Thursday, February 07, 2008

எழுதியதில் பிடித்தது - சர்வேசனுக்காக..


எனக்கும் இதுவரை அழைப்பு வரவில்லை.. ஆனாலும், இது தெய்வக் குத்தமாகாதுன்னு சர்வேசன் சொன்னதால நானும் ஒரு பதிவு போட்டுரலாம்னு முடிவு பண்ணிட்டேன்.. :-) :-)

அப்படி இப்படின்னு மொத்தமா 22 பதிவு போட்டாச்சு போன வருஷத்துல. எனக்கு எழுதியதில் பிடித்ததுன்னா அது வாக்குமூலம் தான். இது நானா எழுதினதுங்கறத விட, ஒரு நிர்ப்பந்தத்தில் எழுதிய கதை இது.
எவ்வளவு நாளானாலும் மறக்கமுடியாத கல்லூரியின் கடைசி செமஸ்டர். திருச்சி REC ன் பாரம்பரியம் மிக்க nittfest போட்டி. துறை வாரியாக போட்டிகள் நடக்கும். ஒவ்வொரு துறையின் தன்மானப் பிரச்சனை என்பதால் போட்டிகள் சற்று பலமாகவே இருக்கும். அதில் அறிவிக்கப்பட்ட கதைப்போட்டிகாக எழுதியதுதான் இது.

கதைப்போட்டிக்கு தலைப்புக்குப் பதிலாக மூன்று விஷயங்கள் கொடுக்கப்பட்டன.
ஒரு உவமை, ஒரு சத்தம், ஒரு புகைப்படம். இம்மூன்றையும் கதையில் வைத்து எழுதவேண்டும் என்பதே போட்டி.
ஏறக்குறைய ஒரு வார காலம் அவகாசம் வழங்கிய பின்னும் எதுவுமே தோன்றாமல், கடைசி நாளன்று இலக்கின்றி எழுதத் தொடங்கிய கதை, முதல் பரிசு வாங்கிய போது ஆச்சரியம்தான் மிச்சம்.
இன்றும் என்னால் நம்பமுடியவில்லை.. முதல் பத்தி எழுதும் போது அடுத்து என்ன எழுதப்போகிறேன் என்பதே எனக்குத் தெரியாது. கதையை எப்படி முடிக்கப் போகிறேன் என்பது கூட தெரியாமல் எழுதி முடித்தேன். எப்படியோ, இது எல்லாம் சேர்ந்து வாக்குமூலம் என் விருப்பப் பதிவாயிடுச்சு.


அப்படியே, நம்ப பங்குக்கு இவங்கள கூப்பிட்டுருக்கேன்..
1) சேரல்
2) ஞானசேகர்
3) வில்வகுமார்
4) வீரபாகு
5) ஜகன்

No comments: