Sunday, June 12, 2011

காலக்கணக்கு

பாதை தொலைத்த கருநிறப்பறவையொன்று

ஆழியின் இருள் வானில் நீந்துகிறது. . .

சிறகின் திராணி தீரும் மட்டும்

இருள் கிழித்த அப்பறவை,

செயலற்று நீர் சேரும் அந்த வினாடி

உதிரத்தொடங்குகிறது பறவையின்

இறகுகளில் படிந்திருந்த வானம். .

2 comments:

Vilva said...

பிறகு?

Bee'morgan said...

அவ்ளோதான்.. முடிஞ்சிடுச்சு.. :)