Friday, January 19, 2007

Lord of the rings

Lord of the rings உலகத்தினுள் நுழையும் முன் Sunday Times பத்திரிக்கையிலிருந்து ஒரு மேற்கோள் ::
“The English speaking world is divided into those who have read The Lord of the rings and The Hobbit and those who are going to read them.”

ஆம். இது உண்மைதான்.











தன் கற்பனையில் ஒரு புது உலகத்தையே (Middle Earth) சிருஷ்டித்திருக்கிறார் ஆசிரியர். Middle Earth-ன் வரலாற்றில் இரண்டாடம் யுகமான Ring Age ல் சுற்றிச் சுழலுகிறது கதை.

வழக்கமான புராணக்கதைதான். ஒரு தீய சக்தி உலகத்தையே ஆட்கொள்ள நினைக்கிறது. அதனை எதிர்த்துப் போராடும் ஒரு குழுவின் கதை.

ஆனால் இடையில் அந்த Ring concept ஆசிரியருக்குத் தோன்றியது ஒரு அழகான ஆச்சரியம் தான். அதாவது Middle earthன் பூர்வ குடி மக்களான Elfகள் தங்களின் நண்பர்களுக்கு ஒருவித Ring ஐ பரிசளிக்கின்றனர். 3 rings to the elven kings, 7 for the dwarf lords, 9 for the mortal man என பட்டியல் நீளுகிறது. இதில் நடுவில் புகும் Dark lord Sauron, Ring ஐ எப்படி செய்வதென தந்திரமாகத் தெரிந்து கொண்டு தனக்கென ஒன்றை உருவாக்கிக் கொள்கிறான். இந்த புதிய Ring ஆனது மற்ற அனைத்தையும் விட சக்தி வாய்ந்ததாகவும் மற்ற அனைத்து Ring களையும் கட்டுப்படுத்துமாறும் உருவாக்குகிறான்.

அந்த Ring ன் சக்தியைக் கொண்டு அண்டை நாடுகளைக் கைப்பற்ற முனையும் போது King Isildur of Gondor அவனது விரலை வெட்டி விடுகிறார். இப்போது அந்த Ring Isildur இடம் வருகிறது.

ஆனால் Orcs என அழைக்கப்படும் Sauron ன் அரைமனிதப் படைகள் Isildur-ஐக் கொன்று விட Ring யாருக்கும் கிடைக்காமல் ஒரு ஆற்றுப்படுகையில் புதைந்து போகிறது.

பலகாலங்களுக்குப் பின் எதேச்சையாக மீன் பிடிக்கச்செல்லும் Smeagol கையில் அது அகப்பட, பின் Smeagol இடம் இருந்து Bilbo Baggins இடம் வருகிறது.

பல ஆண்டுகளுக்கு முன் போரில் தோற்கடிக்கப் பட்ட Sauron (of Mordor) மீண்டும் எழுகிறான்; ஒரு பெரும்படை திரட்டுகிறான்.

உலகை வெல்லும் அவனது ஆசைக்கு தற்போது தேவைப்படுவது, தொலைந்து போன அந்த ஒரு Ring தான். இந்நிலையில் Sauron ஐ தோற்கடிக்க ஒரே வழி அந்த Ring ஐ அழிப்பதுதான். இங்கு வரும் அடுத்த கட்டுப்பாடு, அந்த Ring ஐ Mordor ல்( Sauron ன் தேசம்) உள்ள Cracks of mound doom ல் மட்டுமே அழிக்க முடியும். அங்குதான் அந்த Ring செய்யப்பட்டது.

இந்தப் பணியை மேற்கொள்ள The fellowship of the ring அமைக்கப்படுகிறது. அவர்கள் உயிரைப் பணயம் வைத்து, பல்வேறு இடையூறுகளைத் தாண்டி, Ring ஐ அழித்து எப்படி வெற்றி பெறுகின்றனர் என்பதை நீட்டி முழக்கிச் சொல்லும் கதைதான் LOTR.

கதை முழுக்க பல ஆச்சரியங்கள் கொட்டிக்கிடக்கின்றன. குறிப்பாக Hobbits வாழும் அந்த Shire நமக்கும் இப்படி ஓரிடம் கிடைக்காதா என ஏங்க வைக்கிறது. அதன் பின் வரும் நடக்கும் மரங்கள் (Ents), the towers, forces of the dead, white tree, Gandalf என பற்பல. இவை எல்லாவற்றிற்கும் மேலாக Smeagol ன் பாத்திரப்படைப்பு நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

தொடரும்...

3 comments:

Anonymous said...

next?

Anonymous said...

Thanks for writing this.

Bee'morgan said...

வருகைக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி தோழரே..!