்த அஞ்சு பேர்,

1. ரெஜோ
என் உயிர்த தோழன், ரெஜோ ஒரு தீவிர படைப்பாளி. அவனின் படைப்பு வேகம் அசாத்தியமானது. எழுதிக் குவித்தவை ஏராளம். இணையம் காணாமல், காணாமலே போனவையும் ஏராளம். பலமுறை கேட்டுக் கொண்டும் இன்னும் blogger பக்கம் வரவில்லை. அவனின் multiply.com பக்கம்தான் மேலே கொடுத்திருப்பது. இவன் திறமைகளுக்கு ஏற்ற அங்கீகாரம் இன்னும் கிடைக்கவில்லை என்பதே என் கருத்து. அற்புதமான அழகியல் கவிதைகள் இவனது. பலதரப்பட்ட உணர்வுகளைக் கிளறக்கூடியவை இவன் படைப்புகள்.

2. ஞானசேகர்
நான் அன்னாந்து பார்க்கும் ஒரு பதிவர். தேர்ந்த அறிவும், பரந்த உலக அனுபவம் செறிந்த படைப்புகள் இவரது. பெரும்பாலும், சோகத்தையும் அதன் வலியையும் வீரியம் குறையாமல் பதிந்து செல்பவை இவரது எழுத்துக்கள். இவரின் கவிதைகளை விட, சிறுகதைகளே எனது சாய்ஸ்.

3. ஜெகன்
சின்னச் சின்ன கவிதைகளில் பலப்பல உணர்வுகளாய், தன் எண்ணங்களைப் பாடும் கவிஞன். இவன் ஹைக்கூக்கள் என் சாய்ஸ்.

4. ராஜசேகர்
எனக்குப் பிடித்த ஆங்கிலப் பக்கம் இது. சிறு சிறு உரையாடல்களாய், நுண்ணிய உணர்வுகளைப் பதிவு செய்யும் இந்த உத்தி மிக அலாதியானது. மொழியின் லாவகங்களை நன்கு கையாளத்தெரிந்த எழுத்து நடை அழகு.
(அனுஜன்யா, தமிழ்ப்பதிவுகள் மட்டும்தான் போடனும்னு விதி ஏதும் இல்லையே..! :-) )

அப்பாடா, இது வரைக்கும் 4 நண்பர்களைப் போட்டாச்சு.. அடுத்ததா, என் வலைப்பக்கத்தின் சமீபத்திய விருந்தினர்,

5. சரவண குமார்..
வலைப்பக்த்தின் பெயரே, கவிதைகள் எனப்படும்.. பக்கம் முழுக்க திகட்டாத கவிதைகள் கொட்டிக்கிடக்கின்றன.இன்னும் முழுமையாகப் படிக்கவில்லை. படித்தசிலவும் ஒரு சோறாய் இனித்தன. கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட கவிதைசார்ந்த வலைப்பக்கங்களுக்கு சுட்டி கொடுத்துள்ளார். அனைத்து கவிதை சார்வலைப்பக்கங்களின் one stop 'கவிதை எனப்படும்'. கவிதைகளைத் தேடிப்படிப்போர் கண்டிப்பாய் காணவேண்டிய வலைப்பக்கம்.

என்னையும் மதித்து award கொடுத்த அனுஜன்யா இன்றிலிருந்து பாலாவுக்கு BFF கொடுத்த அனுஜன்யா அண்ணா என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படுவார். :) ( நான் இனிமே சுருக்கமா அண்ணா னு கூப்பிட்டுக்கறேன். அப்பாடா, இந்த link ம் கொடுத்தாச்சு) என்ன அண்ணா.. ஓகே வா?

* Conditions Apply:

1) நான் இந்த அவார்டை 5 பேருக்கு கொடுக்கணும்..(சத்தியமா இந்த விளையாட்ட நான் தொடங்கல..)
2)இந்த 5 பேருல 4 பேரு நம்ம ப்ளாகை தொடர்ந்து படிக்கிறவங்களா இருக்கணும்.. ஒருத்தர் நம்ம ப்ளாகை புதுசா படிக்க தொடங்கினவங்களா இருக்கணும்..(என் தளத்திற்கு எல்லாருமே புதுசுதான்.. இருந்தாலும் விதியின் விளையாட்டு ஹ்ம்ம். மன்னிக்கவும் விளையாட்டின் விதிகள் அப்படி)
3)இந்த அவார்ட் உங்களுக்கு யாரு கொடுத்தாங்களோ அவங்களுக்கு மறுபடியும் ஒரு link தரனும்

Tuesday, August 19, 2008

ஆவியும் நானும்


ரொம்ப நாட்களுக்குப் பிறகு நேற்றிரவு ரயில் பயணத்தில்தான் ஆனந்தவிகடனைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
தஞ்சை சந்திப்பு ஹிக்கின்பாதம்ஸில்,

" என்ன, விகடன் 15 ரூபாயா?"

என நான் ஷாக் குடுத்ததற்கு, கடைக்காரர் விட்ட லுக்கிலேயே புரிந்து விட்டது..

' ஆகா, கைப்புள்ள.. லேட் ரியாக் ஷன் குடுத்துட்ட போல.. சைலண்டா எஸ்கேப்' னு வாங்கிட்டு வந்து புரட்ட ஆரம்பிச்சேன்.

பலப்பல மாற்றங்கள் விகடனில். நானும் கல்லூரிக்காலத்தில் ஆ.வியின் அதி தீவிர வாசகனாக இருந்தவன்தான். ஆனால், பணிக்கு வந்தபின், அந்த ஆர்வம் கொஞ்சம் கொஞ்சமாக குன்றி குறைந்து, மங்கி மறைந்து விட்டது. அதன் பின் எப்போதாவது, வாய்ப்பு கிடைக்கையில் வாசிப்பதோடு சரி.

கொஞ்சம் பெரிய சைஸ், எல்லாபக்கமும் கலர்ஃபுல் என பளபளப்பாக இருந்தாலும், என் கவனத்தை ஈர்த்த முதல் விஷயம், எல்லா கட்டுரைகளிலும் தென்பட்ட தனிமனித அடையாளங்கள். கட்டுரை எழுதுபவரே நேரில் சொல்வது போன்ற நடை, அங்கங்கே சில இடைச்செருகல் கமெண்டுகளுடன், எல்லா கட்டுரைகளிலும் தென்பட்டது. இன்னும் சுருக்கமாகச் சொன்னால், ஒரு ப்ளாக் படிக்கற
ஃபீல்.

இரண்டாவது, பக்கத்துக்குப் பக்கம் பரிசுப் போட்டிகள். இதை எழுதி அனுப்புங்க அதை வெல்லுங்க வகையறா. வாசகப் பங்கேற்பை அதிகப்படுத்தும் இந்த முயற்சி வரவேற்கத்தக்கது. இது காலத்தின் ஒரு கட்டாயமாகக் கூட அமையலாம். இன்னும் கொஞ்ச நாட்களில், பல வாரஇதழ்கள் இதனைக் காப்பியடிக்கத் தொடங்குவது நிச்சயம். ஆனால், இதிலும், ஒரு எல்லையைக் கடந்தால், கல்லூரி ஆண்டு மலர் படிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் அபாயம் இருக்கிறது. அந்த எல்லையை சரியாக கவனித்துக் கொள்ள வேண்டியது சீனிவாசன் கையில்தான்.

அடுத்து, முழுக்க முழுக்க இளைஞர் பட்டாளத்தை குறிவைத்து களம் இறங்கியிருக்கிது ஆ.வி. ஆனால், இளைஞர்களைக் குறிவைக்கிறேன் பேர்வழி என்று, நடுப்பக்கத்தில் தொப்புள் காட்டும் நடிகையை போடாமல், கன்டென்ட் விஷயத்தில் கவனம் செலுத்தியிருப்பது பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

இது எல்லாத்துக்கும் மேல், கன்னடத்துப் பைங்கிளி சரோஜா தேவி பயன்படுத்திய சோப்பு டப்பா எதுக்காக தர்ராங்கனு தெரியல. ஒரு சில ஆண்டுகளுக்கு முன், குங்குமம் சகட்டு மேனிக்கு, 5 ரூபாய்க்கு வாங்குங்க 10 ரூபாய் மதிப்புள்ள பொருள் இலவசம்னு, இலவசம் காட்டியே விற்பனையில் முதலிடத்துக்கு வந்த போதும், கொஞ்சமும் நிதானம் தவறாமல், புத்தகத்தின் மதிப்பு அதன் உள்ளடக்கத்தில்தான் இருக்குன்னு நின்ன ஆ.வி யா இப்படி?

கல்லூரியில் ஒரு முறை, நண்பனுடன் ஒரு சவால். ஆ.வியில் ஒரு ஒற்றுப்பிழை கண்டு பிடிப்பதாக. அப்போதிருந்த என் இலக்கண அறிவிற்கு ஒரு வாரஇறுதி முழுவதும், அட்டைப்பக்கத்திலிருந்து, கடைசிப் பக்கம் வரை தேடியும், ஒன்றும் அகப்படவில்லை.

என்னதான் மாற்றங்கள் வந்தாலும், ஒரு இதழின் பெருமை அந்த தரத்தில்தான் இருக்கிறது. இனிமேலும், இருக்கும் என நம்புகிறேன்.