Tuesday, May 12, 2009

கவிதைகள் மறுவாழ்வு மையம்


நீ அலட்சியமாய் தூக்கியெறிந்த
காகிதக் கோப்பையிலிருந்து
மனமுடைந்த கவிதைகள் சில
குதித்தோடிப் போயின
தற்கொலைக்கு..
நான்தான் சமாதானம் செய்து
அழைத்துவந்திருக்கிறேன்
நீ வருவாய் என..

கைவிடப்பட்ட கவிதைகள்
சங்கம் ஒன்று அமைக்குமுன்
வந்துவிடேன் சீக்கிரம்..!

8 comments:

bhupesh said...

அவள் இதழ் பட்டதுமே மோட்சமடைந்த கோப்பைகள் தானே அவை!

ரொம்ப உருகிருக்கப்பா....

Bee'morgan said...

:)

Abbasin Kirukkalkal said...

கோப்பையில மிச்சம் வச்ச தண்ணி
இல்ல காபி ,அவளோட ஹைர்பின்..
இத சேகரிச்சு வச்சு காதல் பண்ணினாங்க
இத வச்சு கவிதை எழுதவும் ஆரம்பிச்சிட்டீங்க
திருந்துங்கப்பா

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

:)

bhupesh said...

பால உருகன்?!

ரெஜோ said...

// இதுக்கு நீ இன்னொன்னு பண்ணிருக்கலாம் .. அவ சாப்ட்டு போனால்ல எச்ச இலை .. அது கழுவி frame பண்ணி மட்டிருந்தா .. அவனனவன் காதலிக்கு செலை வைப்பான் .. நீ எலை வச்சா மாதிரி இருந்திருக்கும் .. :-) :-) //

ரெஜோ said...

அழகான கவிதை :-)

ரெஜோ said...

// பால உருகன்?! //

ரொம்ப ரசிச்சேன் :-)