Wednesday, May 13, 2009

திருடர்கள் ஜாக்கிரதை

"டிக்.. டிக்.."

"யாரது?"

"திருடன்"

"என்ன வேணும்?"

"நகை வேணும்"

"என்ன நகை?"

"கலர் நகை"

"என்ன கலர்?"

"ம்ம்ம்ம்… செவப்பு கலர்…"

ஏழாம் வகுப்பு ஆ பிரிவில், மற்ற அரை டிராயர்களெல்லாம் அந்த செவப்பு கலரைத்தேடி ஓடிக்கொண்டிருக்க, எனக்குள் மட்டும் சில வினோதமான கேள்விகள் எழுந்தன..

உண்மையிலேயே திருடன் இந்த குணசேகரன் மாதிரிதான் குள்ளமாக வட்டமுகத்துடன், இருப்பானா? இதே மாதிரிதான் ஒவ்வொரு வீடாகச்சென்று தன் வருகையை பராக் சொல்வதுதான் அவன் வேலையா? இல்லையென்றால் அவன் எப்படி இருப்பான்? எங்கள் வீட்டுக்கு மட்டும் அவன் வருவதே இல்லையே ஏன்?

மேலும் படிக்க...

15 comments:

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நல்ல கதையோட்டம். சில வரிகள் விளங்கவில்லை. மீண்டும் படித்துப் பார்க்கிறேன்.

-ப்ரியமுடன்
சேரல்

Bee'morgan said...

நன்றி சேரா.. :)

Unknown said...

சீட்டியடித்தான்- meaning enna nu sollu.
இருவரும் கையில் ஒரு பூண்டு வைத்துக்கொள்ள வேண்டும்-intha line ethuku enaku theriyala.:-(

ஏதாவது ஒரு வகையில் குளத்தை கடக்கவேண்டும். வலதுகரையோடு போனல் மூங்கில் புதரைத்தாண்டி அந்த திட்டுக்குப் போகவேண்டும்.. அது கொஞ்சம் தூரம்.. அதைவிட, இடதுகரையோடு போனல், ஆலமரத்தை தாண்டி அந்த திட்டுக்குப் போய்விடலாம்.. ஆனால், குறுக்கே கோனார் வயலுக்கு செல்லும் ஓடை வரும்.. அது குளத்துடன் சேரும் இடம் சதுப்பு நிலம் மாதிரி முட்டிவரை சேறாகிக்கிடக்கும். - nalla imagine panna vaikku intha part:)

kathai rompa nalla irukku bala.interesting ah porathu.:)nice one :)

Unknown said...

உன்னிடம் எனக்கு மிகவும் பிடித்த விஷயங்களுள் ஒன்று. வாசகர்களை சுண்டி இழுத்து "மேலும் படிக்க..." வைக்கும் சுட்டி. பத்து வரிகளுக்கு மிகாமல் எழுதும் விஷயங்களுக்கு, (கதை, கட்டுரை) எழுதுபவர்கள் இந்த உத்தியை உன்னிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். கல்கியின் எழுத்துக்களை நூலின் நிறை, பருமன், நீளம், அகலம் மற்றும் பத்தியின் அளவு ஆகிய காரணிகளால் படிக்காமல் விட்டவர்கள் நானறிய நிறைய பேர் :) (பிறகு, "நீ சிவகாமியின் சபதம் கதை சொல்லு கேட்கிறோம்" என்று காது கொடுத்தவர்களும் இருக்கிறார்கள்!)

* வித்தியாசமான கரு (உண்மை அனுபவமா?).
* கதையின் ஓட்டம் ஒரு சிறுவனின் பார்வையில் விசயங்களை சொன்னாலும், சில இடங்களில் வருகின்ற வார்த்தை பிரயோகங்கள் சிறுவனுக்குள் மறைந்திருந்த எழுத்தாளரைக் காட்டிக்கொடுத்துவிடுகிறது.
*
"ஜெகனின் அப்பா ஒரு டிரைவர். அவனுக்கு அம்மா கிடையாது. தனியாகவே அனைத்து வேலைகளையும் செய்யுமளவுக்கு வளர்ந்திருந்தான் அவன்."
- இந்த வரிகள் அடுத்து வரும் பத்திகளுக்கான நியாயத்தை நிரூபிக்கத் திணிக்கப்பட்டு இருக்கின்றது. ஜெகனை முதன் முதலாய் அறிமுகப் படுத்தும் பொழுதே செருகி இருந்தால் இயல்பானதாய் இருக்கும்.

நிற்க.

ஒரு வாசகன் ஒரு கதையை முழுவதுமாக வாசித்தாலே (படிப்பது என்பது வேறு!) எழுத்தாளனுக்கு வெற்றி. நீ வென்றுவிட்டாய் :)

ரெஜோ said...

அருமையான கதையோட்டம் .. :-)
சுபி சொல்வதை முழுவதும் ஆமோதிக்கிறேன் ..

Bee'morgan said...

@ சத்யா:
நன்றி :)
சீட்டியடித்தல்னா, விசிலடிக்கிறது.
----
பூண்டெல்லாம் பால்ய பருவத்து நம்பிக்கைகளில் ஒன்று.. :)
----

Bee'morgan said...

@ Subi:
நன்றி அண்ணா.. :) உங்கர் பாராட்டுகளைக் கேட்கையில், உண்மையிலேயே சந்தோஷமாகவும், கூடவே கொஞ்சம் பயமாவும் இருக்கு.. தொடர்ந்த என் பயணத்திற்கு இதுதான் ஊன்றுகோல்.. :)

Bee'morgan said...

@ Subi:
கதை னு வந்தபின் ஆராயக்கூடாது.. கற்பனைதான்.. :) ஆனாலும், சில உண்மைகளும் உண்டு..
----
//
சிறுவனுக்குள் மறைந்திருந்த எழுத்தாளரைக் காட்டிக்கொடுத்துவிடுகிறது.
//
ம்ம்.. எனக்கும் கொஞ்சம் பட்டது.. இன்னும் நான் செல்லவேண்டிய தொலைவைக்காட்டுகிறது..

Bee'morgan said...

//அடுத்து வரும் பத்திகளுக்கான நியாயத்தை நிரூபிக்கத் திணிக்கப்பட்டு இருக்கின்றது.//

உண்மையான விமர்சனத்திற்கு மிக்க நன்றி அண்ணா.. என்னை மென்மேலும் பட்டைதீட்டும் உங்களின் கோணம். அடுத்தடுத்த படைப்புகளில் கருத்தில் கொள்கிறேன்..

Bee'morgan said...

@ரெஜோ:
:)
ரிப்பீட்டேய்..

Unknown said...

செவி மடுத்துக் கேட்பவர்களிடம் உள்ளது உள்ள படியே விமர்சிக்க ஆசை. அதுவும் எனது அறிவிற்கு எட்டிய தொலைவில் உனது கதை இருந்ததால் மேற்கூறிய பின்னூட்டம்..

ரெஜோவாசனின் சுஜாதா பாணி கதையைப் படித்தும் பின்னூட்டம் கொடுக்காததற்கு காரணம் இதுதான்.. "அருமையாக இருக்கிறது" என்பதைத் தவிர வேறு எதுவும் சொல்லத் தோன்றவில்லை.. அருமையாக இருக்கிறது என்பது அவனுக்கே தெரியுமாதலால் அதையும் சொல்லாமல் விட்டு விட்டேன் :)

சாணக்கியன் said...

தொழில்முறை கதை சொல்லியின் லாவகம் உனக்கு வந்துவிட்டிருக்கிறது பீமார்கன்! வாழ்த்துகள்!

பூண்டு இருக்குமிடத்திற்கு பாம்பு வராது என்பார்கள். அதனால்தான் என்று நினைத்தேன். அது என்ன பால்ய நம்பிக்கை?

Bee'morgan said...

நன்றி சாணக்கியன். :)
அதான் நீங்களே சொல்லிட்டீங்களே..! அதுதான்.. :D

Anand R said...

வெகு நாட்கள் கழித்து மீண்டும் உன் வலைத்தளத்திற்கு வந்திருக்கிறேன் (காரணம் உனக்கே தெரியும்). கண்ட முதல் கதையிலேயே எனை (மீண்டும்) கவர்ந்துவிட்டாய். பாராட்ட வேண்டிய வார்த்தைகளனைத்தும் சுபி-யின் விமர்சனத்திலிருந்து எடுத்துக்கொள். மீதம் வைக்காமல் எல்லா விமர்சனங்களையும் அவரே தந்துவிட்டார். என் பங்கிற்கு - பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்...

Bee'morgan said...

நன்றி அண்ணா.. :) நீங்கள் மீண்டும் வந்திருப்பதே எனக்கு மகிழ்ச்சி.. :)

வாழ்த்துகளுக்கும் நன்றி.. :)