Sunday, February 11, 2007

எல்லோர்க்கும் பெய்யும் மழை

இன்று காலை தினத்தந்தியைப் பிரித்த போது, பத்தி பத்தியான கற்பழிப்பு கொலை, காவிரி போராட்டம், உலகக்கோப்பைகளுக்கு நடுவே கருத்தைக் கவர்ந்தது ஒரு செய்தி,
அது,
IAS அதிகாரிகளின் மனைவிகள் பலர் இணைந்து ஒரு சங்கம் அமைத்து, அதன் மூலம் 4 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைத்துள்ளதுதான்..

செய்தியைப் படிக்கும் போதே சந்தோஷமாக இருந்தது.
ஏதோ, கணவர் சம்பாதிக்கிறார்; நமக்கு வேண்டிய வசதி கிடைக்கிறது; இருக்கவே இருக்கிறது மெகா சீரியல் என்று இருந்து விடாமல், ஏதேனும் செய்யவேண்டும் என்று அவர்கள் கை கோர்த்திருப்பதே வரவேற்கத்தக்கது. அவர்களுக்கு ஒரு சல்யூட்...

ஆனால், இது வெறும் விளம்பரத்துக்காகவோ, பகட்டுக்காகவோ இல்லாமல் உண்மையான சேவைக்காக, மன நிறைவுக்காக அமையும் போது மட்டுமே இந்த மகிழ்ச்சி தொடரும்.... தொடரும் என நம்புவோம்...

அதே போன்று, கடைசிப்பக்கத்தில் மற்றொரு செய்தி.. கன்னியாகுமரி மாவட்டத்தின் புதிய கலெக்டராக சொர்ணா என்ற பெண் பொறுப்பேற்றிருக்கிறார.. அப்போ கூடிய விரைவில் கணவன்மார்களும் ஒரு சங்கம் அமைக்கணும்னு சொல்லுங்க....

3 comments:

Anand R said...

Dhinamum idhupola suvaiyaana thagavalgal kidaikkumaa?

Anand R said...
This comment has been removed by the author.
Bee'morgan said...

நிச்சயம் என்னால் முடிந்த வரை முயல்கிறேன்..