Wednesday, July 22, 2009

அலைக்குறிப்புகள் - I

ஏறக்குறைய ஒரு வருடத்திற்குப் பிறகு மீண்டும் எர்ணாகுளம் செல்லும் வாய்ப்பு கடந்த வாரம் அமைந்தது. கடந்த முறை எர்ணாகுளத்திலும் கொச்சியிலும் அதிகமாக நேரம் செலவழி்க்க முடியாமல் போனதால் இம்முறை நிச்சயம் கொச்சின் செல்ல வேண்டும் என்று முடிவு செய்துகொண்டேன்.

உள் நுழைவதற்கு முன் ஒரு கொசுறு தகவல். எர்ணாகுளமும் கொச்சியும் இருவெவ்வேறு ஊர்களல்ல. இவை இரண்டுமே ஒருங்கிணைந்த கொச்சி மாநகராட்சியின் பகுதிகள். 1967ல் தனித்தனியாக இருந்த எர்ணாகுளம் கொச்சி மற்றும் மட்டன்சேரி நகராட்சிகள் இணைந்து கொச்சின் மாநகராட்சி உருவானது. எர்ணாகுளம் நவநாகரீகத்தில் திளைத்திருக்கும் நவீன பட்டணம். கொச்சி (அ) ஃபோர்ட் கொச்சி இன்னும் நூற்றாண்டுகளுக்குப் பின்னால் தான் சிறப்புடன் வாழ்ந்த கால்த்தை அசைபோட்டுக்கொண்டிருக்கும் பழமையின் பட்டணம். இப்படி இரு முரண்பட்ட நகரங்களை ஒரே இடத்தி்ல் காண்பதே சிறப்புதானே..

மேலும் படிக்க...

8 comments:

அ.மு.செய்யது said...

//மொத்த ஊரையும் தண்ணீரில் நனைத்து பிழியாமல் கொடியில் போட்ட மாதிரி ஈரம் அப்பியிருந்தது.//

ரசித்தேன் பாலா...

அழகாக பதிவு செய்திருக்கிறீர்கள்...தொடர்ந்து எழுதுங்கள்....

அமிர்தவர்ஷினி அம்மா said...

மொத்த ஊரையும் தண்ணீரில் நனைத்து பிழியாமல் கொடியில் போட்ட மாதிரி ஈரம் அப்பியிருந்தது //

ஆரவாரமில்லாத அழகான குறிப்புகள்

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

என்னப்பா இது? ஆரம்பிக்கிறதுக்குள்ள முடிஞ்சுப்போச்சு......

சீக்கிரம் வா :)

-ப்ரியமுடன்
சேரல்

Bee'morgan said...

@அமித்து அம்மா & செய்யது:
ஆகா.. பாத்தீங்களா.. நீ்ங்க ரெண்டு பேருமே ஒரே வரியை எடுத்துக்காட்டியிருக்கீங்க.. :)
நானும் ரொம்பவும் ரசித்து எழுதிய வரி அது..
வாழ்த்துக்கும் மிக்க நன்றி.. தொடர்ந்து பதிய முயல்கிறேன்.. :)

Bee'morgan said...

@ சேரல்:
இது ஒரு வகையில் நானே எனக்கு ஏற்படுத்திக்கொள்ளும் commitment சேரா.. அன்னைக்கு இவ்வளவுதான் டைப்ப முடிஞ்சது.. ஒரு வேளை இதனைப் பதியாமல் நான் தள்ளிப்போட்டால், மொத்தமாக அலுப்புத் தட்டி பதியாமலே விட்டுவிடவும் கூடும்ங்கறதால, இப்படி.. கவலைப்படாதீங்க.. கூடிய சீக்கிரம் திரும்பவும் வர்ரேன்.. :)

Sandy said...

Hey bala.. one doubt da.. I'm following your blog.. yet why is my profile not visible in ur followers list ?

சாணக்கியன் said...

குதலைக் குறிப்புகள் மாதிரி அலைக்குறிப்புகளா? ஆரம்பம் அமர்க்களமா இருக்கு. பதிவைப்போலவே ஆரவாரமில்லாத அமைதியான புகைப்படங்கள்!

Bee'morgan said...

நன்றி சாணக்கியன் :)